கோழி எப்பொழுது முட்டையிடும் என்று காத்திருந்து, முட்டையிட்டதும் உடனே அதனை எடுத்துக் கொண்டு போய் விடுகிறோம். ஆனால் தனது முட்டையோடு உரையாடிக் கொண்டிருக்கும் கோழியின் மனது அப்போது எப்படித் தவிக்கும் என்று நாம் கண்டு கொள்வதில்லை.
ஆமாம் முட்டை வெளிவந்து 48 மணி நேரம் வரை அதனோடு தொடர்பு வைத்திக்கொண்டிருக்கிறது கோழி. பதினொரு வகை ஒலிக்குறிப்புகள் வல்லுனர்களால் பதிவு செய்யப்பட்டு, மேற்படி தகவலை விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருக்கின்றனர்.
தாய்க் கோழி ‘ப்ளாக்’ என்ற பாச ஒலியை எழுப்புவதாகவும், கரு முட்டை ‘பீப்’ என்ற வாஞ்சை ஒலியை பதிலாக எழுப்புவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
48 மணி நேரம்வரை நீடிக்கும் இந்த உறவுப்பரிமாற்றம் பின்னர் நின்று கோழியும் முட்டையும் வேறாகி விடுகின்றன என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
0 comments:
Post a Comment