Tuesday, June 12, 2012

துளிர்விடும் வீதி நாடகம்...... காலத்தின் கட்டாயமா...?

கால வோட்டத்தில் கலைகளும் சடங்குகளும் மழுங்கடிக்கப்பட்டு இன்றைய இளம் சமுதாயத்தின் மனதில் மேவி நிற்பவை திரைப்படங்களே. கட்டாயம் என்ற மகுடத்தில் திருவிழாக்களும் சடங்கு முறைகளும் வழமை தவறாது பேணப்பட்டு வருகின்றன. “மானாட மயிலாட”, “சுப்பர் சிங்கர்”; போன்ற தொலைக்காட்சித் தொடர்  நிகழ்வுகளும்; ஒவ்வொருவரின் இரசனைக்கு தீனி போடுவதாய்  அமைந்து விடுகின்றது.
ஊர்த்; திருவிழாக்களில் நடைபெறும் நாடகங்கள் கூத்துக்கள் வில்லுப்பாட்டுக்கள் விடயங்களை அலசும் சுவாரஸ்யமான பட்டிமன்றங்கள் மனித மனங்களில் இடம் பிடித்துவிடுகின்றன தனித்துவம் மிக்க கூத்துக்களும் காலமாற்றத்தினால் காணாமல் போய்விட்டன.

சமுதாயத்தின் மாற்றமும், தேவையும் அதிகரித்து கூத்து ஆடியவர்கள் தொடர்ந்து ஆட முடியாமல் ஒரு நழுவல் நிலையை ஏற்படுத்தி விட்டன. மக்களோடு நேரடியாக உறவாடும் கலையாக நாடகங்கள் அமைகின்றன இன்றைய நவீன சினிமா உலகம் தோன்ற முன்னர் மக்களின் பொழுது போக்கு விடயமாக நாடகங்கள் செயற்பட்டன. அதனை விட சம கால அரசியல் விடயங்கள் சமூக விடயங்களை எடுத்துக் கூறுவதற்கு நாடகத்தை ஒரு மூலமாக பயன்படுத்தினர்.
தொலைக்காட்சி, இணையத்தின் வருகை அதிகரித்துள்ள போதும் நாடகத்திற்கு இருக்கின்ற மதிப்பு குறைவதே இல்லை. ஏதோ ஒரு விடயத்தை சொல்லுகி;ன்றதாலும் இளவட்டத்தினரின் மனதில் அவை இடம்பிடித்து நிற்கின்றன.  தொலைக்காட்சி தொடர,; வேலைப்பளு, இணையம் போன்றன குறுகிய வட்டத்துக்குள் நிற்கின்ற இன்றைய தலைமுறைக்கு  நாடகங்கள் கேளிக்கைகள் போன்றன விடுதலையை கொடுக்கின்றன.   
1980 ஆண்டு காலப்பகுதியில் ஈழத்தில் தழிழர்களின் அரசியல் பிரச்சினைகளையும் சமூகப்பிரச்சினைகளையும் மக்களிடம் கொண்டு சென்று சேர்ப்பவையாக வீதி நாடகங்கள் செயற்பட்டன. தழிழர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு விட்டன தழிழர்கள் உரிமைக்காக போராட வேண்டும் என்பதையும் இந்த நாடகங்கள் பிரதான கருப்பொருளாக கொண்டிருந்தன.
மக்கள் கூடுகின்ற ஒரு பொது இடத்தில் ஆற்றுகை இடம்பெறும.; ஆலயமுன்றல் சந்தைப்பகுதி பஸ் தரிப்பிடம் போன்ற இடங்களில் நாடகங்கள் அரங்கேறும.; இன்றைய கால நிகழ்வுகளை போல ஒரு வாரத்திற்கு முன்னரே பத்திரிகையில் போடப்பட்டு ஆற்றுகை செய்யப்படுவதில்லை. இன்று ஆலய முன்றலில் இரவு பத்துமணிக்கு நாடகம் இடம்பெறும். அனைவரும் ஒன்றுகூடுங்கள் என்று ஒரு அறிவிப்பு வழங்கப்படும.; இன்று விஜய் படம் ரீலிஸ் என்றால் எப்படி கூட்டம் கூடுமோ அப்படி தான் அன்றைய காலத்தில் மக்கள் நிறைந்திருப்பார்கள்;. பாட்டன் பாட்டி தொடக்கம் குஞ்சு குருமன் வரை எல்லாம் இந்த கூட்டத்தில் இருக்கும். அரங்கு என்று ஒன்று இருக்காது. வாகனத்தில் சில பொருட்களை காட்சிப்படுத்தி நடுவில் நின்று நடிப்பார்கள.; நடிகர்கள் தம்மை வேறுபடுத்திக் காட்டுவதற்காக தலையில் துண்டு கட்டியிருப்பார்கள். பார்வையாளரை தன்வசப்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும். இளசுகள் எல்லாம் மரங்களின் மேல் ஏறி நின்று  நாடகத்தை பார்ப்பார்கள். எல்லோர் மனதிலும் பதியக்கூடிய வகையில் எளிமையாக சொல் நடையில் சிறப்பாக கருத்துக்களை கூறுவார்கள். இன்று பாடல்கலை முனுமுனுத்து செல்வதைப்போல இந்த நாடக வசனங்கள் எல்லோர் வாயிலும் அசைபோடும்.  நடிகர்கள் மிக அவதானமாக நடிப்பை வெளிப்படுத்துவார்கள். பார்வையாளர்கள் மிக நெருக்கமாக நிற்பதால் அவர்கள் விடும் சிறிய தவறும் தெளிவாகத் தெரியும். உணர்வுகளும் அசைவுகளும் துல்லியமாகவும் தெளிவாகவும் இருக்கும்.
1989 காலப்பகுதியிலேயே விடுதலைப்புலிகள் தம் கொள்கைகளையும் கருத்துக்களையும் பரப்புவதற்கு வீதி நாடகங்களை அதிகம் பயன்படுத்தினார்கள். இந்த காலத்திலேயே இந் நாடகம் அதிகம் வளர்ச்சி கண்டது. இரவுப் பொழுதுகளில் ஊர் முன்றலில் கோயில் வீதிகளில் அரங்கேற்றுவார்கள். நாடகத்தை பார்த்த சில இளவட்டத்தினர் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார்கள். தழிழர்களின் பிரச்சினைகளும் கொடுமைகளும் அதிகளவு பேசபப்பட்டது. இந்த நாடகத்தில் பேசப்பட்ட பாடல் வரிகள் மக்கள் மனதில் நின்று நிலைப்பவையாக இருந்தன. தொலைக்காட்சிகளோ வேறு பொழுபோக்கு விடயங்களோ இல்லாத காரத்தினால் மக்கள் எப்போது நாடகம் போடுவார்கள் எங்கு போடுவார்கள் என்று எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்திருப்பார்கள். அரசியலின் உன்மைத்தன்மையும் பிரச்சினைகளும் பாமர மக்கள் மத்தியில் அதிகளவு சென்றடையவில்லை. இதன் தன்மையை விளங்கி வீதி நாடகம் மக்கள் கூடுகின்ற இடங்களுக்கு சென்றது. அரசியலின் உண்;மைத்தன்மையையும் சமகாலப்பிரச்சினைகளையும் எடுத்துக்கூறியது.
  மாயமான,; கசிப்பு, விடுதலைக்காளி போன்ற வீதி  நாடகங்கள் சம காலப்பிரச்சினைகளை எடுத்துக்கூறின. இந்த நாடகங்கள் உணர்வுகளை தூண்டி சமூக மாற்றத்தை ஏற்படுத்தின.  இதனால் இந் நாடகங்கள ஈழத்தில் பிரபல்யம்   பெற்றன. வீறு கொண்டு எழுந்து வெற்றி கண்ட வீதி நாடகங்கள்; 2000 காலப் பகுதியில் குறைவடையத் தொடங்கின. பின் யாருக்கும் தெரியாத ஒரு கலைவடிவமாக சென்று விட்டது. பிரச்சினைகளையும் சமகால அரசியல் விடயங்களையும் பாமர மக்களிற்கு எடுத்து செல்லும் சிறந்த ஒரு ஊடகம் இது.
காலமாற்றமும் காலத்தின் கட்டாயமும் எமது கலைகள் அழிவடைந்து வருகின்றது.
தற்போது யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் சமூகப்பிரச்சினைகளும் அதிகரித்து வருகின்றன. இந்த பிரச்சினைகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்று சேர்ப்பதற்கும் விழிப்புணர்வை  ஏற்படுத்துவதற்கும் ஊடகங்கள் செயற்பட்டு வருகின்றன அந்த வகையில் இந்த வீதி நாடகங்கள் தம் பணியை செய்கின்றன. பிரச்சினைக்குரிய காரணத்தினையும் விளைவுகளையும் எடுத்துக் கூறுகின்றன.
சமுதாயத்தின் பிரச்சினைகளும் அரசியலின் உன்மைத்தன்மையும் தற்காலத்தில் எடுத்து கூறப்படவேண்டிய கட்டாயம் நிலவுகின்றது. பிரச்சினைக்கான காரணத்தையும் அதிலிருந்து வெளியேறுவதற்கான வழிகளையும் மக்களிற்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
காலத்தின் கட்டாயம் வீதி நாடகங்கள் சில காலம் மறைந்து போயிருந்தாலும் தற்போது காலத்தின் தேவை கருதி இந் நாடகங்கள் துளிர் விடத் தொடங்கியுள்ளது.
சமகாலத்தில் நிலவுகின்ற பிரச்சினைகள் அரசியல் நிலவரங்களின் உன்மைத்தன்மைகள் பாமர மக்களை சென்றடைய வேண்டும். பிரச்சினைகளுக்குரிய காரணங்கள் தெளிவாக சென்றடைந்தால் மட்டுமே பிரச்சினைகளிலிருந்து வெளிவரமுடியும்.

Monday, April 30, 2012

யாழ் மக்களின் மனங்களுக்கு கொண்டாட்டங்கள் தீணி போடுமா?

நிகழ்வுகளும் சடங்குகளும் ஏன் வருகின்றன என்ற மன விரக்த்தியோடு வாழும் யாழ் மக்களின் மனங்களுக்கு விருந்தளிக்க பொங்கலிற்கு வருடப்பிறப்பிற்கு அரங்கேற்றப்படும் கலை நிகழ்வுகளும் பாரம்பரிய விளையாட்டுக்களும் தீணி போடுவதாய் அமைகின்றனவா என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது.
நிம்மதியற்ற மனங்களும் தொடர் இழப்புக்களையும் மரணப்பீதியையும் கடந்து வந்த மக்களின் மனங்கள் கொண்டாட்டங்களை சம்பிரதாயத்தின் அங்கமாக பார்க்கின்றனர். நாள் பார்த்து ஆரவாரத்துடன் அரங்கேற்றப்படும் கொண்டாட்ட  நிகழ்வுகள் யாழை திருவிழாக்கோலம் போல அலங்கரித்திருக்கின்றன. இந்த கொண்டாட்டங்கள் ஏன் நடத்தப்படுகின்றன எதற்காக நடத்தப்படுகின்றன? என்ன எதிர்பார்ப்புடன் நடத்தப்படுகின்றன யார் நடத்துகின்றார்கள் என்ற விடைதெரியாத கேள்விகள் பல.

பசித்தோடிய வயிறுகளை மரணக்குழிகளில் வீழ்ந்து கொண்டிருந்த கணங்கைளை முடிவேயற்றிருந்த சாவோலத்தை பார்த்துக்கொண்டிருந்த 
போதே வீழ்ந்து கொண்டிருந்த உயிர்களை நம்பிக்கை ஊட்டுவதற்கு எந்த நிலையுமே இல்லாத கையறு நிலையை அழிக்க முடியாத அந்த நினைவுகளை
 எப்படி மறப்பது ஓடிக்கொண்டிருந்த செங்குருதியில் வெற்றிக்கழிப்பை கொண்டாடியதை யாரும் மறந்து விடமாட்டார்கள். மரணத்தை ஒரு பொறியாக பசியை சுருக்கு கயிறாக பயன்படுத்திய தந்தோரபாயத்தை எந்த மக்களும் மறந்து விடமாட்டரார்கள். இந்த கொடிய நிகழ்வுகளை அனுபவித்த மக்களுக்கு கொண்டாட்டங்கள் வெறும் கண்துடைப்பே.

நடத்தப்படும் களியாட்டத்திற்கும் விளையாட்டிற்கும் அன்றைய கோவில் திருவிழாக்கள் தான் நினைவுக்கு வரும் கூட்டம் பட்டைய கிளப்பும். கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள வருபவர்கள் இந்த யுத்தத்தை அனுபவிக்காதவர்களா? எல்லாம் கட்டாயம் தான். நாங்கள் நடத்துகின்றோம் நீங்கள் கலந்து கொள்ளுங்கள் என்று திட்டமிட்டு திணிக்கப்படும் சர்வாதிகாரம். அரசின் கையில் கிடைத்த கைப்பொம்மைகளாக சொல் பேச்சு கெட்ட பிள்ளை பொல நடத்தப்படுகின்றார்கள். இந்த கொண்டாட்டங்கள் யாரை திருப்திப்படுத்த நடத்தப்படுகின்றன? மக்களின் மனதில் இருக்கும் ஈறாத்துயருக்கு இந்த கொண்டாட்டங்கள் தீணி போடுமா? அல்லது மக்களின் மன நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை அறியவா? இல்லை அரசியல் நாடகமா என்று எண்ணத் தோன்றுகின்றது.

திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்ட இந்த மண்ணில் அடக்குமுறையினை ஜனநாயகத்தின் திறவுகோல்களாக காட்டும் அற்புத நிகழ்வு. ஒரு அரசு தனது குடிமக்களின் குருதியின் மீது வெற்றிதுழக்கம் செய்ததை இந்த உலகத்தின் அத்தனை கண்களும் அன்று பார்த்துக்கொண்டிருந்தது. இன்று எல்லாரும் ஒற்றுமையாகவும் சந்தோசமாகவும் வாழ்கின்றோம் என்பதை எடுத்துக்காட்டுவதே இந்த கொண்டாட்டங்களின் நோக்கம்.

மண்முட்டைகளால் அமைக்கப்பட்ட காவலரண்களும் மக்களிற்று பாதுகாப்பு கொடுப்பதற்காய் அரசின் பாதுகாப்பு படைகளுமே விழாக் கொண்டாட்டத்தின் முக்கிய புள்ளிகள். வானுயர்ந்த பாட்டுக்ளும் கலை நடனங்களும் ஆட்டம் பாட்டம் என்று ஒற்றுமையுடன் வாழும் சமுதாயம் என்று வெளியுலகிற்கு காட்டும் நிகழ்வில் மீண்டும் பலிகளாய் போகின்றது ஒரு சமுதாயம். 

எல்லாமே ஓய்ந்து விட்டன குண்டுமழையின் பீதியும் சுடுகலனின் வேட்டுச்சத்தங்களும் அதிரவைக்கும் துப்பாக்கிச்சத்தமும் இப்போது   மக்களின் காதுகளுக்கு எட்டவி்ல்லை. நடந்த போர் ஓய்ந்து விட்டது. ஆனால் புதிய போர் ஆரம்பித்து விட்டது. கொலையும் கொள்ளையும்  கற்பளிப்பும் நிம்மதியான தூக்கத்தை கலைத்து விட்டன.

மரணத்தையும் விட மரணபயம் கொடியது. அதையும் விடக்கொடியது மரணத்தை விட அஞ்சுவோரை தேற்றுவது. அதையும் விடக்கொடியது 
மரணத்தினால் அலைக்களிக்கப்பட்ட நாட்களை கடப்பது தம் மீதும் குண்டு விழாதா என்று மரணத்திற்காய் ஏங்கியவர்களின் மனதை ஆற்றுவதற்கு விரும்புகின்றார்கள். அடிமேல் விழும் அடியை தடுப்பதற்கோ அதற்கு அணை போட யாரும் இல்லை . ஆறுதல் படுத்த முயற்சிக்கின்றார்கள். இவர்கள். 
கடந்த காலங்களில் பெருவிழாக்கள் என்றால் ஊரே விழாக்கோளம் தான் லீவு போட்டு ஓன்றாக ஒற்றுமையாக நம் பண்பாட்டுக்கும் கலைக்கும் முன்னுரிமையும் மரியாதையும் கொடுத்து நடாத்துவார்கள். விளையாட்டுக்களும் கலைகளும் அரங்கேற்றப்படும் இரவைிரவாக ஆண்கள் பெண்கள் எல்லோரும் கலந்து கொள்வார்கள். இன்று கட்டாயம் என்ற நிர்ப்பத்தற்திற்காக நாங்கள் நடத்துகின்றோம் நீங்கள் கலந்து கொள்ளுங்கள் எனற ஆதிகாரத்தின் பயத்திறகாகவும் கலந்து கொள்கின்றார்கள். 

கழகங்களும் சங்கங்களும் சோலையிழந்த பிரதேசத்தில் கொண்டாட்டம் ஒரு கேடா என்று ஓய்ந்து விட்டன கழகங்களையும் சங்கங்களையும் நடாத்துவதற்று இளைய தலமுறையின்றி தத்தளித்துக்கொண்டிருக்கின்றது.
எவை நடற்தாலும் எமக்கென்ன என்று வாழும் சுறனையற்ற மனிதர்களாய் நடமாடும் நிலை. கடந்த காலங்கள் போனால் போனவை தான் துக்கத்தின் நினைவுகளை கடந்து செல்வது கடினம். மீள மீள வரும் அழியாத நினைவுகள். 
மீண்டும் இப்படியொரு யுத்தமும் மனிதப்படுகொலைகளையும் ஏற்க மறுக்கும் மனித மனங்கள். பாதுகாப்பிற்றி தமக்கு தாமே பாதுகாப்பு என்று தினம் தினம் பயத்துடன் வாழும் மக்கள்.

மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதமும் உறுதியும் இல்லாத போது களியாட்டங்களும் விளையாட்டுக்களும் எதற்கு யார் கேட்டார்கள் நிம்மதியற்ற மக்கள் நிம்மதியுடன் இதை பார்ப்பார்களா ? பாதுகாப்பிற்கு ஓர் உத்தரவாதம் கொடுங்கள் அப்புறம் நடத்துங்கள் இந்த களியாட்டத்தை.
மக்கள் மனங்களுக்கு தீணி போடாவிட்டாலும் மனங்களை புண்புடுத்தாமல் இருக்கும். 

கதைகள் சொல்லும் வயல்வெளி விளையாட்டு. சுவாரஸ்யமான அனுபவங்கள்

மனிதனுக்கு அடையாளங்கள் தவிர்க்க முடியாதவை. நினைவுகளும் அடையாளங்களும் இல்லை என்றால் நீங்கள் உங்களுடைய வீட்டிற்கே திரும்பிச்செல்ல முடியாது. காலத்தின் மாற்றமும் எம் எதிர்கால சந்ததிக்கு நினைவுகளை மட்டுமே கடத்திச்செல்ல முடிகின்றது. எம் பாட்டன் முப்பாட்டன் ஓடியாடி விளையாடிய வயல் வெளிகளையும் குச்சொழுங்கை களையும் கேட்டுப் பாருங்கள் சுவாரஸ்யமான கதைகளை சொல்லும்.
தோட்டத்து வயல் வெளிகளில் மாலை நேர கூட்டமும் இரவு நேர குச்சொழுங்கை மகிழ்வுகளுமே அன்றைய நாட்களின் தினப் பொழுதுகள். சின்னச் சின்ன குடிசை வீடுகளும் சொந்த பந்தங்களின் கலகலப்பும் ஊர் முழுதும் தினக் கொண்டாட்டம் தான். 
கிராமத்தவர்களின் தொழிலாகவும் சொத்தாகவும் இருந்தது விவசாயம். காலை எழுந்து தோட்டத்திற்கு சென்றால் இரவு தான் வீடு திரும்புவார்கள் மாலை நேரம் தோட்டத்து வெளியில் ஊர் முழுதும் ஒன்று திரண்டிருக்கும். தோட்டத்து வெளியில் இளவட்டம் விளையாடும் விளையாட்டினை பார்க்க கிளடுகள் முதல் குஞ்சு குருமன் வரை ஒன்று கூடியிருக்கும். 

 அருவி வெட்டிய வயல்வெளியில் வரம்பு நேருக்கு பெட்டியடித்து கிளித்தட்டு விளையாடுவார்கள். இந்த விளையாட்டில் எத்தனை பேரும் விளையாடல்லாம் ஊர் இளவட்டம் எல்லாம் இரண்டு கன்னையாய் பிரித்து களத்தில இறங்குவார்கள். அதற்கு ஏற்ப பெட்டிகள் அமைக்கப்படும். இந்த கிளித்தட்டு விளையாட்டு யாழ்ப்பாணத்தில் 1990 முன்னரே பிரபல்யமாகப் பேசப்பட்டது. இளவட்டத்தினர் கூட்டம் ஊர்களில் நிரம்பியிருந்தது இந்த காலத்தில் தான். பகல் முழுதும் இளவட்டத்தை ஊரில் காண முடியாது. ஆனால் மாலை நேரம் வயல் வெளியின் கதாநாயகர்கள் இவர்கள் தான். 

காலை முழுதும் வீட்டில வேலை செய்துவிட்டு மாலை நேரத்தில்; பெண்களும் இந்த இடத்துக்கு வருவார்கள். வுந்தவர்கள் சும்மா இருப்பார்களா. அந்த வீட்டுக்கதை இந்த வீட்டுக்கதை என்று தங்கள் சோகங்களை பகிர்ந்து கொள்வார்கள் . இதுவே சில வேளை அடிபாடாகவும் வந்து விடும் ஆண்களும் பெண்களும் இணைந்தே கிளித்தட்டு விளையாடுவார்கள். அவளவு ஒற்றுமை இருந்தது அந்த காலத்தில. 

 தோட்டத்து வெளிகளில் உணவிற்காக வரும் கிளிகளை தோட்டத்துக்காரர்கள் வரம்புகளில் நின்று தம் இரு கைகளையும் நீட்டிக் கலைப்பார்கள.; இந்த வழக்கமே பின் விளையாட்டாக தோற்றம் பெற்றது. 

மதியம் சாப்பாடு முடிந்ததும் கொஞ்ச நேர நித்திரைக்கு பின் வயதான பாட்டன் பாட்டிகள் பொல்லுகளை ஊன்றியபடி வயல் வெளி நோக்கி நடக்க ஆரம்பிப்பார்கள். ஏதோ அவர்களும் விளையாடுறவர்களை போல. ஆங்க விளையாட்டு நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது தம் பழைய நினைவுகளை கொஞ்சம் மீட்டுப்பார்கள். களத்தில நிற்கின்ற இளவட்டத்திடம்  ஏய் அடிடா ? ஏன்டா விட்டாய் நான் என்டா  எட்டி அடிச்சிப்புடுவன் என்று வெறுப்பேத்திரது மட்டும் தான் இவங்க வேலை  

மாலை  நேரத் தென்றலும் வயலுக்கு வரும் பறவைகளின் சந்தமும் கிளித்தட்டு விளையாடுபர்களை விட பார்ப்பவர்களின் சந்தமும் ஊரைத் தாண்டியும் கேட்கும். வயலுக்கு நீர் இ;றைக்கும் தோட்டக்காரனுக்கும் கண் இங்க தான் இருக்கும். ஒழுங்கா நீர் இறைக்கிறானோ இல்லையா கிளித்தட்டு மட்டும் ஒழுங்காப் பார்ப்பான். பாடசாலைக்கு செல்லும் சிறுவர்களுக்கு மாலை நேரப்பொழுது இங்க தான் போகும். பள்ளிக்கூடம் முடிந்ததும் மேலதிக வகுப்புக்கு சென்று விட்டு நாழு மணிக்கெல்லாம் தோட்டத்து வெளிக்கு ஆயராகி விடுவார்கள். தோட்டத்து வரம்பு வெளிகளில் புத்தக்கப் பைகளை போட்டுவிட்டு அமர்ந்திருந்து விளையாட்டை பார்ப்பார்கள். பெரிய அண்ணமார் வர முன்னர் இந்த சின்னஞ் சிறுசுகளின் அணி கிளித்தட்டு விளையாட களத்தில இறங்கிடும். அதுக்காகவே  வேளைக்கு வந்திடுவாங்க. அண்ணமார் வந்ததும் கவலை  தோய்ந்த முகத்துடன் வந்து உற்காருவார்கள். சில வேளை ஆட்கானாது போனால் ஒருவரை விளையாட்டில சேர்ப்பாங்க அவன் பொது. இரண்டு கண்னைக்கும் விளையாடுவான். ஆவன ஒருத்தனும் கண்டுக்கவே மாட்டாங்க ஆனா தானும் விளையாடுறதா நினைச்சு விளையாடுவான் சிறுகளின் மனங்களை தேத்துவது தான் பாட்டன் பாட்டி வேலையாக இருக்கும். அப்பு தங்கம் அடுத்த வருசம் நீ விளையாடலாம் என்று ஏமாத்துவாங்க. 

இந்த விளையாட்ட பார்க்க வறவங்க சும்மா வர மாட்டாங்க. புலுக்கொடியல் மாங்காய் சீவல் பலகாரம் என்று வீட்டில இருக்கிறதை எல்லாம் கொண்டு வருவாங்க. சொந்த பந்தங்கள் நண்பர்கள் எல்லாரும் குடுத்து சாப்பிடுவாங்க இதை விடவிளையாடுற ரீமுக்கு தண்ணி எல்லாம் பார்வையாளர்கள் எடுத்து வருவாங்க. இந்த களம் தான் சிலரது காதலுக்கு அத்திவாரம் போட்ட இடம். கிளித்தட்டு விளையாடும் இளவட்டத்தினர் தான்  கதாநாயகர்கள். கிளித்தட்டு விளையாடும் சாட்டில் தம் காதல் கதைகளையும் பேசி விடுவார்கள். பின்னர் கதை வெளியில் வரும் போது வயல் வெளி போர்க்களமாய் மாறி வரும். சில நேரம் மறுநாள் விளையாட்டு நடை பெறாது. ஆனாலும் எல்லாரும் வயல் வெளிக்கு வந்துவிடுவார்கள்;. நம் கதைகளை பேசி விட்டுசெல்வார்கள். எப்படியும் திரும்பவும் விளையாட்டு நடைபெறவேண்டும் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் இருக்கும். ஒருவளியாக காதலுக்கு ஒளியேற்றி வைத்து விடுவார்கள் பாட்டன் பாட்டிகள். அப்புறம் என்ன மறுநாளே வயல் வெளி களை கட்ட ஆரம்பித்து விடும். 
.
இப்படி எல்லாம் கதைகளையும் சந்தோஸங்களையும் தந்த இந்த வயல் வெளி விளையாட்டு பின் வந்த கால இடப் பெயர்வுகளில் கானாமல் போய்விட்டது. துக்கத்தின் நினைவுகளை மறக்க முடியாததே. வலி அடங்காத வரையில் வேதனை தீராது. வேதனையோ காயங்களையும் வடுக்களையும் பற்றிப் பேசச் சொல்லும். தொடர் காயங்களை சுமந்து வந்ததால் சந்தோஸங்களை நினைத்துப்பார்கவோ அனுபவிக்கவோ முடியவில்லை. தொடர் இடப்பெயர்வுகளும் உயிர்ப்பலிகளும் காணாமல் போதலும் வீட்டுக்குள்ளேயே கட்டிப் போட்டது. 

ஒன்றாய் திரிந்து ஒன்றாய் விளையாடிய நன்பனின் உயிற்ற  உடல் திடீர் திடீர் என காணமல் போனவர்கள் பெற்றோர்களின் தவிப்புகள் இளவட்டத்தினரை இரவில் கூட காண முடியாதிருக்கும். பொழதுகள் எல்லாம் மரண பயத்துடனே கழிய ஆரம்பித்தன. வயதான பாட்டன் பாட்டிகள் இந்த நிலையை பபார்த்து ஏங்கியே சிலர் இல்லாமலே போய்விட்டனர். இருந்தவர்களும் மனம் விட்டு சந்தோஸமாய் பேசியதில்லை தம் உறவுகளை எப்படி பாதுகாப்பது என்றே நாட்கள் கடந்தன. 




சோகங்களுக்கும் வலிகளுக்கும் பின்னர் பழக்கப்பட்டு விட்டனர் விஞ்ஞானத்தின் வளர்ச்சியும் அறிவியல் எழிச்சியும்  போட்டிகளையும் தேடல்களையும்  அதிகரித்தன. தொலைந்து போன சொந்தங்களும் உறவுகளின் இழப்புக்களும் இறுக்கமான மனம் கொண்ட சமுதாயமாக மாற்றியது. ஓய்வற்ற வேலை படிப்பு என்று இளவட்டத்தினர் பின்னர் சந்தோச உலகத்தை மறந்து விட்டனர். மேலைத்தேய விளையாட்டு அறிமுகமும் பாடசாலையில் போட்டிமுறை விளையாட்டுக்களும் எம்மில் தோற்றம் பெற்ற விளையாட்டு பின்வந்தவர்களுக்கு தெரியாமலே போய்விட்டது. கிரிக்கெட் வொலிபோல் போன்றன பின்னர் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தன. ஊர்களை கிரிக்கெட் மைதானமும் வொலிபோல் மைதானமும் இருக்கும். பக்கத்து ஊர் காரனும் நன்பர்களும் ஒன்றாய் விளையாடுவார்கள் யார் விளையாடுறார்கள் என்று அடையாளம் தெரியாததாலும் விளையாட்டு பற்றி தெரியாதாலும் வயதானர்கள் கூட இதை பார்ப்பதில்லை. உற்சாகப்படுத்த கூடயாரும் இல்லாமல் இந்த விளையாட்டு நடைபெறும். 


கிழமைக்கு கிழமை கிரிக்கெட் போட்டி நடைபெறுது. போட்டியில வெல்லனும் என்று நினைத்து விளையாடுவாங்க. சந்தோசமோ பன்பலோ எதுவுமே இல்லப்பா ஆனா அன்னைக்கு நாங்க விளையாடின கிளித்தட்டில இருந்த சந்தோசம் தெரியுமா.? வயல் வெளிய விட்டு வீட்டுக்கு பொறது என்டாலே விருப்பம் இருக்காது. என்று வயதானவர் கூறும் போது ஒரு நிமிடம் மெய் சிலிர்க்கின்றது. அவளவு சந்தோசமா அந்த விளையாட்டில என்று நினைக்க தோன்றுகின்றது.

பொங்கல் வருசம் வந்தாமட்டும் பாரம் பரிய நிகழ்சிகளில் இந்த கிளித்தட்டும் அரங்கேறும் எங்காவது ஒரிரு கழகங்கள் அதை அரங்கேற்றும். வென்றால் பரிசு என்று தான் விளையாடுறாங்க ஆனால் அதைபார்க்க ஒரு கூட்டம் வரும் அப்போது பார்ப்பவர்களின் நக்கல் பேச்சும் பன்பல்களும் விளையாட்டுபவர்களுக்கு எரிச்சல் ஊட்டுதாக இருந்தாலும் சந்தோசமாய் இருக்கின்றது. தொலைக்காட்சியின் ஊடாக பாரம் பரிய நிகழ்ச்சிகள் ஒலிபரப்பு செய்யப்படும் போது அனைவரும் கண்டு கிளித்தட்டையும் கண்டு கொள்ள கூடியதாக உள்ளது. அப்போது பாட்டன் பாட்டிகள் தம் இளவட்ட நினைவுகளை மீட்டிப்பார்ப்பார்கள். தம் பேரன் பேத்திகளுக்கு சொல்லி தம் ஆதங்கத்தை தீர்த்துக்கொள்கிறார்கள் 

விஞ்ஞானம் வள்ர்ந்தாலும் அறிவியல் வள்ர்ந்தாலும் எம் பாரம் பரியத்தின் தனித்துவமும் சந்தோசமும் கிடைக்குமா. கால மாற்றம் சந்தோஸங்களையும் மாற்றி விடுகின்றன. இன்றைய இளைஞர்களின் சந்தோஸங்களும் தேவைகளும் வேறுபட்டவை. அவர்கள் புதிய புதிய விடயங்களை தேடிப்பார்க்கவே விரும்புவார்கள். பழயன கழித்தலும் புதியன புகதலும் வழமையான ஒன்று என்று மனதை தேற்றிக்கொள்ள மட்டும்தான் முடியும்.  

Thursday, April 26, 2012

பிரிட்டிஷ் பொருளாதாரம் நெருக்கடியில்!

பிரிட்டிஷ் பொருளாதாரம் பொருளாதார நிபுணர்களின் எதிர்வுகூறல்களுக்கு மாறாக மீண்டும் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் பிரிட்டனின் பொருளாதாரம் 0.2 வீத வீழ்ச்சியைக் காட்டுகிறது. இதே போன்று இதற்கு முந்தைய காலாண்டிலும் பிரிட்டிஷ் பொருளாதாரம் வீழ்ச்சியை கண்டது.
டபுள் டிப் ரிஸஷன் எனப்படும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழுந்த மாத்திரத்திலேயே இன்னொரு சடுதியான வீழ்ச்சிக்குள் செல்லும் இரண்டாவது தடவை நெருக்கடியை 1970களுக்குப் பின்னர் பிரிட்டன் முதற்தடவையாக சந்திக்கிறது. நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்பதை காட்டும் புள்ளிவிபரங்கள் மிக மிக ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்று பிரதமர் டேவிட் கேமரன் கூறியுள்ளார்.

இப்பொருளாதார வீழ்ச்சிக்கு பிரதமரும் நிதியமைச்சர் ஜார்ஜ் ஆஸ்பர்ணுமே பொறுப்பு என்று எதிர்கட்சித் தலைவர் எட் மிலிபாண்ட் குற்றஞ்சாட்டியுள்ளார். அழிவை ஏற்படுத்தக் கூடிய பொருளாதார கொள்கைகளே இந்த நிலையை ஏற்படுத்தியுள்ளது என்றும் மிலிபாண்ட் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த திங்களன்று தானும் பொருளாதார நெருக்கடிக்குள் வீழ்ந்துவிட்டதாக ஸ்பெயின் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Wednesday, April 25, 2012

சீனாவில் மலசலகூடத்துக்குள் வசிக்கும் குடும்பம்

சீன குடும்பம் ஒன்று மலசலகூடத்தை வீடாக்கி வாழ்ந்து வருகின்றது. வடகிழக்கு சீனாவில் உள்ள   Jilin மாகாணத்தில் உள்ள குட்டிக் கிராமம் ஒன்றில் பிறந்தவர்  Zeng Lingjun.  ஆயினும் வீட்டு வறுமை காரணமாக பாடசாலைக்கு சென்று படிக்க இவரால் முடியவில்லை.
வளர்ந்து பெரியவர் ஆன பிற்பாடு கிராமத்தை விட்டு வெளியேறினார். அவரது மாகாணத்தின் மிக பெரிய நகரமான ளூநலெயபெ இற்கு வந்து சேர்ந்தார். இவர் மிகுந்த பிரயாசைக்காரர். திறமையாக செருப்பு தைப்பார். இதனால் இப்பெரிய நகரத்தில் மாதாந்தம் ஓரளவு நல்ல வருமானத்தை விரைவாகவே சம்பாதிக்க தொடங்கினார். ஆயினும் சொந்த வீடு ஒன்றை வாங்குகின்ற அளவுக்கு வசதி கிடைக்கவில்லை. நண்பர் ஒருவரிடம் இருந்து ஆறு வருடங்களுக்கு முன்னர் இவருக்கு ஒரு தகவல் கிடைத்தது.

கைவிடப்பட்ட ஹோட்டல் ஒன்றின் மலசலகூடம் ஒன்று மிக குறைந்த வாடகைக்கு கொடுக்கப்பட இருக்கின்றது என்பதுதான் தகவல். தேவையான பணத்தை இவர் கடனாக பெற்றுக் கொண்டார். மலசலகூடத்தை வாடகைக்கு பெற்றார். அதை வீடாக ஆக்கிக் கொண்டார்.

2008 ஆம் ஆண்டு இவர் ஒரு பெண்ணிடம் மனதை பறி கொடுத்தார். பெண்ணும் ஒரு பாட்டாளிதான். 2010 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். விரைவிலேயே ஒரு குழந்தைக்கு பெற்றோர் ஆயினர். தற்போது வரை இம்மலசலகூட வீட்டில்தான் வசிக்கின்றார்கள்.


உலகிலேயே மோசமான கணவர் ஐன்ஸ்டீன்தான்!?

உலகிலேயே மோசமான கணவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்தான் என்று ஒரு புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.
உலகிலேயே மிகப் பெரிய விஞ்ஞானியாக நாம் அனைவரும் ஐன்ஸ்டீனை நினைத்துக் கொண்டிருக்கையில் இப்படி ஒரு குண்டைப் போட்டுள்ளார் வால்டர் ஐசக்சன். இவர் எழுதிய 'நுiளெவநin: ர்ளை டுகைந யனெ ருniஎநசளந' என்ற நூலில்தான் உலகிலேயே மோசமான கணவர் ஐன்ஸ்டீன் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐன்ஸ்டீன் தொழில் ரீதியாக எத்தனையோ பெரிய சாதனைகளைப் படைத்திருந்தாலும் அற்புதங்களை நிகழ்த்தியிருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் எதையும் சாதிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

தன்னுடன் பணியாற்றிய விஞ்ஞானி மிலவா மாரிக்கைத்தான் கல்யாணம் செய்து கொண்டு வாழ்ககை நடத்தினார் ஐன்ஸ்டீன். இவர்களது திருமண வாழ்க்கை 11 ஆண்டு காலமே நீடித்தது. இந்த 11 ஆண்டு காலமும் அவரிடமிருந்து எந்தவிதமான காதல் அணுகுமுறையும் இருந்ததில்லையாம். இருவரும் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்காக சம்பிரதாயத்திற்காக சேர்ந்து வாழ்க்கை நடத்தினார்களாம்.

தனது மனைவியை வேலைக்காரி போல நடத்தி வந்தாராம் ஐன்ஸ்டீன். அன்பையும் பரிவையும் அவர் தனது மனைவியிடம் காட்டியதில்லையாம். 11 ஆண்டு கால வாழ்க்கைக்குப் பின்னர்தான் தனது திருமண வாழ்க்கை தோல்வியடைந்த ஒன்று என்று அவருக்குப் புரிய வந்ததாம். ஐன்ஸ்டீனின் மனைவி மாரிக் ஐரோப்பாவிலேயே முதல் முறையாக கணிதம் மற்றும் இயற்பியல் படித்த முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தனைக்கும் ஐன்ஸ்டீனை விழுந்து விழுந்து கவனத்திவர் மாரிக் என்பது குறிப்பிடத்தக்கது. ஐன்ஸ்டீனின் அறையை மிகச் சிறப்பாக அவர் பராமரித்து வந்தார். அவருக்கு மூன்று வேளை உணவை தவறாமல் அவரது அறைக்கே கொண்டு வந்து கொடுத்தார். உடைகளை சுத்தமாக துவைத்து தேய்த்துக் கொடுத்தார். படுக்கை அறையை சுத்தமாக வைத்திருந்தார். ஆனால் பதிலுக்கு மனைவிக்கு எந்த கைமாறும் செய்ததில்லையாம் ஐன்ஸ்டீன்.

மாறாகஇ மனைவிக்கு பல நிபந்தனைகளைப் போட்டு வைத்திருந்தாராம அவர். அதாவது அருகில் வந்து உட்காரக் கூடாது வெளியில் கூட்டிச் செல்லுமாறு வற்புறுத்தக் கூடாது. தேவையில்லாமல் தன்னுடன் பேசக் கூடாது வெளியுலக தொடர்புகளை அதிகம் வைத்துக் கொள்ளக் கூடாது.. இப்படிப் போகிறது ஐன்ஸ்டீனின் நிபந்தனை லிஸ்ட்.

அதை விட கொடுமை தன்னுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று தனது மனைவி எதிர்பார்க்கக் கூடாது என்றும் கூறியிருந்தாராம் ஐன்ஸ்டீன். எந்த வகையிலும் தன்னைக் கவர முயற்சிக்க் கூடாது. அனுமதி இல்லாமல் பேசக் கூடாது என்பதும் அந்த நிபந்தனைகளில் ஒன்று.

11 ஆண்டு கால வேதனை வாழ்க்கைக்குப் பின்னர் ஐன்ஸ்டீனை விட்டு அவரது மனைவி பிரிந்து சென்றார். கூடவே தனது பிள்ளைகளையும் அழைத்துச் சென்று விட்டார்.

ஐன்ஸ்டீன் நடத்திய இந்த லட்சணமா இல்லறத்தில் பிறந்த குழந்தைகள் இருவர். ஒருவர் ஹான்ஸ் ஆல்பர்ட். இன்னொருவர் எட்வர்ட். 1902ம் ஆண்டு லிசரல் என்ற மகள் பிறந்தார். பின்னர் அவரைத் தத்துக் கொடுத்து விட்டனர். பிள்ளைகளோடு ஜூரிச் சென்ற மாரிக் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் 1919ம் ஆண்டு விவாகரத்து கோரினார். அது பின்னர் கிடைத்தது.

அதன் பின்னர் ஐன்ஸ்டீன் 1919ம் ஆண்டே எல்சா என்பவரை மணந்தார். பி்ன்னர் அவரது செயலாளர் பெட்டி நியூமன்னுடனும் உறவு ஏற்படுத்திக் கொண்டார். அதன் பின்னர் வேறு ஒரு பெண்ணுடனும் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது.

ரிலேட்டிவிட்டி தியரியை உலகுக்கு அறிவித்த ஐன்ஸ்டீனால் ரிலேஷன்ஷிப்பை பராமரிக்க முடியாமல் போனது வியப்புக்குரியதுதான்...

Monday, April 23, 2012

கனடாவில் ஆரம்பமாகும் பனிப்புயல்: வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை

கனடாவின் ஓண்டேரியோ பகுதியில் இதமான வெப்பம் குறைந்துள்ளது. இன்னும் சில தினங்களில் பனிப்புயல் வீசப்போவதாக என்விரான்மெண்ட் கனடா என்ற வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
மெக்ஸிகோ வளை குடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு நோக்கி ஓண்டேரியோவுக்குள் வீசும்போது பனி பனிக்கட்டி மழை மற்றும் மழை எனப் பல பரிமாணங்களில் வெளிப்பட வாய்ப்பு உள்ளது. இந்நிகழ்வு ஞாயிறு இரவு தோன்றி திங்கள் முதல் செவ்வாய் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஓண்டோரியோவின் தென்மேற்கு மற்றும் மத்திய தென் பகுதிகளில் திங்கட்கிழமை வாடைக்காற்று மணிக்கு 70 கி.மீ வேகத்தில் வீசும். அன்று 7 டிகிரி–10 டிகிரி என்கிற சராசரி வெப்பத்தை விடக் குறைவாக இருக்கும் காற்றின் வேகம் செவ்வாய்க்கிழமை தணியக்கூடும்.

கொட்டும் பனியானது கிங்ஸ்டன் ஒட்டாவா பீட்டர்பரோ ஹேமில்டன் மற்றும் டொரொண்டோவில் ஆகிய பகுதிகளில் பரவலாக இருக்கும். ஹேலியர்டன் பீட பூமியில் உறைபனி 5 முதல் 10 செ.மீ வரை படர்ந்திருக்கும். ஒண்டேரியோவின் மத்திய தென் பகுதியில் ஒன்று அல்லது இரண்டு செ.மீ. வரை பனி உயர வாய்ப்புள்ளது.

கிழக்குப் பகுதியில் முதலில் சில செ.மீ வரை உயரும் பனி மழையானது பின்பு 25 மி.மீ. வரை உயர்ந்து அந்தப் பகுதி முழுவதையும் குளிர்விக்கும். எச்சரிக்கை விடும் அளவிற்கு இப்பனி ஆபத்தானது இல்லை என்றாலும் இந்தக் காலகட்டத்திற்கு தற்போதைய பனியின் அளவு அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு மாலை லேக் தூய ஜீன் பகுதியில் 20 செ.மீ. உயரத்திற்கு பனி படரும். இந்தப்ப பனிப்புயலால் கார்இ வண்டி ஓட்டுவது கடினமாக இருக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.

இறந்த பின் மனைவியை புதைப்பதற்காக குட்டி தீவை விலைக்கு வாங்கிய பள்ளி ஆசிரியர்

இறந்த பிறகு தனது உடலையும் மனைவியின் உடலையும் புதைப்பதற்காக இங்கிலாந்தில் குட்டி தீவை விலைக்கு வாங்கி உள்ளார் பள்ளி ஆசிரியர் கசிமிர் ரோசின்ஸ்கி இங்கிலாந்தின் ஹெர்ட்போர்ட் ஷயர் கவுன்டியில் உள்ளது செயின்ட் ஆல்பன்ஸ் நகரம். இங்கு மெக்கன்சி என்ற பெயரில் குட்டி தீவு உள்ளது.
இங்கு தண்ணீர் சாலைகள் மின்சார வசதி எதுவும் இல்லை. இந்த குட்டி தீவு 18 மாதத்துக்கு முன்பு விலைக்கு வந்தது. ஆனால் யாரும் வாங்கவில்லை. இந்நிலையில் செயின்ட் ஆல்பன்ஸ் நகரில் உள்ள பீச்வுட் பார்க் பள்ளி ஆசிரியர் கசிமிர்  ரோசின்ஸ்கி குட்டி தீவை 46 லட்சம் ரூபாய்க்கு வாங்கி உள்ளார்.

கசிமிருக்கு தற்போது 50 வயதாகிறது. மனைவி பவுலின் மகன் மைல்ஸ்(12) மகள் லிடியாவுடன்(11) வாழ்ந்து வருகிறார்.

இதுகுறித்து கசிமிர் கூறியதாவது: மூன்று ஆண்டுக்கு முன்பு குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டேன். அது என்னை மிகவும் பாதித்தது. இறந்த பின் எனது உடலை அமைதியான இடத்தில் புதைக்க வேண்டும் என்று விரும்பினேன்.

அதற்காக இந்த தீவை வாங்கி உள்ளேன். தீவுக்கு செல்வது அவ்வளவு எளிதல்ல என்பது தெரியும். எனினும் உலகின் அழகிய இடங்களில் மெக்கன்சி தீவும் ஒன்று.

நானும் எனது மனைவியும் இறந்த பின் இருவரின் உடலையும் இந்த தீவில் தான் புதைக்க வேண்டும் என்று குழந்தைகளிடம் கூறியுள்ளேன். அதை அவர்கள் செய்வார்கள் என்று நம்புகிறேன் என்றார்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls