Tuesday, June 12, 2012

துளிர்விடும் வீதி நாடகம்...... காலத்தின் கட்டாயமா...?

கால வோட்டத்தில் கலைகளும் சடங்குகளும் மழுங்கடிக்கப்பட்டு இன்றைய இளம் சமுதாயத்தின் மனதில் மேவி நிற்பவை திரைப்படங்களே. கட்டாயம் என்ற மகுடத்தில் திருவிழாக்களும் சடங்கு முறைகளும் வழமை தவறாது பேணப்பட்டு வருகின்றன. “மானாட மயிலாட”, “சுப்பர் சிங்கர்”; போன்ற தொலைக்காட்சித் தொடர்  நிகழ்வுகளும்; ஒவ்வொருவரின் இரசனைக்கு தீனி போடுவதாய்  அமைந்து விடுகின்றது.
ஊர்த்; திருவிழாக்களில் நடைபெறும் நாடகங்கள் கூத்துக்கள் வில்லுப்பாட்டுக்கள் விடயங்களை அலசும் சுவாரஸ்யமான பட்டிமன்றங்கள் மனித மனங்களில் இடம் பிடித்துவிடுகின்றன தனித்துவம் மிக்க கூத்துக்களும் காலமாற்றத்தினால் காணாமல் போய்விட்டன.

சமுதாயத்தின் மாற்றமும், தேவையும் அதிகரித்து கூத்து ஆடியவர்கள் தொடர்ந்து ஆட முடியாமல் ஒரு நழுவல் நிலையை ஏற்படுத்தி விட்டன. மக்களோடு நேரடியாக உறவாடும் கலையாக நாடகங்கள் அமைகின்றன இன்றைய நவீன சினிமா உலகம் தோன்ற முன்னர் மக்களின் பொழுது போக்கு விடயமாக நாடகங்கள் செயற்பட்டன. அதனை விட சம கால அரசியல் விடயங்கள் சமூக விடயங்களை எடுத்துக் கூறுவதற்கு நாடகத்தை ஒரு மூலமாக பயன்படுத்தினர்.
தொலைக்காட்சி, இணையத்தின் வருகை அதிகரித்துள்ள போதும் நாடகத்திற்கு இருக்கின்ற மதிப்பு குறைவதே இல்லை. ஏதோ ஒரு விடயத்தை சொல்லுகி;ன்றதாலும் இளவட்டத்தினரின் மனதில் அவை இடம்பிடித்து நிற்கின்றன.  தொலைக்காட்சி தொடர,; வேலைப்பளு, இணையம் போன்றன குறுகிய வட்டத்துக்குள் நிற்கின்ற இன்றைய தலைமுறைக்கு  நாடகங்கள் கேளிக்கைகள் போன்றன விடுதலையை கொடுக்கின்றன.   
1980 ஆண்டு காலப்பகுதியில் ஈழத்தில் தழிழர்களின் அரசியல் பிரச்சினைகளையும் சமூகப்பிரச்சினைகளையும் மக்களிடம் கொண்டு சென்று சேர்ப்பவையாக வீதி நாடகங்கள் செயற்பட்டன. தழிழர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு விட்டன தழிழர்கள் உரிமைக்காக போராட வேண்டும் என்பதையும் இந்த நாடகங்கள் பிரதான கருப்பொருளாக கொண்டிருந்தன.
மக்கள் கூடுகின்ற ஒரு பொது இடத்தில் ஆற்றுகை இடம்பெறும.; ஆலயமுன்றல் சந்தைப்பகுதி பஸ் தரிப்பிடம் போன்ற இடங்களில் நாடகங்கள் அரங்கேறும.; இன்றைய கால நிகழ்வுகளை போல ஒரு வாரத்திற்கு முன்னரே பத்திரிகையில் போடப்பட்டு ஆற்றுகை செய்யப்படுவதில்லை. இன்று ஆலய முன்றலில் இரவு பத்துமணிக்கு நாடகம் இடம்பெறும். அனைவரும் ஒன்றுகூடுங்கள் என்று ஒரு அறிவிப்பு வழங்கப்படும.; இன்று விஜய் படம் ரீலிஸ் என்றால் எப்படி கூட்டம் கூடுமோ அப்படி தான் அன்றைய காலத்தில் மக்கள் நிறைந்திருப்பார்கள்;. பாட்டன் பாட்டி தொடக்கம் குஞ்சு குருமன் வரை எல்லாம் இந்த கூட்டத்தில் இருக்கும். அரங்கு என்று ஒன்று இருக்காது. வாகனத்தில் சில பொருட்களை காட்சிப்படுத்தி நடுவில் நின்று நடிப்பார்கள.; நடிகர்கள் தம்மை வேறுபடுத்திக் காட்டுவதற்காக தலையில் துண்டு கட்டியிருப்பார்கள். பார்வையாளரை தன்வசப்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும். இளசுகள் எல்லாம் மரங்களின் மேல் ஏறி நின்று  நாடகத்தை பார்ப்பார்கள். எல்லோர் மனதிலும் பதியக்கூடிய வகையில் எளிமையாக சொல் நடையில் சிறப்பாக கருத்துக்களை கூறுவார்கள். இன்று பாடல்கலை முனுமுனுத்து செல்வதைப்போல இந்த நாடக வசனங்கள் எல்லோர் வாயிலும் அசைபோடும்.  நடிகர்கள் மிக அவதானமாக நடிப்பை வெளிப்படுத்துவார்கள். பார்வையாளர்கள் மிக நெருக்கமாக நிற்பதால் அவர்கள் விடும் சிறிய தவறும் தெளிவாகத் தெரியும். உணர்வுகளும் அசைவுகளும் துல்லியமாகவும் தெளிவாகவும் இருக்கும்.
1989 காலப்பகுதியிலேயே விடுதலைப்புலிகள் தம் கொள்கைகளையும் கருத்துக்களையும் பரப்புவதற்கு வீதி நாடகங்களை அதிகம் பயன்படுத்தினார்கள். இந்த காலத்திலேயே இந் நாடகம் அதிகம் வளர்ச்சி கண்டது. இரவுப் பொழுதுகளில் ஊர் முன்றலில் கோயில் வீதிகளில் அரங்கேற்றுவார்கள். நாடகத்தை பார்த்த சில இளவட்டத்தினர் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார்கள். தழிழர்களின் பிரச்சினைகளும் கொடுமைகளும் அதிகளவு பேசபப்பட்டது. இந்த நாடகத்தில் பேசப்பட்ட பாடல் வரிகள் மக்கள் மனதில் நின்று நிலைப்பவையாக இருந்தன. தொலைக்காட்சிகளோ வேறு பொழுபோக்கு விடயங்களோ இல்லாத காரத்தினால் மக்கள் எப்போது நாடகம் போடுவார்கள் எங்கு போடுவார்கள் என்று எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்திருப்பார்கள். அரசியலின் உன்மைத்தன்மையும் பிரச்சினைகளும் பாமர மக்கள் மத்தியில் அதிகளவு சென்றடையவில்லை. இதன் தன்மையை விளங்கி வீதி நாடகம் மக்கள் கூடுகின்ற இடங்களுக்கு சென்றது. அரசியலின் உண்;மைத்தன்மையையும் சமகாலப்பிரச்சினைகளையும் எடுத்துக்கூறியது.
  மாயமான,; கசிப்பு, விடுதலைக்காளி போன்ற வீதி  நாடகங்கள் சம காலப்பிரச்சினைகளை எடுத்துக்கூறின. இந்த நாடகங்கள் உணர்வுகளை தூண்டி சமூக மாற்றத்தை ஏற்படுத்தின.  இதனால் இந் நாடகங்கள ஈழத்தில் பிரபல்யம்   பெற்றன. வீறு கொண்டு எழுந்து வெற்றி கண்ட வீதி நாடகங்கள்; 2000 காலப் பகுதியில் குறைவடையத் தொடங்கின. பின் யாருக்கும் தெரியாத ஒரு கலைவடிவமாக சென்று விட்டது. பிரச்சினைகளையும் சமகால அரசியல் விடயங்களையும் பாமர மக்களிற்கு எடுத்து செல்லும் சிறந்த ஒரு ஊடகம் இது.
காலமாற்றமும் காலத்தின் கட்டாயமும் எமது கலைகள் அழிவடைந்து வருகின்றது.
தற்போது யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் சமூகப்பிரச்சினைகளும் அதிகரித்து வருகின்றன. இந்த பிரச்சினைகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்று சேர்ப்பதற்கும் விழிப்புணர்வை  ஏற்படுத்துவதற்கும் ஊடகங்கள் செயற்பட்டு வருகின்றன அந்த வகையில் இந்த வீதி நாடகங்கள் தம் பணியை செய்கின்றன. பிரச்சினைக்குரிய காரணத்தினையும் விளைவுகளையும் எடுத்துக் கூறுகின்றன.
சமுதாயத்தின் பிரச்சினைகளும் அரசியலின் உன்மைத்தன்மையும் தற்காலத்தில் எடுத்து கூறப்படவேண்டிய கட்டாயம் நிலவுகின்றது. பிரச்சினைக்கான காரணத்தையும் அதிலிருந்து வெளியேறுவதற்கான வழிகளையும் மக்களிற்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
காலத்தின் கட்டாயம் வீதி நாடகங்கள் சில காலம் மறைந்து போயிருந்தாலும் தற்போது காலத்தின் தேவை கருதி இந் நாடகங்கள் துளிர் விடத் தொடங்கியுள்ளது.
சமகாலத்தில் நிலவுகின்ற பிரச்சினைகள் அரசியல் நிலவரங்களின் உன்மைத்தன்மைகள் பாமர மக்களை சென்றடைய வேண்டும். பிரச்சினைகளுக்குரிய காரணங்கள் தெளிவாக சென்றடைந்தால் மட்டுமே பிரச்சினைகளிலிருந்து வெளிவரமுடியும்.

Monday, April 30, 2012

யாழ் மக்களின் மனங்களுக்கு கொண்டாட்டங்கள் தீணி போடுமா?

நிகழ்வுகளும் சடங்குகளும் ஏன் வருகின்றன என்ற மன விரக்த்தியோடு வாழும் யாழ் மக்களின் மனங்களுக்கு விருந்தளிக்க பொங்கலிற்கு வருடப்பிறப்பிற்கு அரங்கேற்றப்படும் கலை நிகழ்வுகளும் பாரம்பரிய விளையாட்டுக்களும் தீணி போடுவதாய் அமைகின்றனவா என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது.
நிம்மதியற்ற மனங்களும் தொடர் இழப்புக்களையும் மரணப்பீதியையும் கடந்து வந்த மக்களின் மனங்கள் கொண்டாட்டங்களை சம்பிரதாயத்தின் அங்கமாக பார்க்கின்றனர். நாள் பார்த்து ஆரவாரத்துடன் அரங்கேற்றப்படும் கொண்டாட்ட  நிகழ்வுகள் யாழை திருவிழாக்கோலம் போல அலங்கரித்திருக்கின்றன. இந்த கொண்டாட்டங்கள் ஏன் நடத்தப்படுகின்றன எதற்காக நடத்தப்படுகின்றன? என்ன எதிர்பார்ப்புடன் நடத்தப்படுகின்றன யார் நடத்துகின்றார்கள் என்ற விடைதெரியாத கேள்விகள் பல.

பசித்தோடிய வயிறுகளை மரணக்குழிகளில் வீழ்ந்து கொண்டிருந்த கணங்கைளை முடிவேயற்றிருந்த சாவோலத்தை பார்த்துக்கொண்டிருந்த 
போதே வீழ்ந்து கொண்டிருந்த உயிர்களை நம்பிக்கை ஊட்டுவதற்கு எந்த நிலையுமே இல்லாத கையறு நிலையை அழிக்க முடியாத அந்த நினைவுகளை
 எப்படி மறப்பது ஓடிக்கொண்டிருந்த செங்குருதியில் வெற்றிக்கழிப்பை கொண்டாடியதை யாரும் மறந்து விடமாட்டார்கள். மரணத்தை ஒரு பொறியாக பசியை சுருக்கு கயிறாக பயன்படுத்திய தந்தோரபாயத்தை எந்த மக்களும் மறந்து விடமாட்டரார்கள். இந்த கொடிய நிகழ்வுகளை அனுபவித்த மக்களுக்கு கொண்டாட்டங்கள் வெறும் கண்துடைப்பே.

நடத்தப்படும் களியாட்டத்திற்கும் விளையாட்டிற்கும் அன்றைய கோவில் திருவிழாக்கள் தான் நினைவுக்கு வரும் கூட்டம் பட்டைய கிளப்பும். கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள வருபவர்கள் இந்த யுத்தத்தை அனுபவிக்காதவர்களா? எல்லாம் கட்டாயம் தான். நாங்கள் நடத்துகின்றோம் நீங்கள் கலந்து கொள்ளுங்கள் என்று திட்டமிட்டு திணிக்கப்படும் சர்வாதிகாரம். அரசின் கையில் கிடைத்த கைப்பொம்மைகளாக சொல் பேச்சு கெட்ட பிள்ளை பொல நடத்தப்படுகின்றார்கள். இந்த கொண்டாட்டங்கள் யாரை திருப்திப்படுத்த நடத்தப்படுகின்றன? மக்களின் மனதில் இருக்கும் ஈறாத்துயருக்கு இந்த கொண்டாட்டங்கள் தீணி போடுமா? அல்லது மக்களின் மன நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை அறியவா? இல்லை அரசியல் நாடகமா என்று எண்ணத் தோன்றுகின்றது.

திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்ட இந்த மண்ணில் அடக்குமுறையினை ஜனநாயகத்தின் திறவுகோல்களாக காட்டும் அற்புத நிகழ்வு. ஒரு அரசு தனது குடிமக்களின் குருதியின் மீது வெற்றிதுழக்கம் செய்ததை இந்த உலகத்தின் அத்தனை கண்களும் அன்று பார்த்துக்கொண்டிருந்தது. இன்று எல்லாரும் ஒற்றுமையாகவும் சந்தோசமாகவும் வாழ்கின்றோம் என்பதை எடுத்துக்காட்டுவதே இந்த கொண்டாட்டங்களின் நோக்கம்.

மண்முட்டைகளால் அமைக்கப்பட்ட காவலரண்களும் மக்களிற்று பாதுகாப்பு கொடுப்பதற்காய் அரசின் பாதுகாப்பு படைகளுமே விழாக் கொண்டாட்டத்தின் முக்கிய புள்ளிகள். வானுயர்ந்த பாட்டுக்ளும் கலை நடனங்களும் ஆட்டம் பாட்டம் என்று ஒற்றுமையுடன் வாழும் சமுதாயம் என்று வெளியுலகிற்கு காட்டும் நிகழ்வில் மீண்டும் பலிகளாய் போகின்றது ஒரு சமுதாயம். 

எல்லாமே ஓய்ந்து விட்டன குண்டுமழையின் பீதியும் சுடுகலனின் வேட்டுச்சத்தங்களும் அதிரவைக்கும் துப்பாக்கிச்சத்தமும் இப்போது   மக்களின் காதுகளுக்கு எட்டவி்ல்லை. நடந்த போர் ஓய்ந்து விட்டது. ஆனால் புதிய போர் ஆரம்பித்து விட்டது. கொலையும் கொள்ளையும்  கற்பளிப்பும் நிம்மதியான தூக்கத்தை கலைத்து விட்டன.

மரணத்தையும் விட மரணபயம் கொடியது. அதையும் விடக்கொடியது மரணத்தை விட அஞ்சுவோரை தேற்றுவது. அதையும் விடக்கொடியது 
மரணத்தினால் அலைக்களிக்கப்பட்ட நாட்களை கடப்பது தம் மீதும் குண்டு விழாதா என்று மரணத்திற்காய் ஏங்கியவர்களின் மனதை ஆற்றுவதற்கு விரும்புகின்றார்கள். அடிமேல் விழும் அடியை தடுப்பதற்கோ அதற்கு அணை போட யாரும் இல்லை . ஆறுதல் படுத்த முயற்சிக்கின்றார்கள். இவர்கள். 
கடந்த காலங்களில் பெருவிழாக்கள் என்றால் ஊரே விழாக்கோளம் தான் லீவு போட்டு ஓன்றாக ஒற்றுமையாக நம் பண்பாட்டுக்கும் கலைக்கும் முன்னுரிமையும் மரியாதையும் கொடுத்து நடாத்துவார்கள். விளையாட்டுக்களும் கலைகளும் அரங்கேற்றப்படும் இரவைிரவாக ஆண்கள் பெண்கள் எல்லோரும் கலந்து கொள்வார்கள். இன்று கட்டாயம் என்ற நிர்ப்பத்தற்திற்காக நாங்கள் நடத்துகின்றோம் நீங்கள் கலந்து கொள்ளுங்கள் எனற ஆதிகாரத்தின் பயத்திறகாகவும் கலந்து கொள்கின்றார்கள். 

கழகங்களும் சங்கங்களும் சோலையிழந்த பிரதேசத்தில் கொண்டாட்டம் ஒரு கேடா என்று ஓய்ந்து விட்டன கழகங்களையும் சங்கங்களையும் நடாத்துவதற்று இளைய தலமுறையின்றி தத்தளித்துக்கொண்டிருக்கின்றது.
எவை நடற்தாலும் எமக்கென்ன என்று வாழும் சுறனையற்ற மனிதர்களாய் நடமாடும் நிலை. கடந்த காலங்கள் போனால் போனவை தான் துக்கத்தின் நினைவுகளை கடந்து செல்வது கடினம். மீள மீள வரும் அழியாத நினைவுகள். 
மீண்டும் இப்படியொரு யுத்தமும் மனிதப்படுகொலைகளையும் ஏற்க மறுக்கும் மனித மனங்கள். பாதுகாப்பிற்றி தமக்கு தாமே பாதுகாப்பு என்று தினம் தினம் பயத்துடன் வாழும் மக்கள்.

மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதமும் உறுதியும் இல்லாத போது களியாட்டங்களும் விளையாட்டுக்களும் எதற்கு யார் கேட்டார்கள் நிம்மதியற்ற மக்கள் நிம்மதியுடன் இதை பார்ப்பார்களா ? பாதுகாப்பிற்கு ஓர் உத்தரவாதம் கொடுங்கள் அப்புறம் நடத்துங்கள் இந்த களியாட்டத்தை.
மக்கள் மனங்களுக்கு தீணி போடாவிட்டாலும் மனங்களை புண்புடுத்தாமல் இருக்கும். 

கதைகள் சொல்லும் வயல்வெளி விளையாட்டு. சுவாரஸ்யமான அனுபவங்கள்

மனிதனுக்கு அடையாளங்கள் தவிர்க்க முடியாதவை. நினைவுகளும் அடையாளங்களும் இல்லை என்றால் நீங்கள் உங்களுடைய வீட்டிற்கே திரும்பிச்செல்ல முடியாது. காலத்தின் மாற்றமும் எம் எதிர்கால சந்ததிக்கு நினைவுகளை மட்டுமே கடத்திச்செல்ல முடிகின்றது. எம் பாட்டன் முப்பாட்டன் ஓடியாடி விளையாடிய வயல் வெளிகளையும் குச்சொழுங்கை களையும் கேட்டுப் பாருங்கள் சுவாரஸ்யமான கதைகளை சொல்லும்.
தோட்டத்து வயல் வெளிகளில் மாலை நேர கூட்டமும் இரவு நேர குச்சொழுங்கை மகிழ்வுகளுமே அன்றைய நாட்களின் தினப் பொழுதுகள். சின்னச் சின்ன குடிசை வீடுகளும் சொந்த பந்தங்களின் கலகலப்பும் ஊர் முழுதும் தினக் கொண்டாட்டம் தான். 
கிராமத்தவர்களின் தொழிலாகவும் சொத்தாகவும் இருந்தது விவசாயம். காலை எழுந்து தோட்டத்திற்கு சென்றால் இரவு தான் வீடு திரும்புவார்கள் மாலை நேரம் தோட்டத்து வெளியில் ஊர் முழுதும் ஒன்று திரண்டிருக்கும். தோட்டத்து வெளியில் இளவட்டம் விளையாடும் விளையாட்டினை பார்க்க கிளடுகள் முதல் குஞ்சு குருமன் வரை ஒன்று கூடியிருக்கும். 

 அருவி வெட்டிய வயல்வெளியில் வரம்பு நேருக்கு பெட்டியடித்து கிளித்தட்டு விளையாடுவார்கள். இந்த விளையாட்டில் எத்தனை பேரும் விளையாடல்லாம் ஊர் இளவட்டம் எல்லாம் இரண்டு கன்னையாய் பிரித்து களத்தில இறங்குவார்கள். அதற்கு ஏற்ப பெட்டிகள் அமைக்கப்படும். இந்த கிளித்தட்டு விளையாட்டு யாழ்ப்பாணத்தில் 1990 முன்னரே பிரபல்யமாகப் பேசப்பட்டது. இளவட்டத்தினர் கூட்டம் ஊர்களில் நிரம்பியிருந்தது இந்த காலத்தில் தான். பகல் முழுதும் இளவட்டத்தை ஊரில் காண முடியாது. ஆனால் மாலை நேரம் வயல் வெளியின் கதாநாயகர்கள் இவர்கள் தான். 

காலை முழுதும் வீட்டில வேலை செய்துவிட்டு மாலை நேரத்தில்; பெண்களும் இந்த இடத்துக்கு வருவார்கள். வுந்தவர்கள் சும்மா இருப்பார்களா. அந்த வீட்டுக்கதை இந்த வீட்டுக்கதை என்று தங்கள் சோகங்களை பகிர்ந்து கொள்வார்கள் . இதுவே சில வேளை அடிபாடாகவும் வந்து விடும் ஆண்களும் பெண்களும் இணைந்தே கிளித்தட்டு விளையாடுவார்கள். அவளவு ஒற்றுமை இருந்தது அந்த காலத்தில. 

 தோட்டத்து வெளிகளில் உணவிற்காக வரும் கிளிகளை தோட்டத்துக்காரர்கள் வரம்புகளில் நின்று தம் இரு கைகளையும் நீட்டிக் கலைப்பார்கள.; இந்த வழக்கமே பின் விளையாட்டாக தோற்றம் பெற்றது. 

மதியம் சாப்பாடு முடிந்ததும் கொஞ்ச நேர நித்திரைக்கு பின் வயதான பாட்டன் பாட்டிகள் பொல்லுகளை ஊன்றியபடி வயல் வெளி நோக்கி நடக்க ஆரம்பிப்பார்கள். ஏதோ அவர்களும் விளையாடுறவர்களை போல. ஆங்க விளையாட்டு நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது தம் பழைய நினைவுகளை கொஞ்சம் மீட்டுப்பார்கள். களத்தில நிற்கின்ற இளவட்டத்திடம்  ஏய் அடிடா ? ஏன்டா விட்டாய் நான் என்டா  எட்டி அடிச்சிப்புடுவன் என்று வெறுப்பேத்திரது மட்டும் தான் இவங்க வேலை  

மாலை  நேரத் தென்றலும் வயலுக்கு வரும் பறவைகளின் சந்தமும் கிளித்தட்டு விளையாடுபர்களை விட பார்ப்பவர்களின் சந்தமும் ஊரைத் தாண்டியும் கேட்கும். வயலுக்கு நீர் இ;றைக்கும் தோட்டக்காரனுக்கும் கண் இங்க தான் இருக்கும். ஒழுங்கா நீர் இறைக்கிறானோ இல்லையா கிளித்தட்டு மட்டும் ஒழுங்காப் பார்ப்பான். பாடசாலைக்கு செல்லும் சிறுவர்களுக்கு மாலை நேரப்பொழுது இங்க தான் போகும். பள்ளிக்கூடம் முடிந்ததும் மேலதிக வகுப்புக்கு சென்று விட்டு நாழு மணிக்கெல்லாம் தோட்டத்து வெளிக்கு ஆயராகி விடுவார்கள். தோட்டத்து வரம்பு வெளிகளில் புத்தக்கப் பைகளை போட்டுவிட்டு அமர்ந்திருந்து விளையாட்டை பார்ப்பார்கள். பெரிய அண்ணமார் வர முன்னர் இந்த சின்னஞ் சிறுசுகளின் அணி கிளித்தட்டு விளையாட களத்தில இறங்கிடும். அதுக்காகவே  வேளைக்கு வந்திடுவாங்க. அண்ணமார் வந்ததும் கவலை  தோய்ந்த முகத்துடன் வந்து உற்காருவார்கள். சில வேளை ஆட்கானாது போனால் ஒருவரை விளையாட்டில சேர்ப்பாங்க அவன் பொது. இரண்டு கண்னைக்கும் விளையாடுவான். ஆவன ஒருத்தனும் கண்டுக்கவே மாட்டாங்க ஆனா தானும் விளையாடுறதா நினைச்சு விளையாடுவான் சிறுகளின் மனங்களை தேத்துவது தான் பாட்டன் பாட்டி வேலையாக இருக்கும். அப்பு தங்கம் அடுத்த வருசம் நீ விளையாடலாம் என்று ஏமாத்துவாங்க. 

இந்த விளையாட்ட பார்க்க வறவங்க சும்மா வர மாட்டாங்க. புலுக்கொடியல் மாங்காய் சீவல் பலகாரம் என்று வீட்டில இருக்கிறதை எல்லாம் கொண்டு வருவாங்க. சொந்த பந்தங்கள் நண்பர்கள் எல்லாரும் குடுத்து சாப்பிடுவாங்க இதை விடவிளையாடுற ரீமுக்கு தண்ணி எல்லாம் பார்வையாளர்கள் எடுத்து வருவாங்க. இந்த களம் தான் சிலரது காதலுக்கு அத்திவாரம் போட்ட இடம். கிளித்தட்டு விளையாடும் இளவட்டத்தினர் தான்  கதாநாயகர்கள். கிளித்தட்டு விளையாடும் சாட்டில் தம் காதல் கதைகளையும் பேசி விடுவார்கள். பின்னர் கதை வெளியில் வரும் போது வயல் வெளி போர்க்களமாய் மாறி வரும். சில நேரம் மறுநாள் விளையாட்டு நடை பெறாது. ஆனாலும் எல்லாரும் வயல் வெளிக்கு வந்துவிடுவார்கள்;. நம் கதைகளை பேசி விட்டுசெல்வார்கள். எப்படியும் திரும்பவும் விளையாட்டு நடைபெறவேண்டும் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் இருக்கும். ஒருவளியாக காதலுக்கு ஒளியேற்றி வைத்து விடுவார்கள் பாட்டன் பாட்டிகள். அப்புறம் என்ன மறுநாளே வயல் வெளி களை கட்ட ஆரம்பித்து விடும். 
.
இப்படி எல்லாம் கதைகளையும் சந்தோஸங்களையும் தந்த இந்த வயல் வெளி விளையாட்டு பின் வந்த கால இடப் பெயர்வுகளில் கானாமல் போய்விட்டது. துக்கத்தின் நினைவுகளை மறக்க முடியாததே. வலி அடங்காத வரையில் வேதனை தீராது. வேதனையோ காயங்களையும் வடுக்களையும் பற்றிப் பேசச் சொல்லும். தொடர் காயங்களை சுமந்து வந்ததால் சந்தோஸங்களை நினைத்துப்பார்கவோ அனுபவிக்கவோ முடியவில்லை. தொடர் இடப்பெயர்வுகளும் உயிர்ப்பலிகளும் காணாமல் போதலும் வீட்டுக்குள்ளேயே கட்டிப் போட்டது. 

ஒன்றாய் திரிந்து ஒன்றாய் விளையாடிய நன்பனின் உயிற்ற  உடல் திடீர் திடீர் என காணமல் போனவர்கள் பெற்றோர்களின் தவிப்புகள் இளவட்டத்தினரை இரவில் கூட காண முடியாதிருக்கும். பொழதுகள் எல்லாம் மரண பயத்துடனே கழிய ஆரம்பித்தன. வயதான பாட்டன் பாட்டிகள் இந்த நிலையை பபார்த்து ஏங்கியே சிலர் இல்லாமலே போய்விட்டனர். இருந்தவர்களும் மனம் விட்டு சந்தோஸமாய் பேசியதில்லை தம் உறவுகளை எப்படி பாதுகாப்பது என்றே நாட்கள் கடந்தன. 




சோகங்களுக்கும் வலிகளுக்கும் பின்னர் பழக்கப்பட்டு விட்டனர் விஞ்ஞானத்தின் வளர்ச்சியும் அறிவியல் எழிச்சியும்  போட்டிகளையும் தேடல்களையும்  அதிகரித்தன. தொலைந்து போன சொந்தங்களும் உறவுகளின் இழப்புக்களும் இறுக்கமான மனம் கொண்ட சமுதாயமாக மாற்றியது. ஓய்வற்ற வேலை படிப்பு என்று இளவட்டத்தினர் பின்னர் சந்தோச உலகத்தை மறந்து விட்டனர். மேலைத்தேய விளையாட்டு அறிமுகமும் பாடசாலையில் போட்டிமுறை விளையாட்டுக்களும் எம்மில் தோற்றம் பெற்ற விளையாட்டு பின்வந்தவர்களுக்கு தெரியாமலே போய்விட்டது. கிரிக்கெட் வொலிபோல் போன்றன பின்னர் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தன. ஊர்களை கிரிக்கெட் மைதானமும் வொலிபோல் மைதானமும் இருக்கும். பக்கத்து ஊர் காரனும் நன்பர்களும் ஒன்றாய் விளையாடுவார்கள் யார் விளையாடுறார்கள் என்று அடையாளம் தெரியாததாலும் விளையாட்டு பற்றி தெரியாதாலும் வயதானர்கள் கூட இதை பார்ப்பதில்லை. உற்சாகப்படுத்த கூடயாரும் இல்லாமல் இந்த விளையாட்டு நடைபெறும். 


கிழமைக்கு கிழமை கிரிக்கெட் போட்டி நடைபெறுது. போட்டியில வெல்லனும் என்று நினைத்து விளையாடுவாங்க. சந்தோசமோ பன்பலோ எதுவுமே இல்லப்பா ஆனா அன்னைக்கு நாங்க விளையாடின கிளித்தட்டில இருந்த சந்தோசம் தெரியுமா.? வயல் வெளிய விட்டு வீட்டுக்கு பொறது என்டாலே விருப்பம் இருக்காது. என்று வயதானவர் கூறும் போது ஒரு நிமிடம் மெய் சிலிர்க்கின்றது. அவளவு சந்தோசமா அந்த விளையாட்டில என்று நினைக்க தோன்றுகின்றது.

பொங்கல் வருசம் வந்தாமட்டும் பாரம் பரிய நிகழ்சிகளில் இந்த கிளித்தட்டும் அரங்கேறும் எங்காவது ஒரிரு கழகங்கள் அதை அரங்கேற்றும். வென்றால் பரிசு என்று தான் விளையாடுறாங்க ஆனால் அதைபார்க்க ஒரு கூட்டம் வரும் அப்போது பார்ப்பவர்களின் நக்கல் பேச்சும் பன்பல்களும் விளையாட்டுபவர்களுக்கு எரிச்சல் ஊட்டுதாக இருந்தாலும் சந்தோசமாய் இருக்கின்றது. தொலைக்காட்சியின் ஊடாக பாரம் பரிய நிகழ்ச்சிகள் ஒலிபரப்பு செய்யப்படும் போது அனைவரும் கண்டு கிளித்தட்டையும் கண்டு கொள்ள கூடியதாக உள்ளது. அப்போது பாட்டன் பாட்டிகள் தம் இளவட்ட நினைவுகளை மீட்டிப்பார்ப்பார்கள். தம் பேரன் பேத்திகளுக்கு சொல்லி தம் ஆதங்கத்தை தீர்த்துக்கொள்கிறார்கள் 

விஞ்ஞானம் வள்ர்ந்தாலும் அறிவியல் வள்ர்ந்தாலும் எம் பாரம் பரியத்தின் தனித்துவமும் சந்தோசமும் கிடைக்குமா. கால மாற்றம் சந்தோஸங்களையும் மாற்றி விடுகின்றன. இன்றைய இளைஞர்களின் சந்தோஸங்களும் தேவைகளும் வேறுபட்டவை. அவர்கள் புதிய புதிய விடயங்களை தேடிப்பார்க்கவே விரும்புவார்கள். பழயன கழித்தலும் புதியன புகதலும் வழமையான ஒன்று என்று மனதை தேற்றிக்கொள்ள மட்டும்தான் முடியும்.  

Thursday, April 26, 2012

பிரிட்டிஷ் பொருளாதாரம் நெருக்கடியில்!

பிரிட்டிஷ் பொருளாதாரம் பொருளாதார நிபுணர்களின் எதிர்வுகூறல்களுக்கு மாறாக மீண்டும் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் பிரிட்டனின் பொருளாதாரம் 0.2 வீத வீழ்ச்சியைக் காட்டுகிறது. இதே போன்று இதற்கு முந்தைய காலாண்டிலும் பிரிட்டிஷ் பொருளாதாரம் வீழ்ச்சியை கண்டது.
டபுள் டிப் ரிஸஷன் எனப்படும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழுந்த மாத்திரத்திலேயே இன்னொரு சடுதியான வீழ்ச்சிக்குள் செல்லும் இரண்டாவது தடவை நெருக்கடியை 1970களுக்குப் பின்னர் பிரிட்டன் முதற்தடவையாக சந்திக்கிறது. நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்பதை காட்டும் புள்ளிவிபரங்கள் மிக மிக ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்று பிரதமர் டேவிட் கேமரன் கூறியுள்ளார்.

இப்பொருளாதார வீழ்ச்சிக்கு பிரதமரும் நிதியமைச்சர் ஜார்ஜ் ஆஸ்பர்ணுமே பொறுப்பு என்று எதிர்கட்சித் தலைவர் எட் மிலிபாண்ட் குற்றஞ்சாட்டியுள்ளார். அழிவை ஏற்படுத்தக் கூடிய பொருளாதார கொள்கைகளே இந்த நிலையை ஏற்படுத்தியுள்ளது என்றும் மிலிபாண்ட் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த திங்களன்று தானும் பொருளாதார நெருக்கடிக்குள் வீழ்ந்துவிட்டதாக ஸ்பெயின் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Wednesday, April 25, 2012

சீனாவில் மலசலகூடத்துக்குள் வசிக்கும் குடும்பம்

சீன குடும்பம் ஒன்று மலசலகூடத்தை வீடாக்கி வாழ்ந்து வருகின்றது. வடகிழக்கு சீனாவில் உள்ள   Jilin மாகாணத்தில் உள்ள குட்டிக் கிராமம் ஒன்றில் பிறந்தவர்  Zeng Lingjun.  ஆயினும் வீட்டு வறுமை காரணமாக பாடசாலைக்கு சென்று படிக்க இவரால் முடியவில்லை.
வளர்ந்து பெரியவர் ஆன பிற்பாடு கிராமத்தை விட்டு வெளியேறினார். அவரது மாகாணத்தின் மிக பெரிய நகரமான ளூநலெயபெ இற்கு வந்து சேர்ந்தார். இவர் மிகுந்த பிரயாசைக்காரர். திறமையாக செருப்பு தைப்பார். இதனால் இப்பெரிய நகரத்தில் மாதாந்தம் ஓரளவு நல்ல வருமானத்தை விரைவாகவே சம்பாதிக்க தொடங்கினார். ஆயினும் சொந்த வீடு ஒன்றை வாங்குகின்ற அளவுக்கு வசதி கிடைக்கவில்லை. நண்பர் ஒருவரிடம் இருந்து ஆறு வருடங்களுக்கு முன்னர் இவருக்கு ஒரு தகவல் கிடைத்தது.

கைவிடப்பட்ட ஹோட்டல் ஒன்றின் மலசலகூடம் ஒன்று மிக குறைந்த வாடகைக்கு கொடுக்கப்பட இருக்கின்றது என்பதுதான் தகவல். தேவையான பணத்தை இவர் கடனாக பெற்றுக் கொண்டார். மலசலகூடத்தை வாடகைக்கு பெற்றார். அதை வீடாக ஆக்கிக் கொண்டார்.

2008 ஆம் ஆண்டு இவர் ஒரு பெண்ணிடம் மனதை பறி கொடுத்தார். பெண்ணும் ஒரு பாட்டாளிதான். 2010 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். விரைவிலேயே ஒரு குழந்தைக்கு பெற்றோர் ஆயினர். தற்போது வரை இம்மலசலகூட வீட்டில்தான் வசிக்கின்றார்கள்.


உலகிலேயே மோசமான கணவர் ஐன்ஸ்டீன்தான்!?

உலகிலேயே மோசமான கணவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்தான் என்று ஒரு புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.
உலகிலேயே மிகப் பெரிய விஞ்ஞானியாக நாம் அனைவரும் ஐன்ஸ்டீனை நினைத்துக் கொண்டிருக்கையில் இப்படி ஒரு குண்டைப் போட்டுள்ளார் வால்டர் ஐசக்சன். இவர் எழுதிய 'நுiளெவநin: ர்ளை டுகைந யனெ ருniஎநசளந' என்ற நூலில்தான் உலகிலேயே மோசமான கணவர் ஐன்ஸ்டீன் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐன்ஸ்டீன் தொழில் ரீதியாக எத்தனையோ பெரிய சாதனைகளைப் படைத்திருந்தாலும் அற்புதங்களை நிகழ்த்தியிருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் எதையும் சாதிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

தன்னுடன் பணியாற்றிய விஞ்ஞானி மிலவா மாரிக்கைத்தான் கல்யாணம் செய்து கொண்டு வாழ்ககை நடத்தினார் ஐன்ஸ்டீன். இவர்களது திருமண வாழ்க்கை 11 ஆண்டு காலமே நீடித்தது. இந்த 11 ஆண்டு காலமும் அவரிடமிருந்து எந்தவிதமான காதல் அணுகுமுறையும் இருந்ததில்லையாம். இருவரும் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்காக சம்பிரதாயத்திற்காக சேர்ந்து வாழ்க்கை நடத்தினார்களாம்.

தனது மனைவியை வேலைக்காரி போல நடத்தி வந்தாராம் ஐன்ஸ்டீன். அன்பையும் பரிவையும் அவர் தனது மனைவியிடம் காட்டியதில்லையாம். 11 ஆண்டு கால வாழ்க்கைக்குப் பின்னர்தான் தனது திருமண வாழ்க்கை தோல்வியடைந்த ஒன்று என்று அவருக்குப் புரிய வந்ததாம். ஐன்ஸ்டீனின் மனைவி மாரிக் ஐரோப்பாவிலேயே முதல் முறையாக கணிதம் மற்றும் இயற்பியல் படித்த முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தனைக்கும் ஐன்ஸ்டீனை விழுந்து விழுந்து கவனத்திவர் மாரிக் என்பது குறிப்பிடத்தக்கது. ஐன்ஸ்டீனின் அறையை மிகச் சிறப்பாக அவர் பராமரித்து வந்தார். அவருக்கு மூன்று வேளை உணவை தவறாமல் அவரது அறைக்கே கொண்டு வந்து கொடுத்தார். உடைகளை சுத்தமாக துவைத்து தேய்த்துக் கொடுத்தார். படுக்கை அறையை சுத்தமாக வைத்திருந்தார். ஆனால் பதிலுக்கு மனைவிக்கு எந்த கைமாறும் செய்ததில்லையாம் ஐன்ஸ்டீன்.

மாறாகஇ மனைவிக்கு பல நிபந்தனைகளைப் போட்டு வைத்திருந்தாராம அவர். அதாவது அருகில் வந்து உட்காரக் கூடாது வெளியில் கூட்டிச் செல்லுமாறு வற்புறுத்தக் கூடாது. தேவையில்லாமல் தன்னுடன் பேசக் கூடாது வெளியுலக தொடர்புகளை அதிகம் வைத்துக் கொள்ளக் கூடாது.. இப்படிப் போகிறது ஐன்ஸ்டீனின் நிபந்தனை லிஸ்ட்.

அதை விட கொடுமை தன்னுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று தனது மனைவி எதிர்பார்க்கக் கூடாது என்றும் கூறியிருந்தாராம் ஐன்ஸ்டீன். எந்த வகையிலும் தன்னைக் கவர முயற்சிக்க் கூடாது. அனுமதி இல்லாமல் பேசக் கூடாது என்பதும் அந்த நிபந்தனைகளில் ஒன்று.

11 ஆண்டு கால வேதனை வாழ்க்கைக்குப் பின்னர் ஐன்ஸ்டீனை விட்டு அவரது மனைவி பிரிந்து சென்றார். கூடவே தனது பிள்ளைகளையும் அழைத்துச் சென்று விட்டார்.

ஐன்ஸ்டீன் நடத்திய இந்த லட்சணமா இல்லறத்தில் பிறந்த குழந்தைகள் இருவர். ஒருவர் ஹான்ஸ் ஆல்பர்ட். இன்னொருவர் எட்வர்ட். 1902ம் ஆண்டு லிசரல் என்ற மகள் பிறந்தார். பின்னர் அவரைத் தத்துக் கொடுத்து விட்டனர். பிள்ளைகளோடு ஜூரிச் சென்ற மாரிக் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் 1919ம் ஆண்டு விவாகரத்து கோரினார். அது பின்னர் கிடைத்தது.

அதன் பின்னர் ஐன்ஸ்டீன் 1919ம் ஆண்டே எல்சா என்பவரை மணந்தார். பி்ன்னர் அவரது செயலாளர் பெட்டி நியூமன்னுடனும் உறவு ஏற்படுத்திக் கொண்டார். அதன் பின்னர் வேறு ஒரு பெண்ணுடனும் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது.

ரிலேட்டிவிட்டி தியரியை உலகுக்கு அறிவித்த ஐன்ஸ்டீனால் ரிலேஷன்ஷிப்பை பராமரிக்க முடியாமல் போனது வியப்புக்குரியதுதான்...

Monday, April 23, 2012

கனடாவில் ஆரம்பமாகும் பனிப்புயல்: வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை

கனடாவின் ஓண்டேரியோ பகுதியில் இதமான வெப்பம் குறைந்துள்ளது. இன்னும் சில தினங்களில் பனிப்புயல் வீசப்போவதாக என்விரான்மெண்ட் கனடா என்ற வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
மெக்ஸிகோ வளை குடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு நோக்கி ஓண்டேரியோவுக்குள் வீசும்போது பனி பனிக்கட்டி மழை மற்றும் மழை எனப் பல பரிமாணங்களில் வெளிப்பட வாய்ப்பு உள்ளது. இந்நிகழ்வு ஞாயிறு இரவு தோன்றி திங்கள் முதல் செவ்வாய் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஓண்டோரியோவின் தென்மேற்கு மற்றும் மத்திய தென் பகுதிகளில் திங்கட்கிழமை வாடைக்காற்று மணிக்கு 70 கி.மீ வேகத்தில் வீசும். அன்று 7 டிகிரி–10 டிகிரி என்கிற சராசரி வெப்பத்தை விடக் குறைவாக இருக்கும் காற்றின் வேகம் செவ்வாய்க்கிழமை தணியக்கூடும்.

கொட்டும் பனியானது கிங்ஸ்டன் ஒட்டாவா பீட்டர்பரோ ஹேமில்டன் மற்றும் டொரொண்டோவில் ஆகிய பகுதிகளில் பரவலாக இருக்கும். ஹேலியர்டன் பீட பூமியில் உறைபனி 5 முதல் 10 செ.மீ வரை படர்ந்திருக்கும். ஒண்டேரியோவின் மத்திய தென் பகுதியில் ஒன்று அல்லது இரண்டு செ.மீ. வரை பனி உயர வாய்ப்புள்ளது.

கிழக்குப் பகுதியில் முதலில் சில செ.மீ வரை உயரும் பனி மழையானது பின்பு 25 மி.மீ. வரை உயர்ந்து அந்தப் பகுதி முழுவதையும் குளிர்விக்கும். எச்சரிக்கை விடும் அளவிற்கு இப்பனி ஆபத்தானது இல்லை என்றாலும் இந்தக் காலகட்டத்திற்கு தற்போதைய பனியின் அளவு அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு மாலை லேக் தூய ஜீன் பகுதியில் 20 செ.மீ. உயரத்திற்கு பனி படரும். இந்தப்ப பனிப்புயலால் கார்இ வண்டி ஓட்டுவது கடினமாக இருக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.

இறந்த பின் மனைவியை புதைப்பதற்காக குட்டி தீவை விலைக்கு வாங்கிய பள்ளி ஆசிரியர்

இறந்த பிறகு தனது உடலையும் மனைவியின் உடலையும் புதைப்பதற்காக இங்கிலாந்தில் குட்டி தீவை விலைக்கு வாங்கி உள்ளார் பள்ளி ஆசிரியர் கசிமிர் ரோசின்ஸ்கி இங்கிலாந்தின் ஹெர்ட்போர்ட் ஷயர் கவுன்டியில் உள்ளது செயின்ட் ஆல்பன்ஸ் நகரம். இங்கு மெக்கன்சி என்ற பெயரில் குட்டி தீவு உள்ளது.
இங்கு தண்ணீர் சாலைகள் மின்சார வசதி எதுவும் இல்லை. இந்த குட்டி தீவு 18 மாதத்துக்கு முன்பு விலைக்கு வந்தது. ஆனால் யாரும் வாங்கவில்லை. இந்நிலையில் செயின்ட் ஆல்பன்ஸ் நகரில் உள்ள பீச்வுட் பார்க் பள்ளி ஆசிரியர் கசிமிர்  ரோசின்ஸ்கி குட்டி தீவை 46 லட்சம் ரூபாய்க்கு வாங்கி உள்ளார்.

கசிமிருக்கு தற்போது 50 வயதாகிறது. மனைவி பவுலின் மகன் மைல்ஸ்(12) மகள் லிடியாவுடன்(11) வாழ்ந்து வருகிறார்.

இதுகுறித்து கசிமிர் கூறியதாவது: மூன்று ஆண்டுக்கு முன்பு குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டேன். அது என்னை மிகவும் பாதித்தது. இறந்த பின் எனது உடலை அமைதியான இடத்தில் புதைக்க வேண்டும் என்று விரும்பினேன்.

அதற்காக இந்த தீவை வாங்கி உள்ளேன். தீவுக்கு செல்வது அவ்வளவு எளிதல்ல என்பது தெரியும். எனினும் உலகின் அழகிய இடங்களில் மெக்கன்சி தீவும் ஒன்று.

நானும் எனது மனைவியும் இறந்த பின் இருவரின் உடலையும் இந்த தீவில் தான் புதைக்க வேண்டும் என்று குழந்தைகளிடம் கூறியுள்ளேன். அதை அவர்கள் செய்வார்கள் என்று நம்புகிறேன் என்றார்.

பார்வையை ஓட விடுவதில் ஆண்களை விட பெண்களே 'லீடிங்'!

அழகான பெண் எதிரே வந்தால் அவர்களை ஆண்கள் பார்ப்பது சகஜம்தான். அதேபோலத்தான் பெண்களும். ஆனால் தங்களது ஜோடிகளுடன் போகும்போது எதிர்பாலினர் மீது பார்வையை ஓட விடுவதில் பெண்கள்தான் லீடிங்கில் இருக்கிறார்களாம்.
இதை ஒரு ஆய்வு நடத்திக் கண்டுபிடித்துள்ளனர் - வேற யாரு வழக்கம் போல வெளிநாட்டுக்காரங்கதான். சுற்றுலாத் தலங்களுக்கு ஜாலியாக டிரிப் வந்த ஜோடிகளைப் பிடித்து கருத்துக் கேட்டுள்ளனர். அதில் 56 சதவீத ஆண்கள் தங்களை கிராஸ் செய்த தங்கள் கண்ணில் பட்ட அழகான பெண்களை சைட் அடித்ததாக ஒத்துக் கொண்டனராம்.

அதேசமயம் கிட்டத்தட்ட 74 சதவீத பெண்கள் ஆமா சைட் அடிச்சேன் என்று ஒத்துக் கொண்டார்களாம்.

இப்படி சைட் அடித்ததாக ஒத்துக் கொண்ட பெண்களில் 77 சதவீத பெண்கள் தாங்கள் அடுத்த ஆணை சைட் அடித்ததை கணவர் பார்த்து விடாதவாறு மறைக்க முயற்சி செய்ததாக கூறினராம். இவர்கள் இதற்காக கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு 'பாதுகாப்பாக' சைட் அடித்தார்களாம். அதேபோல கணவர் ஏதாவது பொருள் வாங்க 'அந்தாண்டை' நகர்ந்ததும் இவர்கள் 'இந்தாண்டை' சைட் அடித்தார்களாம்.

சில பெண்கள் தங்களை விட அழகாக இருந்த பெண்கள் மீது பார்வையை ஓட விட்டனராம். நம்ம ஆள் அவளைப் பார்த்தாரா என்றும் வேவு பார்த்துக் கொண்டார்களாம்.

இந்த கருத்துக் கணிப்பு குறித்து அதை நடத்தி நிறுவனத்தின் இணை உரிமையாளர் கிறிஸ் கிளார்க்சன் கூறுகையில் ஆணோ பெண்ணோ வெளியிடத்திற்குச் ஜோடியாக போகும்போது இருவருமே எதிர்பாலினரைப் பார்க்கத்தான் செய்கிறார்கள். இருப்பினும் இதில் பெண்களே முதலிடத்தில் இருப்பது வியப்பான ஒன்று என்றார்.

இதில் வியப்பதற்கு என்ன இருக்கிறது. இரு பாலினருக்கும் உணர்வுகள் ஒன்றுதானே...!

தப்பி‌யோடிய 140 கைதிகள் சிறைக்குத் திரும்பினர்!

பாகிஸ்தான் சிறையிலிருந்து தப்பி‌யோடிய 140 கைதிகள் நேற்று சிறைக்கு திரும்பினர். பாகிஸ்தான் பானூர் நகர் சிறையில் கடந்த 15-ம் தேதி தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 384 கைதிகள் தப்பியோடினர். இவர்களில் பயங்ரவாதிகளும் அடங்குவர்.
இந்நிலையில் நேற்று 140-க்கும் மேற்பட்டோர் சிறைக்கு திரும்பினர். இது குறித்த மாகாண உள்துறை செயலர் அசம்கான் கூறுகையில் மொத்தம் 384 பேர் தப்பியோடினர். இவர்களில் 108 பேர் தானாக வந்த சரணடைந்தனர். 35 பேர் கைது செய்யப்பட்டனர். என்றார்.

சூரியனிலிருந்து வெளிவரும் ஒளிக்கற்றைகளை நாசா படம் பிடித்து வெளியிட்டுள்ளது.

சூரியனிலிருந்து வெளிவரும் ஒளிக்கற்றைகளை நாசா படம் பிடித்து வெளியிட்டுள்ளது. சூரியனின் கிழக்குப் பகுதியில் இருந்து வெளியாகிய ஒளிக்கற்றைகளே இவ்வாறு படம் பிடிக்கப்பட்டுள்ளன. நாசாவின் செயற்கைக்கோள் ஒன்றே இதனை படம்பிடித்துள்ளது.
நாசா பல்வேறு ஆய்வுகளை செய்து வருகின்ற போதும் இவை மனித குலத்திற்கு சாதகமாதா ? அல்லது பாதகமானதா? என்பது குறித்தும் வாதங்கள் நடைபெற்று வருகின்றன இயற்கைக்கு முரனானதாக செய்யப்படும் இந்த ஆய்வுகள் மனிதனின் ஆபத்தை விளைவிற்குமா? நாசா வின்வெளி ஆய்வுகள் எதிர்கால சந்ததிக்கு ஒரு வளியை ஏற“படுத்தி விடும் முயற்சியில் இறங்கியுள்ளமை வரவேற்கத்தக்கது. 

வரலாற்றுக்காலத்துக்கு முந்திய விலங்குகளின் படிமங்கள் கண்டுபிடிப்பு!

அர்ஜென்டினாவில் நடந்த புதைபொருள் ஆராய்ச்சியில் பிரமாண்ட எறும்பு தின்னி வகைகள் யானை போன்ற விலங்குகளின் படிமங்கள் கிடைத்துள்ளன. வழக்கொழிந்த விலங்குகள் பற்றிய பல சுவாரஸ்ய தகவல்கள் இந்த ஆராய்ச்சியில் தெரியவரும் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் பகுதியில் உள்ள சுரங்கங்களில் அகழ்வாராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் சுமார் 300க்கும் அதிகமான விலங்குகளின் படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இவை அனைத்துமே வரலாற்று காலத்துக்கு முந்தையதாக இருக்கலாம் என்பது முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

பியூனஸ் அயர்ஸ் அருகில் உள்ள மார்க்கோஸ் பாஸ் என்ற பகுதியில் உள்ள சுரங்கத்தில் 1000 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த படிமங்கள் அனைத்தும் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். லா பல்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் டேவிட் பியாசா தலைமையில் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் இவை கண்டறியப்பட்டுள்ளது. இதில் பல அரிய மற்றும் வழக்கொழிந்த விலங்குகளின் படிமங்கள் ஏராளமாக உள்ளது என்றும் தொடர்ந்து நடைபெறும் ஆய்வில் இவை குறித்த விரிவான தகவல்கள் தெரியவரும் என்றும் தலைமை ஆராய்ச்சியாளர் டேவிட் பியாசா தெரிவித்துள்ளார்.

எறும்புத் தின்னிகள் போன்ற உருவ அமைப்பில் இருக்கும் கிளிப்டோடான் யானைகளின் மூதாதை விலங்காக கருதப்படும் மாஸ்டோடான் ஆகியவற்றின் படிமங்களும் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக மேலும் ஆராய்ச்சி நடந்து வருகிறது. தற்போதுள்ள விலங்குகள் உருவான விதம் வழக்கொழிந்த விலங்குகள் பற்றிய பல தகவல்கள் ஆராய்ச்சியில் தெரியவரும் என்று நம்புகிறோம் என்றும் கூறினார்.

தினமும் ஒரு பாக்கெட் : சிகரெட் பழக்கத்தை கைவிட்டான் 8 வயது சிறுவன்!

இந்தோனேஷியாவில் பெற்றோ ருடன் வசிக்கும் 8 வயது சிறுவன் இல்ஹாம் தொடர் புகைப்பழக்கத்துக்கு அடிமைப் பட்டிருந்தான். அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடந்த 4 வருடங்களாக குழந்தையின் இப்பழக்கத்தை நிறுத்த பல முயற்சிகளை மேற்கொண்டும் அவனால் புகைப்பதை நிறுத்த முடியவில்லை. சிகரெட் கொடுக்காவிட்டால் அழுது புரண்டு தான் நினைத்ததை சாதித்துக் கொள்வான். தினமும் குறைந்தது ஒரு பாக்கெட் சிகரெட்டை ஊதித் தள்ளுவது வழக்கமாக இருந்தது.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளான பெற்றோர் மிகவும் மனமுடைந்து காணப்பட்டனர். இந்நிலையில் தனது 4 வருட இந்த பழக்கத்தை தற்போது சிறுவன் விட்டுவிட்டான். அந்நாட்டு குழந்தைகள் நலவாழ்வு மையம் கடந்த மார்ச் மாதம் முதல் இல்ஹாமுக்கு அளித்த தொடர் சிகிச்சையில் தற்போது அவன் இப்பழக்கத்தில் இருந்து முற்றிலும் விடுபட்டுள்ளான் என்று குழந்தையின் பெற்றோர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

Saturday, April 21, 2012

இலங்கையில் கோழி "பிரசவித்தது'!!வழக்கத்திற்கு மாறாக முட்டைக்குப் பதிலாக கோழி குஞ்சு பொரித்த அதிசயம்

வழக்கத்திற்கு மாறாக முட்டைக்குப் பதிலாக கோழி குஞ்சு பொரித்த அதிசயம் இலங்கையில் நடந்துள்ளது. உலகில் இன்னமும் விடை காணப்பட முடியாமல் பல்வேறு பட்டிமன்றங்கள் உட்பட விவாத மேடைகளில் முக்கிய தலைப்பாக இருந்து வருவது "கோழி முதலா அல்லது முட்டை முதலா' என்பது தான். பொதுவாக முட்டையிட்டதும் கோழி அதன் மீதமர்ந்து அடை காக்கும். கோழியின் உடல் வெப்பத்தால் முட்டையில் இருந்து சில நாட்களுக்குப் பின் கோழிக் குஞ்சு வெளிவரும். இது தான் வழக்கம். ஆனால் இலங்கையில் கோழியொன்று முட்டையிடாமல் நேரடியாக குஞ்சை பிரசவித்த சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து கொழும்புவில் உள்ள கால்நடை மருத்துவர் பி.ஆர்.யாப்பா என்பவர் கூறுகையில் "இந்த கோழியின் கருப்பையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக கோழியின் வயிற்றிலேயே முட்டை தங்கிவிட்டது. கோழிக்குள்ளேயே இருந்த முட்டையிலிருந்து 21 நாட்கள் கழித்து குஞ்சு வெளிவந்துள்ளது. குஞ்சை பிரசவித்த கோழி அடுத்த சில நிமிடங்களில் இறந்து விட்டது. கோழி இறந்ததற்கான காரணம் குறித்து நடத்தப்பட்ட பரிசோதனையில் உள்காயங்கள் காரணமாகத் தான் கோழி இறக்க நேரிட்டது என்பது தெரியவந்தது.

Friday, April 20, 2012

தமிழீழம் குறித்து பேசும் கருணாநிதி பயங்கரவாதி: கோத்தபாய பாய்ச்சல்

தமீழீழம் குறித்து பேசுபவர்களை பயங்கரவாதிகளாக கருதுவதாகவும் தமீழீழத்தை இந்தியாவில் வைத்துக் கொள்ளும் படியும் இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச தம்பி கோத்தபாய ஆவேசமாக கூறியுள்ளார்.
தனித் தமிழீழம் அமைக்க ஐ.நாவின் கண்காணிப்பில் பொதுவாக்கெடுப்பு நடத்தும் யோசனைக்கு திமுக தலைவர் மு.கருணாநிதி ஆதரவு தெரிவித்துள்ளதை அடுத்தே அவரைக் கடுமையாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச விமர்சித்துள்ளார். இலங்கையில் வாழும் தமிழர்களை விட மிகவும் அதிகமான தமிழர்கள் தமிழ்நாட்டில் வாழ்கின்றனர். அவரால் இலங்கையில் ஈழத்தை உருவாக்க முடியாது. இது ஒரு இறைமையுள்ள நாடு.

ஈழம் பற்றி யார் பேசுகிறார்களோ அவர்களை நாம் பயங்கரவாதிகளாகவே கருதுகிறோம். இலங்கையில் இப்போது போர் இல்லை. இன இணக்கப்பாடு உள்ளது.

எல்லோருடைய வாழ்வும் அமைதியாக உள்ளது. இலங்கையில் உள்ள தமிழ் மக்களை கருணாநிதி தூண்டிவிடக் கூடாது.

சர்ச்சைக்குரிய அறிக்கைகளின் மூலம் எமது நாட்டை அழிக்கும் இந்திய அரசியல்வாதிகளில் கருணாநிதியும் ஒருவர். இது அரசியல் ஆதாயத்துக்கான தரம்குறைந்த தந்திரோபாயம்.

எமது நாடு சுதந்திரமான ஒரு நாடு என்பதை கருணாநிதி புரிந்து கொள்ள வேண்டும். ஈழத்தை உருவாக்க அவர் முயற்சிக்கக் கூடாது.

அவருக்கு ஈழத்தை அமைக்கும் விருப்பம் இருந்தால் அதை பெருமளவு தமிழர்கள் வசிக்கும் தமிழ்நாட்டில் உருவாக்கட்டும் என கோத்தபாய ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்

சுவிஸ்சில் புலம்பெயர்ந்து வருவோருக்கான புதிய திட்டம்

எட்டு ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் புலம் பெயர்ந்து ஸ்விட்சர்லாந்து வருவதற்கு மீண்டும் ஒதுக்கீடு கொண்டுவரும் அரசின் திட்டம் குறித்து பல பத்திரிகைகள் தங்களின் கருத்துக்களை வெளியிட்டுள்ளன.
ஐரோப்பிய நாடுகளான போலந்து வங்கேரி செக் குடியரசு ஸ்லோவேனியா சுலோவேகியா மற்றும் லித்துவேனியா பால்டிக் நாடுகள் லாத்வியா எஸ்டோனியா போன்றவற்றிலிருந்து 2000பேர் வரை ஸ்விட்சர்லாந்திற்கு புலம்பெயர்ந்து வர புதிய ஒதுக்கீட்டுத் திட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் 12 மாதம் வரை இங்கு தங்கலாம். இந்தத் திட்டம் குறித்து பத்திரிகைகள் தமது விமர்சனத்தை வெளியிட்டுள்ளன. அவற்றில் சில ஆதரவும் சில எதிர்ப்பும் தெரிவித்துள்ளன.

ஐரோப்பிய யூனியனுக்கும் ஸ்விட்சர்லாந்துக்கும் இடையிலான இரு தரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் மக்கள் எவ்விதக் கட்டுப்பாட்டுமின்றி ஐரோப்பாவிற்குப் போய் வர இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மே முதல் நாளிலிருந்து அறிமுகமாகும் இத்திட்டம் மறு ஆய்வுக்கு உட்பத்தப்படும்.

ஸ்விட்சர்லாந்துக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையிலான நல்லுறவு இதனால் மேம்படும் என்றாலும் இத்திட்டத்தினை செம்மையாக நிறைவேற்றுவது குறித்தும் இதன் விளைவுகள் குறித்தும் பல பத்திரிகைகள் தலையங்கம் தீட்டியுள்ளன.


ஜேர்மனியில் கார் ஓட்டுவதற்கு உரிமம் பெறும் வயதை 16ஆக அறிவிக்க முடிவு

ஜேர்மனியில் கார் ஓட்டுவதற்கு உரிமம் பெறும் வயதை 16ஆக அறிவிக்க அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் பல்வேறு புதிய விதிமுறைகளும் அறிமுகமாக உள்ளது.
தற்போதைய சட்டப்படி ஜேர்மனியில் 17 வயதினர் பெற்றோர்களின் மேற்பார்வையுடன் கார் ஓட்டலாம்.
நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சகத்தின் நாடாளுமன்ற அரசுச் செயலரான பீட்டர் பிளெசர் கார் ஓட்டுவதற்கு உரிமம் பெறும் வயதை 18ஆக அறிவிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் குறிப்பாக கிராமப்புறங்களில் வசிக்கும் இளைஞர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவர் என்றார்.

இவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தொழிற் பயிற்சிக்கு செல்லும் கிராமப்புற இளைஞர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகுகின்றனர் இவர்களை 16 வயதிலேயே கார் ஓட்ட அனுமதித்தால் கிராமங்களில் தங்குவதையும் விரும்புவர். இவர்கள் கார் ஓட்டுவதற்கு பெற்றோரின் அனுமதியையும் பெறும் படி வலியுறுத்த வேண்டும் என்றார்.

ஜேர்மனியின் விபத்துக் காப்பீடு ஆய்வுக் குழு 16 வயதினர் கார் ஓட்டுவதால் விபத்துகள் அதிகரிக்கும் என்ற கருதுகிறது. வயதான நபர்களை விட 18 முதல் 24 வயதினர் அதிகமாக விபத்துகளில் சிக்குகின்றனர் என்பதால் இக்குழு 16 வயதில் கார் ஓட்ட அனுமதி வழங்குவது ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் கண்டனம் தெரிவிக்கின்றது.

தினமும் 1 பாக்கெட் சிகரெட் பிடிக்கும் 8 வயது சிறுவன்

இந்தோனோஷியாவை சேர்ந்தவன் இப்ராகிம். 8 வயது சிறுவனான இவன் தினமும் 1 பாக்கெட் சிகரெட் பிடிக்கிறான்.
ஒரு வயது குழந்தையாக இருந்த போது இவனுக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் ஏற்பட்டது. தற்போதுஇ 4 வயதில் இருந்து 1 பாக்கெட் சிகரெட் பிடித்து வருகிறான். இதை அறிந்த அந்நாட்டு குழந்தைகள் நலவாழ்வு துறை அவனது சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை கைவிட தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கடந்த மாதம் (மார்ச்) முதல் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Wednesday, April 18, 2012

செசன்யாவில் டைனோசர் முட்டைகள்

செசன்யா நாட்டில் டைனோசர் நாற்பதுக்கும் மேற்பட்ட முட்டை படிமங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. ரஷியாவைச் சேர்ந்த புவியியல் ஆய்வாளர்கள் இதனை கண்டு பிடித்துள்ளனர்.
60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்த பூமியில் வாழ்ந்தவை டைனோசர்கள். பூமியில் வாழ்ந்த விலங்குகளிலே மிகவும் பிரம்மாண்டமானவை அவை. புவியியல் மாற்றங்களினால் காலப்போக்கில் அவை அழிந்து விட்டாலும் அவற்றின் எலும்புகள் முட்டைகள் மட்டும் படிமங்களாக உலகம் முழுவதும் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.

செசன்யா நாட்டில் ஆய்வு செய்ய புவியியல் ஆய்வாளர்கள் அங்கு ஒரு பாறையில் இருந்த 40 டைனோசர் முட்டை படிமங்களை கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து செசன் மாநில பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை பேராசிரியர் கூறியதாவது

முன்னாள் சோவியத் ஜார்ஜியாவின் எல்லைப் பகுதியில் இருந்த மலையை சாலைப் பகுதிக்காக உடைத்து எடுத்த போது அந்த மலையில் ஓவல் வடிவ படிமங்கள் அதிகம் இருந்தன. அவற்றை புவியியல் நிபுணர்கள் அடங்கிய குழு ஆய்வு செய்த போது அவை டைனோசர் முட்டை படிமங்கள் என்பது தெரியவந்தது.

அந்த பாறையை மென்மையாக உடைத்து தனியாக சேகரித்ததில் 40 முட்டை படிமங்கள் கிடைத்தன. அவை 25 செமீ முதல் 1 மீ வரை உள்ளன என்றார். டைனோசர் முட்டை உள்ள பகுதியை சுற்றுலா தலமாக செசன்யா அரசு முடிவு செய்துள்ளது.

செசன்யா நாட்டில் 1994 முதல் 2001 வரை போர் நடைபெற்றது. ரஷ்யாவின் நிலப்பகுதி என்று ரஷ்யாநாட்டினரும் நாங்கள் சுதந்திர நாட்டை சேர்ந்தவர்கள் என்று செசன்யா நாட்டினரும் தெரிவித்து வருகின்றனர். தற்போது போர் முடிவுக்கு வந்ததை அடுத்து செசன்யாவை புணரமைக்க பல மில்லியன் டாலர் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் செசன்யாவிற்கு சுற்றுலா பயணிகள் வருவதை ஊக்குவிக்கும் வகையிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செசன்யா நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலகில் மிகவும் அசிங்கமான பறவை

பிறந்த உடனே இறக்கைகள் ஏதும் இல்லாமல் வினோதமாக தோற்றமளித்ததால் நெல்சன் என்ற இந்த பறவை தனது பெற்றோர்களால் கைவிடப்பட்டது.
ஜேர்மனியில் உள்ள Bergzooவில் நெல்சன் கடந்த மாதம் பிறந்தது.
பிறந்த உடனேயே இதன் பெற்றோரால் நிராகரிக்கப்பட்டதால் நான்கு வாரங்கள் ஐnஉரடியவழச-ல் வைத்து பராமரிக்கப்பட்டது. இருப்பினும் தனக்கு என்றாவது ஒருநாள் இறக்கை முளைக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த பறவை உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

டிஸ்கவரி விண்கலம் ஓய்வுபெற்றது!

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா 1984 இல் உருவாக்கிய விண்கலம் டிஸ்கவரி. 18ம் நூற்றாண்டை சேர்ந்த இங்கிலாந்து ஆராய்ச்சி கப்பலின் பெயரை நினைவு கூர்ந்து இப்பெயர் வைக்கப்பட்டது. 1984ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி பயணம் தொடங்கிய டிஸ்கவரி 27 ஆண்டுகளில் 39 முறை வெற்றிகரமாக பறந்து தனது கடைசி பயணத்தை கடந்த ஆண்டு மார்ச் 9ம் தேதி நிறைவு செய்தது.
மொத்தத்தில் 365 நாட்கள் (ஒரு ஆண்டு) விண்ணில் இருந்து சாதனை படைத்திருக்கிறது. இதையடுத்து பணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கப்பட்டது. வர்ஜீனியா மாநிலம் சான்டிலி நகரில் உள்ள தேசிய விண்வெளி அருங்காட்சியகத்துக்கு நாசா 747 விண்கலம்தாங்கி விமானம் மூலம் நேற்று எடுத்து செல்லப்பட்டது. முன்னதாக தலைநகர் வாஷிங்டன் பகுதியில் முக்கால் மணி நேரம் வட்டமடித்த டிஸ்கவரிக்கு மக்கள் பிரியாவிடை கொடுத்தனர்.

காந்தி ரத்தம் படிந்த புல் ரூ.8 லட்சத்துக்கு ஏலம்: கண்ணாடி ரூ.28 லட்சத்துக்கு ஏலம் போனது

லண்டனை சேர்ந்த பிரபல ஏல நிறுவனமான முல்லாக் மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்களை ஏலம் விடப்போவதாக அறிவிப்பு வெளியிட்டது. இந்த ஏலத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அதையும் மீறி காந்தி பயன்படுத்திய பொருட்கள் ஏலத்தில் விடப்பட்டன.
இந்த ஏலத்தின்போது காந்தியின் ரத்தம் படிந்த புல் மண் ஆகியவை ரூ.8.2 லட்சத்துக்கு ஏலம் போனது. இந்த ரத்தம் படிந்த புல் 1948-ம் ஆண்டில் காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட போது அந்த இடத்தில் இருந்து சேகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ரத்தம் தோய்ந்த புல்லும் மண்ணும் கண்ணாடியால் ஆன மேல்புறத்தை கொண்ட ஒரு பெட்டியில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் உண்மை தன்மையை உறுதி செய்வதற்கான கடிதமும் அதில் வைக்கப்பட்டிருந்தது.

இதேபோல காந்தி பயன்படுத்திய கண்ணாடி ராட்டை போன்றவை எதிர்பார்த்ததை விட 2 மடங்கு தொகைக்கு ஏலம் கேட்டகப்பட்டன. கண்ணாடி ரூ.28 லட்சத்துக்கும் ராட்டை ரூ.21 லட்சத்துக்கும் ஏலம் விடப்பட்டன. ஏலம் விடப்பட்ட கண்ணாடி 1890-ம் ஆண்டு கால கட்டத்தில் காந்தி லண்டனில் வாங்கியதாகும். காந்தி எழுதிய கடிதங்கள் ஆன்மீக தகவல்கள் அடங்கிய பழங்கால இசைத்தட்டு மற்றும் ஆவணங்கள் போன்றவையும் ஏலம் விடப்பட்டன. 

கொட்டும் பனியால் ஏற்பட்ட கொடூரங்கள்

சுவிட்சர்லாந்தில் முன்பு இல்லாத அளவிற்கு போன ஆண்டு குளிரும் பனியும் அதிகமாக இருந்தது. பனிச்சரிவால் பலர் உயிரிழந்தனர். டேவோஸில் உள்ள பனி மற்றும் பனிச் சரிவு ஆய்வு நிறுவனம் செவ்வாயன்று ஓர் ஆய்வு அறிக்கையை வெளியிட்டது.
இதில் 2012 ஏப்ரல் 15க்குள் பனிச்சரிவால் 26 பேர் இறந்துள்ளனர். சராசரியாக ஒரு ஆண்டிற்கு 25 பேர் உயிரிழப்பதுண்டு. இந்த எண்ணிக்கை வெளிவந்த அன்றே மேலும் இருவர் பனிச்சரிவில் பலியாயினர்.
பேசெல் நாட்டைச் சேர்ந்த ஐவர் குழு உச்சிப் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டபோது ஒருவர் உயிரிழந்தார் இன்னொருவர் காயமடைந்தார்.

மற்றொரு சம்பவத்தில் ஒரு டச்சுக்காரர் வலாய்ஸ் மாநிலத்தில் உச்சிப் பனிச்சறுக்கு விளையாடிய போது பனிச்சரிவில் சிக்கிக் கொண்டார். அவர் நண்பர் எச்சரிக்கை மணியை ஒலித்து பனிமூடிய உடலை மீட்டெடுத்தார்.

இந்தப் பனிக்காலம் ஏற்ற இறக்கத்துடன் இருந்ததாக ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது. 1953 முதல் டிசம்பர் மாதத் தொடக்கம் வரை பனி குறைவாக இருக்கும். டிசம்பர் ஜனவரி மாதங்களில் பனிப்பொழிவு அதிகரிக்கும். பாதி இடங்களுக்கும் மேலாக இந்தப் பனிப்பொழிவு இந்த ஆண்டு 23 மடங்கு அதிகரித்தது வலாய்ஸ் மாநிலத்தில் சமேதனிலும் பனிப்பொழிவு சாதனையை ஏற்படுத்தியது.

அறுபதாண்டுக்கு முன்பிலிருந்து பனிபடர்ந்த உயரத்தை அளந்து வருகின்றனர். இந்த ஆண்டு டேவோஸில் உள்ள வீஸ் ஃபளுஜோக் என்ற இடத்தில் 270 செ. மீட்டர் உயரத்திற்கு பனி படர்ந்திருந்தது. 1951 இல் படர்ந்த பனியைக் காட்டிலும் தற்போது 20 செ.மீ அதிக உயரத்திற்கு பனி பொழிந்துள்ளது.

மிகப்பெரிய மலைக்கணவாய்கள் எல்லாம் பனிச்சரிவு ஆபத்து காரணமாக மூடப்பட்டுவிட்டன. இந்த ஆண்டில் மே மாதக் கணவாய்கள் மூடப்பட்டிருக்கும் சென்ற ஆண்டு இதை விடச் சீக்கிரமாக திறந்து விடப்பட்டது.

தூய கோத்தார்டு கனவாய் மே 23ம் நாள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போன வருடம் ஏப்ரல் கடைசியிலேயே இந்தக் கனவாய் திறக்கப்பட்டது. பெர்ன் மற்றும் ஊரிக்கு இடையில் உள்ள சூஸ்டென் கனவாய் ஜுன் 22 வரை மூடப்பட்டிருக்கும். சென்ற ஆண்டு இந்தக்கணவாய் மே கடைசி வரை மட்டுமே மூடப்பட்டிருந்தது.

ஊரி மாநிலத்தில் உள்ள ஆண்டர்மட் மற்றும் கிராவு பூண்டென் மாநிலத்தில் உள்ள சேட்ரூனை இணைக்கும் ஓபர் ஆல்ப் மலைக்கணவாய் தான் சீக்கிரமாகத்த திறக்கப்படுகிறது.

 ஃபுலூயெலா ஸ்புலூன் மற்றும் ஸான் பெர்னாடினோ போன்றவை மே மாதத் தொடக்கத்தில் மக்களின் போக்குவரத்துக்குத் திறந்துவிடப் படலாம். இந்தக் கணவாய்களும் கிராவு பூண்டென் மாநிலத்தில் காணப்படுகின்றன.

ஒபாமா தலைக்கு விலை அறிவித்த இங்கிலாந்து கோடீஸ்வரர்!

மும்பையில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதியான ஹபிஸ் சயீத் தலைக்கு அமெரிக்கா ரூ.50 கோடி பரிசு தொகையை அறிவித்தது. இதற்கு போட்டியாக இங்கிலாந்தில் வசிக்கும் பாகிஸ்தான் வம்சாவளியான அகமது என்பவர் ஒரு பரபரப்பான தகவலை வெளியிட்டார். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் ஆகியோரை பிடித்து கொடுத்தால் ரூ.80 கோடி (10 மில்லியன் பவுண்ட்) பரிசு தொகை வழங்குவேன் என அறிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் சயீத் தலைக்கு அமெரிக்கா ரூ.50 கோடி பரிசு தொகை அறிவித்து இருப்பதால் நானும் இந்த ரூ.80 கோடி பரிசை அறிவிக்கிறேன் என்று கூறினார். இவர் இங்கிலாந்தில் வசிக்கும் கோடீசுவரர் ஆவார்.

முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியை சேர்ந்தவர். இந்த பரிசு தொகை அறிவிப்பை தொடர்ந்து கோடீசுவரர் அகமதுவை கட்சியில் இருந்து நீக்கதொழிலாளர் கட்சி நடவடிக்கை எடுத்தது.

அகமதுவின் செயல் கண்டனத்துக்குரியது. இது குறித்து விசாரணை நடைபெறுகிறது. அதுவரையில் அவர் கட்சியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார் என கட்சியின் செய்தி தொடர்பாளர் கூறினார்.

Tuesday, April 17, 2012

கனடாவில் அதிகரித்து வரும் வீடு வாங்குவோரின் எண்ணிக்கை

கனடாவில் கடந்த இரண்டு ஆண்டை விட இந்த ஆண்டு வீடு வாங்குவோரின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. இந்த பரபரப்பான சூழலில் சென்ற மாதம் வீட்டின் விலை சற்று குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தகவலை கனடாவின் வீட்டு மனை முகமையின் விற்பனைக்குழு தெரிவித்துள்ளது.
இது பற்றி வீட்டு முகமையின் தலைமைப் பொருளாதார அதிகாரி கிரிகோரி கலும்ப் கூறுகையில், சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு வீட்டின் சராசரி மதிப்பு சற்று சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் இது பற்றி கூறுகையில், நகரப்பகுதியில் வீட்டின் விலை அதிகரித்திருந்தது, ஆனால்(வுழசழவெழ ரூ ஏயnஉழரஎநச'ள) றொராண்டோ மற்றும் வான்கூவர் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட வியாபார போட்டியின் காரணமாக வீட்டு மனையின் விலை இந்தப் பகுதியில் அதிக அளவு குறைய தொடங்கியது.

வீட்டின் விலை வான்கூவரில் சென்ற ஆண்டு தேசிய சராசரி மதிப்பில் உயர்ந்தது போல இந்த ஆண்டு உயர வாய்ப்பில்லை. பிப்ரவரியில் 373000 டொலராக இருந்த வீடு மார்ச்சில் 369677 ஆக குறைந்துள்ளது.

கனடாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகவும் வேகமாக உயர்ந்து வந்த வீட்டின் விலை தற்போது எதிர்பாராத அளவிற்கு குறைந்துள்ளது வீட்டு மனை வியாபாரிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Sunday, April 15, 2012

ஆல்ப்ஸ் மலையின் அழகை மலையிலிருந்து ரசிக்க அரசு அனுமதி வழங்கியது

சுவிட்சர்லாந்தில் உள்ள ஆல்ப்ஸ் மலைகளின் அழகை மலையிலிருந்து பார்ப்பதற்காக ஒரு பார்வையாளர் மாடம் கட்டுவது குறித்து சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்களால் முதலில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இப்போது சில மாற்றங்களுடன் இந்த மாடத்தைக் கட்டுவதற்கு அனுமதி தெரிவித்துள்ளனர். பெர்ன் மாநில அரசு வியாழக்கிழமை அன்று மாடம் அமைப்பதற்கான திருத்தப்பட்ட திட்டங்களை ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்தப் பார்வையாளர் மாடம் பெர்னீஸ் ஓபெர்லாந்தில் உள்ள ஸ்டாக்ஹார்ன் மலையின் உச்சியில் அமைக்கப்படும். முதலில் இங்கு கண்ணாடிக் கூண்டு மாதிரி பார்வையாளர்கள் சுற்றிலும் பார்ப்பதற்கு ஏற்ப வசதியாக அமைக்கப்படும்.

இந்த கூண்டில் விலங்கு பறவைகள் வெயில் பனியிலிருந்து காத்துக் கொள்ள பாதுகாப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாண்டுகளுக்கு முன்பு இத்திட்டம் அறிமுகமான போது சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் மலையுச்சிக்கு மனிதர்கள் செல்வதால் அங்கு வாழும் உயிரினங்களின் அமைதி கெட்டுப் போகும் என்று வாதிட்டனர்.

இப்போது ஒரு உள்ளூர் கேபிள் கார் நிறுவனம் பெரியதாக இந்தப் பார்வையாளர் மாடத்தை அமைக்காமல் மூன்று சதுர மீற்றர் பரப்பில் மிகச் சிறியதாக கட்டுவதற்கு அரசிடமிருந்து அனுமதி பெற்றுள்ளது. அடுத்த ஆண்டு இந்தப் பணி நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டைட்டானிக் கப்பல் மூழ்கியதை நேரில் பார்த்தவரின் கடிதம் கண்டுபிடிப்பு

ஜுரிச் நகரத்தைச் சேர்ந்த ஆண்டோன் கிங்க் இவர் மூன்றாம் வகுப்புப் பயணியாக டைட்டானிக் கப்பலில் பயணம் செய்தவர்.
டைட்டானிக் கப்பல் மூழ்கிக் கொண்டிருப்பதை அறியாத இவர் தன் அறையை விட்டு வெளியே வந்து பார்த்துள்ளார். அப்பொழுது பலரும் பெரிய பெரிய ஐஸ் கட்டிகளை கொண்டு கால்பந்தாட்டம் விளையாடிக் கொண்டிருந்தனர்.
விசாரித்ததில் இவர்கள் பயணிக்கும் டைட்டானிக் கப்பல் மீது பனிப் பாறை மோதிய தகவல் கிடைத்தது. அந்தப் பாறையின் துகள்களைக் கொண்டு தான் கால்பந்து விளையாடியதும் கிங்கிற்கு தெரியவந்தது.

பலரும் கிங்கிடம் டைட்டானிக் மூழ்கவே மூழ்காது என்று திட்டவட்டமாகக் கூறினர். இச்சம்பவம் நடந்தது (14.4.1912) நூறாண்டுகளில். கிங்க் தன் மனைவி மற்றும் நான்கு வயது மகனுடன் இந்தக் கப்பலில் பயணம் செய்தார். கப்பல் மூழ்கினாலும் இம்மூவரும் பிழைத்துவிட்டனர். பின்பு இவர் தான் பயணச் சீட்டு வாங்கிய முகமைக்கு 20 பக்கக் கடிதம் ஒன்றை எழுதினார்.

கிங்கின் கடிதத்தை அண்மையில்தான் சுவிஸ் டைட்டானிக் நிபுணர் கூண்டெர் பாப்லெர் கண்டுபிடித்துள்ளார். அந்தக் கடிதத்தின் சில பகுதிகள் சுவிஸ் செய்தித்தாள் ஒன்றில் வெளிவந்துள்ளன.

கிங்க் தான் எழுதிய கடிதத்தில் தனக்கு இழப்பீடு கிடைக்குமா என்று கேட்டிருக்கிறார். டைட்டானிக்கை அனுப்பிய ஒயிட் ஸ்டார் லைன் நிறுவனம் பயணச்சுமை காப்பீடு வழங்குமா என்றும் இறந்து போன தன் சகோதர சகோதரியின் சட்ட வாரிச்சுரிமை பற்றியும் கேட்டு எழுதியிருக்கிறார்.

இவருடைய கேள்விகளுக்குப் பதில் கிடைத்ததா இல்லையா என்பது தெரியவில்லை மேலும் இது போன்று எத்தனைக் கடிதங்கள் கண்டிறியப்படாமல் இருக்கின்றன என்பதும் கேள்விக் குறியாக உள்ளன.

Saturday, April 14, 2012

காகிதப் பேப்பர் எப்படி பிறந்தது தெரியுமா? தெரிந்துகொள்ள வாருங்கள்

எழுத்துக்கள் எப்படி தோன்றியிருக்கும் என்று எப்போதாவது சிந்தித்து பார்த்ததுண்டா நண்பர்களே. மனிதர்களின் நினைவாற்றலின் வலிமை ஒரு குறிப்பிட்ட எல்லையை கொண்டது அதாவது மனிதனால் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு அனைத்து விசயங்களையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. அந்த நினைவாற்றலின் எல்லையை தாண்டியும் சில தகவல்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்ட போது தோன்றியது தான் எழுத்து. அன்றைய அரசாங்கத்தின் நிர்வாகத்துறையில் உள்ள வரவு செலவு கணக்குகளும் வணிகப்பரிமாற்றத்தின் பரிவர்த்தனைகளும் மனித நினைவாற்றலின் எல்லையை தாண்டி வளர்ந்தபோது அந்த கணக்குளை குறித்து வைத்துக்கொள்ள தோன்றியது தான் எழுத்து.
அன்றைய ஆதிமனிதன் முதன் முதலில் எழுத்துக்களை பதித்து வைத்தது கற்களின் மீதுதான் எழுதப்பட்ட கற்களை தேவை ஏற்பட்டபோது ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதில் ஏற்பட்ட சிக்கல்களை தொடர்ந்து விலங்குகளின் எலும்புகளிலும் மூங்கில் தடிகளின் மீதும் மனிதன் எழுதத் துவங்கினான்.

நாளடைவில் இதிலும் ஏற்பட்ட porlability குறைபாடு அவனை களிமண் தகடுகளின் மீது எழுதச் செய்தது. களிமண் தகடுகளை கையாள்வது சுலபமாக இருந்தாலும் அவற்றை வைத்து பராமரிக்க அதிக இடம் தேவைப்பட்டதால் இதுவும் தோல்வியுற்றது.

இன்று நாம் எழுதுவதற்க்காக பயன்படுத்திக் கொண்டிருக்கும் பேப்பர்களின் தோற்றத்தையொத்த பொருளில் உலகில் முதன் முதலில் எழுதியவர்கள் எகிப்தியர்கள் தான். கி.மு. ஏழாம் நூற்றாண்டில் எகிப்தின் நைல் நதியின் டெல்டா பகுதியில் விளைந்த இரெண்டு முதல் மூன்று மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய ஒரு தாவரம் பாப்பிரஸ் cyperus papyrus ஆகும். இந்த பாப்பிரஸ் தாவரத்தின் தண்டுபகுதியை நுண்ணிய துண்டுகளாக வெட்டி அதனுடன் நீர் மற்றும் சில தாதுக்களை சேர்த்து பதப்படுத்தி பின்பு அதனை சூரிய ஒளியில நன்றாக உலரவைத்து பின்பு அதனை எழுதுவதற்கென்று பயன்படுத்தி வந்தனர் அன்றைய எகிப்தியர்கள். இதுதான் மனிதன் முதன் முதலில் பேப்பெரில் எழுதிய அனுபவம் ஆகும். மேலும் பேப்பர் (paper) என்ற சொல்லும் பாப்பிரஸ் (Pயிலசரள) என்ற சொல்லில் இருந்து பிறந்ததே ஆகும்.

எகிப்தியர்கள் பாப்பிரஸ் தாள்களில் எழுதிவந்த அதே கால கட்டத்தில் சீனர்கள் விலங்குகளின் எலும்புகளிலும் மூங்கில் தடிகளிலும் தான் எழுதிவந்திருக்கிறார்கள். பண்டைய சீனாவில் கி.மு.206-ஆம் ஆண்டு முதல் கி.பி.220-ஆம் ஆண்டுவரை சங்கனை changan தலைநகராக கொண்டு ஆட்சி செய்துவந்த ஹான் வம்சத்தினர் (han  dynasty]போது இந்நகரம் லேய்யங்(leiyang] பெயரில் அழைக்கப்படுகிறது) நீதிமன்ற ஆவன காப்பாளராக வேலை பார்த்து வந்தவர் கைய் லுன் cai lun . அவரது காலத்தில் நீதிமன்ற குறிப்புகள் அனைத்தும் விலங்குகளின் எலும்புகளிலும் மூங்கில் தடிகளிலும் தான் எழுதப்பட்டு வந்தது. இவற்றை ஒரு இடத்திலிருந்து மற்றொறு இடத்திற்கு எடுத்துச் செல்வதில் ஏற்பட்ட சிரமத்தை தொடர்ந்து கைய் லுன் மாற்று வழி பற்றி ஆராய ஆரம்பித்தார்.

கைய் லுன் கி.பி. 105-ல் மரநார்கள் தாவரத்தின் இலைகள் மீன்பிடி வலைகள் மற்றும் துணி கழிவுகள் ஆகியவற்றை கொண்டு பேப்பேர் தயாரிக்கும் முறையை கண்டறிந்தார். கைய் லுனின் இந்த கண்டுபிடிப்பை பாராட்டி அப்போதைய அரசாங்கம் அவருக்கு பதவியுயர்வும் பொற்கிழியும் வழங்கி கெளரவித்தது. இம்முறையில் கண்டறியப்பட்ட காகிதம் சற்று தடிமனாக இருந்தது அதாவது சற்றேறக்குறைய 5mm வரை தடிமனாக இருந்தது. சிறிது காலத்திற்கு பிறகு கைய் லுன் தற்செயலாக ஒரு காட்சியை காண நேரிட்டது அது என்னவென்றால் ஒரு வகை குளவி [wasp) மரத்தை துளையிட்டு அதம் மூலம் கிடைத்த சிறு மரத்துகள்களை கொண்டு தனது கூட்டை வலிமையாக கட்டிக்கொள்வதை கண்டார் அப்போதுதான் மரத்தை கூழ்மமாக அரைத்தால் பேப்பரை நாம் விரும்பும் வடிவில் மற்றும் அளவில் தயாரித்துக்கொள்ளலாம் என்பதை அறிந்துகொண்டார். அதனை தொடர்ந்து மரத்தை அரைக்கும் ஆலை நிறுவப்பட்டு பேப்பர் தயாரிக்கப்பட்டது. கி.பி. 105-ல் பேப்பர் தயாரிக்கும் முறை கண்டறியப்பட்டுவிட்டாலும் உலகிற்கு பகிரங்கமாக பேப்பர் தயாரிக்கும் தொழில்நுட்பமுறை அறிவிக்கபடவில்லை. சீனர்கள் ஏறக்குறைய அத்தொழில்நுட்பத்தை 500 ஆண்டுகளுக்கும் மேலாக ரகசியமாகவே வைத்து பாதுகாத்துள்ளனர்.

கி.பி.751-ல் சீனர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே தற்போதைய உஸ்பெகிஸ்தானில் டாலஸ் (battle of talas)  என்ற போர் ஏற்பட்டது. கிர்கிஸ்தானுக்காக நிகழ்ந்த இந்த டாலஸ் போரில் (battle of talas) சீனப்படைகள் அரேபிய படைகளிடம் தோல்வியை தழுவியது அப்போது அரேபியர்களால் போர்க்கைதிகளாக பிடிக்கப்பட்ட இரு சீனவீரர்களிடம் இருந்து பேப்பர் தாயாரிக்கும் தொழில்நுட்பத்தை அரேபியர்கள் அறிந்துகொண்டனர். அத்தொழில்நுட்பத்தை கொண்டு உஸ்பெகிஸ்தானிலுள்ள சமர்கண்ட் (samarkand) என்ற நகரில் அதிகாரப்பூர்வமான முதல் பேப்பர் தயாரிக்கும் ஆலையை அரேபியர்கள் நிறுவினார்கள் அதனை தொடர்ந்து ஈராக் தலைநகர் பாக்தாத்திலும் ஒரு ஆலை நிறுவப்பட்டது. பாக்தாத்திலிருந்துதான் ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின் இத்தாலி ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு பேப்பர் தயாரிக்கும் தொழில்நுட்பம் பரவியது.

பதினெட்டாம் நூற்றாண்டு வரையில் பேப்பர் கடும் நிறம் (கால்நடைகளின் சான நிறம்) கொண்டதாகத்தான் இருந்தது 1844-ஆம் ஆண்டு சார்லஸ் (charles fanerty) மற்றும் கெல்லர் (gofflob killer வெள்ளை நிற பேப்பரை உருவாக்கும் தொழில் நுட்பத்தினை கண்டறிந்தார்கள். அன்றுமுதல் வெள்ளை நிற காகிதம் தயாரிக்கப்பட்டு வருகிறது. நாம் வீணடிக்கும் ஒவ்வொரு பேப்பரிலும் ஒரு மரத்தின் உயிர் வீணடிக்க படுகிறது என்பதை மனதில் கொண்டு பேப்பர்களை மிக சிக்கனமான உபயோகித்து சுற்றுசூழலுக்கு நம்மால ஆன நன்மையை செய்திடுவோம் என்று கூறிக்கொண்டு இப்பதிவை நிறைவு செய்கிறேன்.

தென்சீனக்கடலில் அமெரிக்கா கூட்டுப்பயிற்சி!

சீனா சொந்தம் கொண்டாடும் தென் சீனக் கடல் பகுதியில் அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் ராணுவத்தினர் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இரு நாட்டு ராணுவத்தினரும் ஆண்டுதோறும் இந்த பயிற்சி மேற்கொள்வார்கள். ஆனால் இந்த ஆண்டு இந்த பயிற்சி தென் சீன கடல் பகுதியில் நடைபெறுவதால் முக்கியத்துவம் பெறுகிறது.
அமெரிக்கா தரப்பில் 4500 வீரர்களும் பிலிப்பைன்ஸ் தரப்பில் 2300 வீரர்களும் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி குறித்து பிலிப்பைன்ஸ் நாட்டின் ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில் எந்த நாட்டுக்கு எதிராகவும் பயிற்சியில் ஈடுபடவில்லை. கடல்பகுதியில் பாதுகாப்பு மற்றும் இரு நாட்டு நலன் கருதி ராணுவ பயிற்சியில் ஈடபட்டுள்ளதாக கூறினார்.

எதிர்க்கட்சி வெற்றி பெற்றால் கிரீசின் நிலைமையே பிரான்சுக்கு ஏற்படும்: சர்கோசி

பிரான்சில் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரம் மிக தீவிரமாக நடந்து வருகிறது. இத்தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசிக்கும் எதிர் வேட்பாளர் ஹோலாண்டேவுக்கும் போட்டி கடுமையாக இருக்கும்.
டுர்2 என்ற நிறுவனத்தின் கருத்துக் கணிப்பு ஹோலாண்டேக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்ததும் சர்கோசி அதற்குப் பதிலடி தரும் வகையில் அவர் வெற்றி பெற்றால் முதலீட்டாளர் பிரான்சில் தொழில் நடத்த அஞ்சுவர் பின்பு கிரீஸ் ஸ்பெயின் நாடுகளுக்கு ஏற்பட்ட நிலைமையே பிரான்சுக்கும் ஏற்படும் என்றார்.

ஹோலாண்டே இடதுசாரி இயக்க ஆதரவாளர் என்பதால் பிரான்ஸ் நாட்டின் அரசாங்கம் முழுக்க முழுக்க இடதுசாரி ஆதரவுடையதாக உருமாறிவிடும் என்றார்.

ஹோலாண்டேக்கு எதிரான இந்த அச்சுறுத்தல்களோடு சர்கோசி கடந்த வாரம் தன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

ஹோலாண்டே தான் அறிமுகப்படுத்தும் “வரியும் செலவும்” என்ற திட்டத்தால் பிரான்சில் வரவும் செலவும் சமமாக இருக்கும் என்றார். ஆனால் செலவுக்கு ஏற்ப வரி வசூலிப்பது என்ற ஹோலாண்டேயின் திட்டம் பலிக்காது என்று மறுத்துரைத்த சர்கோசி இத்திட்டத்தால் மக்களின் நம்பிக்கை குறைந்து போய் விடும் என்று தெரிவித்தா

ஜெருசலேம் கல்லறையில் கிடைத்தது இயேசுவின் எலும்புகளா? நிபுணர்கள் ஆய்வு

முதலாம் நூற்றாண்டு காலத்தைய இயேசு கிறிஸ்துவின் கல்லறை ஜெருசலேமில் இருப்பதாக கூறப்பட்டது. கடந்த 1980-ம் ஆண்டில் இது கண்டுபிடிக்கப்பட்டு சர்ச்சையில் உள்ளது.  இந்த கல்லறையை தோண்டி ஆய்வு மேற்கொள்ள வடக்கு கலிபோர்னியாவின் அகழ்வாராய்ச்சி நிபுணர் ஜேம்ஸ் தபோர் டாக்குமென்ட்ரி சினிமா தயாரிப்பாளர் ஜிம்சாஜேகபோவிக் குழுவினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர். இதற்குயூதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து கோர்ட்டில் வழக்கு நடந்தது. முடிவில் இயேசுவின் கல்லறையை தோண்டாமல் காமிராவுடன் கூடிய ரோபோவை கல்லறைக்குள் இறக்கி ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
அதன்படி துளைகள் போடப்பட்டு அதன் வழியாக ரோபோக்கள் பூமிக்குள் இறக்கப்பட்டன. அவை போட்டோக்கள் எடுத்து அனுப்பியுள்ளன.   அதில் எலும்புகள் கல்வெட்டுகள் போன்றவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை இயேசுவின் எலும்புதானா? என்று ஆராய்ச்சி நடந்து வருகிறது

பிரேசிலில் மனித மாமிசம் சாப்பிடும் மனிதர்கள் நடமாட்டம்

பிரேசிலில் உள்ள கரான்கன்ஸ் நகரில் இந்த ஆண்டு தொடக்கத்தில் 2 பெண்கள் திடீரென மாயமாகி விட்டனர். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. எனவே போலீசார் அவர்களை தேடிவந்தனர். இந்த நிலையில் கரான்கன்ஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் பிணங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து அங்கு போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அங்கு தோண்டி பார்த்தபோது மாயமான 2 பெண்களின் பிணங்கள் புதைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அங்கு குடியிருந்த ஒரு ஆண் மற்றும் 2 பெண்களை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது அந்த பெண்களை கொலை செய்த நபர்கள் அவர்களின் மாமிசத்தை சாப்பிட்டு விட்டு உடலின் மீதமிருந்த பாகத்தை புதைத்தது தெரிய வந்தது.

இந்த தகவலை கரான்சன்ஸ் போலீஸ் கமாண்டர் ஒலிவெரா தெரிவித்தார். பெர்னாம் புகோ நகரில் ஏற்கனவே 6 பெண்கள் மாயமாகி விட்டனர். அவர்களது கொலையிலும் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனவே இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்ட 3 பேரின் மீது கடத்தல் கொலை பிணத்தை மறைத்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

Thursday, April 12, 2012

வாழும் போதே சொர்க்கம் வேண்டுமா? மனம் விட்டு பாராட்டுங்கள்!

மனித மனமானது பாராட்டுக்களை எதிர்பார்க்கும். பணிபுரியும் இடமோ வீடோ எங்காவது சின்ன பாராட்டு கிடைத்தால் மனம் பூரித்துப் போகும். நம்முடைய செயலுக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தாலே கூடுதல் உற்சாகத்தோடு பணியை செய்யத்தோன்றும். இல்லறத்திலும் இதுபோலத்தான் கணவனோ மனைவியோ ஒருவரை ஒருவர் பாரட்டினாலோ அவர்களின் செயல்களை அங்கீகரித்தாலே வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலைக்கும் என்கின்றனர் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

குறை கூறாதீர்கள்

நாம் எல்லோருமே எப்போதும் மற்றவர்களது குறைகளைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருப்போம். அதில்தான் எல்லோருக்கும் ஆர்வமும் அதிகம். ஆனால் காதலுக்கும் திருமணத்திற்கும் இது பொருந்தாது. ஒவ்வொரு பெண்ணும் தனது காதலனோ கணவனோ தான் செய்யும் சிறந்த செயல்களுக்கு தன்னைப் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பாள்.

ஆனால் பெரும்பாலும் ஆண்களுக்கு பாராட்டும் மனநிலை இருப்பதில்லை. ஒரு பெண் தனது கணவனைப் பற்றி எவ்வளவு குறை பேசினாலும் அவர் ஒரு நல்ல காரியத்தை செய்துவிட்டு வரும்போது அது பலருக்கும் தெரிந்துவிடும் மனைவி மூலமாக. அவர்களது பாராட்டு குறை சொல்வதை விட 100 மடங்கு உயர்வாக இருக்கும். அதுபோல ஆண்களும் பாராட்டவும் மனம் விட்டு பேசவும் வேண்டும்.

நேர்மறையாக கவனியுங்கள்

உங்கள் வாழ்க்கைத்துணை செய்யும் நல்ல செயல்களில் மட்டுமே கவனம் செலுத்தி பாராட்டுங்கள். உங்கள் வாழ்க்கைத் தோட்டத்தில் மணம் மிக்க மலர்கள் மலர நீங்கள் ஊற்றும் உற்சாக தண்ணீர் அது. தினம் தினம் நீங்கள் கண்டறிந்து பாராட்டும் பட்சத்தில் உங்கள் மனைவி எந்த தவறான செயலும் செய்ய நினைக்கமாட்டார்.

அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்

திருமண வாழ்க்கையில் சிக்கலுக்கு காரணமே எதிர்பார்ப்புதான். தனக்கு ஏற்றார்போல தன் மனைவி மாறவேண்டும் என்று ஒவ்வொரு ஆணும் எதிர்பார்க்கின்றனர். இது தவறான செயல். உங்கள் மனைவி எப்படிப்பட்ட குணநலன்களுடன் இருக்கின்றனரோ அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். அவருடைய செயலுக்கு அங்கீகாரம் அளியுங்கள். அப்புறம் பாருங்கள். அலைகடலென வரும் மனைவியின் அன்பில் மூழ்கிப்போவீர்கள்.

மிகச்சிறந்த பரிசு

பெண்களுக்கு நீங்கள் கொடுக்கும் மதிப்புமிக்க பரிசுப் பொருளை விட ஒரு அன்பான வார்த்தையும் பாராட்டும் பல்வேறு நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். அதற்காக பெண்களின் அழகை மட்டும் பாராட்டிக் கொண்டே இருக்காதீர்கள். காதலன் தனது அழகை மட்டும் பாராட்டிக் கொண்டிருக்கும்பட்சத்தில் அவனிடம் பெண்கள் எச்சரிக்கையாகிவிடுவார்கள்.

திறமையை கண்டறியுங்கள்

அழகினைத் தவிரவும் பெண்களைப் பாராட்ட ஆயிரம் விஷயங்கள் உள்ளன. பாராட்ட வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் போதாது. தனது காதலியின்ஃமனைவியின் நற்குணங்களை அவர்களது திறமைகளை கண்டறிய வேண்டும். அப்போதுதான் அவற்றைப் பற்றி நீங்கள் பாராட்ட முடியும். மேலும் அவர்களது நண்பர்களிடமும் இவரைப் பற்றி ஓஹோ என்று புகழ்ந்து பாருங்கள். அவ்வளவுதான். உங்களுக்கு வாழும்போதே சொர்க்கம் தெரியும்.

உற்சாக டானிக்

பாராட்டுத்தான் உங்கள் மனைவிக்கு உற்சாகம் தரும் டானிக். அவர்கள் செய்யும் ஒரு செயலோ சமையலோ நன்றாக இல்லாத பட்சத்தில் நீங்கள் கூறும் குறைகளை விட 10 மடங்கு அதிகமாக ஒரு நல்ல செயலை செய்யும் போது பாராட்டிப் பாருங்கள்.இதை ஒவ்வொருவரும் கடைபிடித்தால் ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சி தழைக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls