Tuesday, March 27, 2012

லண்டன் ஒலிம்பிக்கில் சயனைட் மூலம் வீரர்கள், பார்வையாளரைக் கொல்ல அல்கய்தா திட்டம்!

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வரும் ஜூலை 27ம் தேதி ஆரம்பமாகவுள்ள ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளின் போது வீரர்கள் பார்வையாளர்களை சயனைடு மூலம் கொல்ல அல் கய்தா தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக தி சன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. லண்டனில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளன.
ஏற்கனவே தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் இங்கிலாந்து பாதுகாப்புப் படையினர் போலீசார் கமாண்டோக்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிக்கு வரும் வீரர்கள் பார்வையாளர்களை சயனைடு மூலம் கொல்ல அல் கய்தா தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக தி சன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது-

சயனைடு மூலம் எப்படி தாக்குதல் நடத்துவது என்பது குறித்து விரிவான திட்டத்தை 2 தீவிரவாதிகள் வெப்சைட்டுகளில் வெளியிட்டுள்ளனர். அவர்கள் 2 பேரும் சமீபத்தில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள். கைகளுக்கு தடவிக் கொள்ளும் ஸ்கின் கிரீம்களில் சயனைடை கலந்து மற்றவர்களுக்கு வழங்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். கிரீம்களில் சயனைடு கலக்கும் போது கைகளில் கிளவுஸ் அணிந்து கொள்ளுங்கள் என்று சக தீவிரவாதிகளுக்கு யோசனை தெரிவித்துள்ளனர்.

தோல் மூலம் கிரீமில் உள்ள சயனைடு உடலுக்குள் செல்லும் அதன்மூலம் பலர் இறப்பார்கள் என்று அபு ஹிஜா அன்சாரி என்ற தீவிரவாதி திட்டம் தீட்டி கொடுத்துள்ளார். கடைசியில் இந்த தாக்குதல் திட்டம் மிக சிறந்தது. இதை கச்சிதமாக செய்து முடிக்க வேண்டும் என்று அரபு மொழியில் கூறியுள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls