Sunday, April 15, 2012

ஆல்ப்ஸ் மலையின் அழகை மலையிலிருந்து ரசிக்க அரசு அனுமதி வழங்கியது

சுவிட்சர்லாந்தில் உள்ள ஆல்ப்ஸ் மலைகளின் அழகை மலையிலிருந்து பார்ப்பதற்காக ஒரு பார்வையாளர் மாடம் கட்டுவது குறித்து சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்களால் முதலில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இப்போது சில மாற்றங்களுடன் இந்த மாடத்தைக் கட்டுவதற்கு அனுமதி தெரிவித்துள்ளனர். பெர்ன் மாநில அரசு வியாழக்கிழமை அன்று மாடம் அமைப்பதற்கான திருத்தப்பட்ட திட்டங்களை ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்தப் பார்வையாளர் மாடம் பெர்னீஸ் ஓபெர்லாந்தில் உள்ள ஸ்டாக்ஹார்ன் மலையின் உச்சியில் அமைக்கப்படும். முதலில் இங்கு கண்ணாடிக் கூண்டு மாதிரி பார்வையாளர்கள் சுற்றிலும் பார்ப்பதற்கு ஏற்ப வசதியாக அமைக்கப்படும்.

இந்த கூண்டில் விலங்கு பறவைகள் வெயில் பனியிலிருந்து காத்துக் கொள்ள பாதுகாப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாண்டுகளுக்கு முன்பு இத்திட்டம் அறிமுகமான போது சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் மலையுச்சிக்கு மனிதர்கள் செல்வதால் அங்கு வாழும் உயிரினங்களின் அமைதி கெட்டுப் போகும் என்று வாதிட்டனர்.

இப்போது ஒரு உள்ளூர் கேபிள் கார் நிறுவனம் பெரியதாக இந்தப் பார்வையாளர் மாடத்தை அமைக்காமல் மூன்று சதுர மீற்றர் பரப்பில் மிகச் சிறியதாக கட்டுவதற்கு அரசிடமிருந்து அனுமதி பெற்றுள்ளது. அடுத்த ஆண்டு இந்தப் பணி நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls