:புதுடெல்லியில் கடுமையான பனிமூட்டம் நிலவுவதால் 350 விமானங்கள் தாமதமாக வந்தன. இதனால் பயணிகள் பெரிதும் அவதிக்கு உள்ளாயினர். டெல்லி முழுவதுமே இன்று அதிகாலை பனிமூட்டமாக காணப்பட்டது. எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி மூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்குள்ளாயினர். பனி மூட்டத்தால் இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்கும் ஓடுதளம் சரியாக தெரியவில்லை இதனால் விமானங்கள் வானிலேயே சுற்றிக் கொண்டிருந்தன. மேலும் சில விமானங்கள் அருகில் உள்ள விமான நிலையங்களில் தரை இறங்கின. மேலும் பனி மூட்டத்தால் சாலை போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. பனிமூட்டம் காரணமாக 28 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Saturday, January 21, 2012
Friday, January 20, 2012
தொடர் தோல்விக்கு பின்னர் முதல் வெற்றியை பதிவு செய்தது இலங்கை
6:37 PM
abimanju
No comments
இலங்கை – தெ.ஆபிரிக்க அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற நான்காவது ஒரு நாள் போட்டியில், இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் சமீபகாலமாக தான் சந்தித்திருந்த தொடர் தோல்விகளிலிருந்து மீண்டுள்ளதுடன், 2012 ம் ஆண்டின் முதல் வெற்றியையும் பதிவு செய்துள்ளது. பகலிரவு போட்டியாக நடைபெற்ற நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தெ.ஆபிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 299 ஓட்டங்களை எடுத்தது. அதிகபட்சமாக வில்லியெர்ஸ் 96 ஓட்டங்களையும், கிராண்ட்ஸ் ஸ்மித் 68 ஓட்டங்களையும் எடுத்தனர். பந்துவீச்சில் ஹேரத் 2 விக்கெட்டுக்களையும் பெரேரா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
Thursday, January 19, 2012
முட்டையுடன் பேசும் கோழிகள்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
6:00 PM
abimanju
No comments
கோழி எப்பொழுது முட்டையிடும் என்று காத்திருந்து, முட்டையிட்டதும் உடனே அதனை எடுத்துக் கொண்டு போய் விடுகிறோம். ஆனால் தனது முட்டையோடு உரையாடிக் கொண்டிருக்கும் கோழியின் மனது அப்போது எப்படித் தவிக்கும் என்று நாம் கண்டு கொள்வதில்லை.
ஆமாம் முட்டை வெளிவந்து 48 மணி நேரம் வரை அதனோடு தொடர்பு வைத்திக்கொண்டிருக்கிறது கோழி. பதினொரு வகை ஒலிக்குறிப்புகள் வல்லுனர்களால் பதிவு செய்யப்பட்டு, மேற்படி தகவலை விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருக்கின்றனர்.
தாய்க் கோழி ‘ப்ளாக்’ என்ற பாச ஒலியை எழுப்புவதாகவும், கரு முட்டை ‘பீப்’ என்ற வாஞ்சை ஒலியை பதிலாக எழுப்புவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
48 மணி நேரம்வரை நீடிக்கும் இந்த உறவுப்பரிமாற்றம் பின்னர் நின்று கோழியும் முட்டையும் வேறாகி விடுகின்றன என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
ஆமாம் முட்டை வெளிவந்து 48 மணி நேரம் வரை அதனோடு தொடர்பு வைத்திக்கொண்டிருக்கிறது கோழி. பதினொரு வகை ஒலிக்குறிப்புகள் வல்லுனர்களால் பதிவு செய்யப்பட்டு, மேற்படி தகவலை விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருக்கின்றனர்.
தாய்க் கோழி ‘ப்ளாக்’ என்ற பாச ஒலியை எழுப்புவதாகவும், கரு முட்டை ‘பீப்’ என்ற வாஞ்சை ஒலியை பதிலாக எழுப்புவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
48 மணி நேரம்வரை நீடிக்கும் இந்த உறவுப்பரிமாற்றம் பின்னர் நின்று கோழியும் முட்டையும் வேறாகி விடுகின்றன என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
பெண்ணின் மனசு கடலின் ஆழத்திற்க்கு சமமாகுமா !!சுவாரஷ்யமான தகவல்
7:04 AM
abimanju
No comments
கடலின் ஆழத்தில் உள்ளதைக் கூட கண்டுவிடலாம், பெண்ணின் மன ஆழத்தில் புதைந்து கிடப்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்று கவிஞர்களும், உளவியல் நிபுணர்களும் தெரிவித்துள்ளனர். ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மனோதத்துவ ஆய்வாளர் பேகோ ஆய்வு செய்துள்ளார். எண்ணற்ற பெண்களிடம் பேசியதன் அடிப்படையில் அவர்களின் மனதிற்குள் புதைத்து வைத்திருந்த ரகசியங்களை வெளிக் கொண்டு வந்துள்ளார்.
பெண்கள் எதைத்தான் விரும்புகிறார்கள்? அதற்கான காரணங்கள் என்ன என்பதைப்பற்றி பேகோ மிகப்பெரிய பட்டியலிட்டுள்ளார். அவை உங்களுக்கு:
தனித்திறன் அவசியம்
பெண்கள் எதைத்தான் விரும்புகிறார்கள்? அதற்கான காரணங்கள் என்ன என்பதைப்பற்றி பேகோ மிகப்பெரிய பட்டியலிட்டுள்ளார். அவை உங்களுக்கு:
தனித்திறன் அவசியம்
இணையத்தளங்களுக்கான ஒழுக்கக்கோவையை வெளியிட்டது ஊடகத்துறை அமைச்சு!
6:20 AM
abimanju
No comments
:தகவல் ஊடகத்துறை அமைச்சு 27 இணையத்தளங்களுக்கு மாத்திரமே செயற்படுவதற்கான அனுமதிப்பத்திரத்தை இது வரையில் வழங்கியிருக்கிற தென்று தகவல் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் டபிள்யு.பி. கணேகல தெரிவித்தார். செய்திகளை வெளியிடும் இணையத்தளங்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறியொன்றையும் அமைச்சு இப்போது வெளியிட்டிருக்கிறதென்றும், இந்த ஒழுக்க நெறிக்கு அமைய பதிவு செய்யப்பட்ட இணையத்தளங்கள் செயற்படுவதற்கு தமது அமைச்சு ஆதரவளிக்கும் என்றும் அவர் கூறினார். இணையத்தளங்களுக்கென வெளியிடப்பட்டுள்ள ஒழுக்க நெறியின் முக்கிய அம்சங்கள் சிலவற்றை இங்கே தருகின்றோம்.
Wednesday, January 18, 2012
ஆகக் கூடிய வாழ்க்கைச் செலவு கொண்ட மாவட்டமாக யாழ்ப்பாணம்..
6:15 PM
abimanju
No comments
இலங்கையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், தனிநபர் ஒருவர் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய குறைந்த பட்சம் 3,307 ரூபாவினை செலவு செய்ய வேண்டி இருந்தது. இலங்கையில் ஆகக் கூடிய வாழ்க்கைச் செலவு கொண்ட மாவட்டமாக யாழ்ப்பாணம் காணப்படுவதாக குடிசன மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ தரவுகள் காட்டுகின்றன.
எனினும், இது மாவட்டங்களைப் பொறுத்து வேறுபட்டதுடன், தனிநபர் வாழ்க்கைச் செலவு ஆகக் கூடிய மாவட்டமாக யாழ்ப்பாணம் (ரூபா.3,555) காணப்படுவதனை புள்ளிவிபரத் தரவுகள் காட்டுகின்றன.எத்தனை ஜீவன்களுக்கு வாழ்வழிக்கின்றது மெரினா கடற்கரை
8:15 AM
abimanju
1 comment
வானமே கூரை எனக்கொண்டு தம் இரவுப் பொழுதை கழிக்கின்றனர் இறைவனின் குழந்தைகள் . அலையின் ஓசைகளில் வாகன இசைச்சலில் தூங்கிப் பழக்கப்பட்டு விட்டனர். எத்தனை பேருக்கு வாழ்வழிக்கின்றது இந்த மெரினா கடற்கரை சாலை என எண்ணத் தோண்றுகின்றது. காலையில் தம் வேலைகளை முடித்து விட்டு இரவில் வீடு பொல வந்து செர்கின்றனர் .சென்னையில் வங்கக் கடலோரம் அமைந்துள்ளது மெரினா கடற்கரை. இதன் நீளம் 12 கிலோ மீட்டர் ஆகும். இது உலகின் இரண்டாவது மிக நீளமான கடற்கரை என்று மக்களால் பரவலாகக் கூறப்பட்டாலும், இதே போன்று நீளமான கடற்கரைகள் பல உள்ளன. சென்னைக்கு வரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளின் பொழுதுபோக்கும் இடமாக திகழ்கிறது இந்த மெரினா கடற்கரை. இந்த கடற்கரை தண்ணீரிக்கு பிரபலமோ இல்லையோ உணவுப் பொருட்களுக்கு மிகவும் பிரபலம். தேங்காய் சுண்டல், ஏலக்காய் டீ, பஜ்ஜி, பேல் பூரி போன்ற சாட் வகைகள் இங்கு ஒரு பிடி பிடிக்கலாம். என்னதான் குளிப்பது தடை செய்யப்பட்டிருந்தாலும் ஏராளமானோர் இன்றுவரை குளித்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.
சிங்கார சென்னையின் சிதறுண்ட கோலம் [இந்தியாவின் எதிர்காலம் வீதியில்}
6:53 AM
abimanju
No comments
"அக்கா பசிக்குதக்கா ஏதாவது வாங்கிக்கோக்கா ஜஞ்சு சங்கு பத்துருவாக்கா" என்ற குரல் இன்றும் என்காதுகளை தொட்டுச்செல்கின்றன. கொட்டும் மழையில் நடுங்கியபடி சென்றுகொண்டிருந்த என்னை பின்னிருந்து ஒரு குரல் திரும்பி பார்க்க வைத்தது. குளிரில் நடுங்கியபடி சங்குகளை கையில் வைத்து பசிக்காக விற்றபடி நின்றால் ஒரு சிறுமி பார்ப்பதற்கே பரிதாபமா இருந்தது. . பெய்துகொண்ருந்த மழையை கூட பொறுப்படுத்தாமல் வரும் சுற்றுளாப்பயணிகளிடம் கூவிக்கூவி விற்றால் சில கரங்கள் அவளை கண்டுக்காமலே சென்றன சிர் அவளிடம் சங்கு வாங்கிச்சென்றனர். பிச்சை எடுகக்காமல் சுயமாக விற்று வாழ்கின்றாளே என நினைத்துக்கொண்டேன். இத்தகைய அவலங்களை சந்திக்கும் தருணம் தருணமாயினும் இதனை பெற்றுத்தந்த பயணம் வாழ்க்கையில் மறக்கமுடியாத நினைவுகளே. சில அனுபவங்கள் நினைத்தாலே சிரிக்கனும் பொல இருக்கும் சில நினைவுகள் என் வாழ்ககைக்கான பாலமாய் அமைந்துள்ளன.
Tuesday, January 17, 2012
சூப்பர் ஹிட்டான விஜய்யின் நண்பன்!
7:52 AM
abimanju
2 comments
அதிரடி ஆக்ஷன் இல்லாமல், டாடா சுமோக்கள் பறக்காமல், பிரமாண்ட கிராபிக்ஸ்கள் இல்லாமல் விஜய்-ஷங்கரின் கூட்டணியில் நல்ல கதையுடன் வந்திருக்கும் நண்பன், 2012ம் ஆண்டின் முதல் மெகா ஹிட் தமிழ்ப் படம் என்ற பெயரை வாங்கியுள்ளது.
வசூலில் அள்ளிக் குவித்து வரும் இந்தப் படம் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திழுந்துள்ளது.
3 இடியட்ஸ் என்ற மாபெரும் வெற்றிப் படத்தை அப்படியே சீனுக்கு சீன் மாற்றாமல் எடுத்திருந்தாலும், ஷங்கர் தனது வேலையைக் காட்டி தமிழுக்கு ஏற்ற மாதிரி ட்யூன் செய்து அசத்தியிருக்கிறார்.
விஜய்க்கும் இது மிக மிக வித்தியாசமான அனுபவமாகவே இருந்திருக்கும். எதிரிகளை நோக்கி சுட்டு விரலை நீக்கி அடிக்குரலில் கத்தாமல், பார்வையாலேயே எதிரியை துளைக்காமல், மிக யதார்த்தமான பக்கத்து வீட்டு பையன் மாதிரியான ஒரு கேரக்டர்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கடத்த முயன்ற ரூ.25 லட்சம் மதிப்புள்ள கடல் குதிரைகள் பறிமுதல்: 3 வாலிபர்கள் கைது!
7:39 AM
abimanju
No comments
:சென்னை விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கடத்த முயன்ற ரூ.25 லட்சம் மதிப்புள்ள கடல் குதிரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னையில் இருந்து கொழும்பு செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கடல் குதிரைகள் கடத்தப்படுவதாக சுங் கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை 4 மணிக்கு புறப்பட தயாராக இருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சுங்கத்துறையின் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் ராமநாதபுரத்தை சேர்ந்த சிக்கந்தர் சமீது (32), முகமது சிராஜுத்தீன் (30), முகமது ரபீக் (35) ஆகியோர் பெரிய அட்டைப்பெட்டி வைத்திருந்தனர்.
Monday, January 16, 2012
அமெரிக்கா மறைத்த பறக்கும் தட்டு இரகசியம்!!!!
6:11 AM
abimanju
5 comments
மர்மமான பறக்கும் பொருட்கள் (Unidentified Flying Objects – UFO) தொடர்பாகவும் அதில் பயணிப்பதாக நம்பப்படும் வேற்றுக்கிரக வாசிகள் தொடர்பாகவும் நாளுக்கு நாள் புதுப்புது விடயங்கள் புகைப்படங்களாகவும், காணொளிகளாகவும், செய்திகளாகவும் வெளிவந்த வண்ணமேயுள்ளன. பெரும்பாலான பறக்கும் பொருட்கள் ‘பறக்கும் தட்டுகள்’ (flying saucers) போன்றே தோற்றமளிக்கின்றன. இந்த பறக்கும் தட்டுகள் தொடர்பான கதைகள் இன்று நேற்றல்ல அது பல நூற்றாண்டு காலமாக இருந்துவருகின்ற ஒரு மர்மமாகும். இவை எங்கிருந்து வருகின்றன? இதில் பயணிக்கும் அந்நியர்கள் எப்படியானவர்கள்? அவர்கள் பூமிக்கு வருவதன் நோக்கமென்ன? அவர்களுக்கும் மனிதர்களுக்குமுள்ள தொடர்பு என்ன? அவர்களுடைய தொழிநுட்பம் எத்தகையது? இவை உண்மையானவையா? போன்ற பல கேள்விகள் விடையின்றி விரிந்துகொண்டெ செல்கின்றன.
வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்
1:46 AM
abimanju
No comments
வண்ணங்களால் நம் மனதை வசப்படுத்தும் வண்ணத்துப் பூச்சியை நாம் ரசிப்பதுண்டு ஆயினும் அதன் வண்ணங்களின் ரகசியத்தை நாம் அறிவதில்லை.
இந்நிலையில் இவ்வண்ணங்களுக்கு நிறமிகள் அல்ல கலன்களின் அமைப்பே காரணம் என்கிறது ஆய்வுக்குழு.இது குறித்த ஆராய்ச்சியை அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர்.அதற்காக அவர்கள் 05 வகையான வண்ணத்துப் பூச்சிகளை பயன்படுத்தினர்.
அவற்றின் சிறகுகளில் முப்பரிமான உள்ளமைப்பு ஏடுகளை அறிய எக்ஸ் கதிர்களை ஒளி சிதறலுக்கு உட்படுத்தி ஆய்வு செய்தனர்.இந்த ஆய்வில் வண்ணத்துப் பூச்சிகளின் சிறகுகள்கைராய்ட் எனப்படும் மிகச்சிறிய கட்டமைப்பிலானது எனவும்இந்த கைராய்ட்கள் பகெம் போல செயற்பட்டு சூரிய ஒளியை விளிம்பு விளைவுக்கு உட்படுத்துகிறது எனவும் கண்டறிந்துள்ளனர்.இது வரை வண்ணத்துப் பூச்சியின் சிறகுகளை இரு பரிமாண இலத்திரனியல் நுணுக்கு காடடி கொண்டே ஆய்வு செய்த நிலையில் தற்போதைய ஆய்வு சற்று முன்னேற்றம் என்றே கூறலாம்.இந்த கைராட்கள் மின் விசியின் இலை போன்றது.இது நன்கு உறுதியான சிடின் எனும் கட்டமைப்பினால் ஆனது.இந்த கைராய்ட் அமைப்பு பூச்சியின் மேற்பரப்பில் அமைந்துள்ளது.
இந்நிலையில் இவ்வண்ணங்களுக்கு நிறமிகள் அல்ல கலன்களின் அமைப்பே காரணம் என்கிறது ஆய்வுக்குழு.இது குறித்த ஆராய்ச்சியை அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர்.அதற்காக அவர்கள் 05 வகையான வண்ணத்துப் பூச்சிகளை பயன்படுத்தினர்.
அவற்றின் சிறகுகளில் முப்பரிமான உள்ளமைப்பு ஏடுகளை அறிய எக்ஸ் கதிர்களை ஒளி சிதறலுக்கு உட்படுத்தி ஆய்வு செய்தனர்.இந்த ஆய்வில் வண்ணத்துப் பூச்சிகளின் சிறகுகள்கைராய்ட் எனப்படும் மிகச்சிறிய கட்டமைப்பிலானது எனவும்இந்த கைராய்ட்கள் பகெம் போல செயற்பட்டு சூரிய ஒளியை விளிம்பு விளைவுக்கு உட்படுத்துகிறது எனவும் கண்டறிந்துள்ளனர்.இது வரை வண்ணத்துப் பூச்சியின் சிறகுகளை இரு பரிமாண இலத்திரனியல் நுணுக்கு காடடி கொண்டே ஆய்வு செய்த நிலையில் தற்போதைய ஆய்வு சற்று முன்னேற்றம் என்றே கூறலாம்.இந்த கைராட்கள் மின் விசியின் இலை போன்றது.இது நன்கு உறுதியான சிடின் எனும் கட்டமைப்பினால் ஆனது.இந்த கைராய்ட் அமைப்பு பூச்சியின் மேற்பரப்பில் அமைந்துள்ளது.
Sunday, January 15, 2012
சுற்றுலா மையமாகும் நிலாவரை ஒரு பார்வை
4:56 AM
abimanju
No comments
அமைதியான சூழல், மருது, வேம்பு, வாகை மரங்கள் ஓங்கி வளர்ந்து
நிழல் பரப்பும் ரம்மியமான சோலை, கால் பதித்தால் நிறமூட்டும்
செம்மண், மண் வளர்த்தை எடுத்துக் காட்டும் பயிர்ச்செய்கைச்
சுற்றாடல், பருகும் போது மீண்டும் பருகத்தூண்டும் நீர் வளம்,
வந்தாரை வரவேற்கும் வீதியோர வர்த்தக நிலையங்கள்,
வற்றாத நீர் நிலையான ஆழ் கிணறு, அத்தனையும் உற்று
நோக்கிய வண்ணம் கோயில் கொண்டிருக்கும் நவசைலேஸ்வரர்
ஆலயம், அத்துடன் யுத்த வடுக்களை தாங்கி நிற்கும் கட்டிட
இடிபாடுகளுடன் கூடிய சுற்றாடல் கொண்டதுதான் நிலாவரை.
நிழல் பரப்பும் ரம்மியமான சோலை, கால் பதித்தால் நிறமூட்டும்
செம்மண், மண் வளர்த்தை எடுத்துக் காட்டும் பயிர்ச்செய்கைச்
சுற்றாடல், பருகும் போது மீண்டும் பருகத்தூண்டும் நீர் வளம்,
வந்தாரை வரவேற்கும் வீதியோர வர்த்தக நிலையங்கள்,
வற்றாத நீர் நிலையான ஆழ் கிணறு, அத்தனையும் உற்று
நோக்கிய வண்ணம் கோயில் கொண்டிருக்கும் நவசைலேஸ்வரர்
ஆலயம், அத்துடன் யுத்த வடுக்களை தாங்கி நிற்கும் கட்டிட
இடிபாடுகளுடன் கூடிய சுற்றாடல் கொண்டதுதான் நிலாவரை.
எகிப்து மக்கள் சிந்திய ரத்தம் வீணாகிவிட்டதா?
4:51 AM
abimanju
No comments
கடந்த டிசம்பர் 20ம் நாளன்று எகிப்தியத் தலைநகரான கெய்ரோ நகரிலுள்ள சகல தெருக்களிலும் மக்கள், அதிலும் பெருவாரியான பெண்கள் அணிதிரண் டனர். அவர்கள் எகிப்திய ராணுவத்தினர் பெண்களை அடித்து இம்சித்த கொடு மைக்கு எதிராக ஆவேச முழக்கங்களை முழங்கினர். டிசம்பர் 16ம் நாளன்று ராணு வத்தினரின் தாக்குதல் காரணமாக 14பேர் உயிரிழந்தனர். 600க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். ராணுவமானது சில பெண் களின் தலைமுடியை இழுத்தும், அவர் களது உள்ளாடைகளைக் களைந்தும் கோர நடனமாடினர். பல பெண்களை ராணுவ வீரர்கள் பாலியல் கொடுமைகட்கு உட்படுத்தினர்.