Monday, January 16, 2012

வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்

ண்ணங்களால் நம் மனதை வசப்படுத்தும் வண்ணத்துப் பூச்சியை நாம் ரசிப்பதுண்டு ஆயினும் அதன் வண்ணங்களின் ரகசியத்தை நாம் அறிவதில்லை.
இந்நிலையில் இவ்வண்ணங்களுக்கு நிறமிகள் அல்ல கலன்களின் அமைப்பே காரணம் என்கிறது ஆய்வுக்குழு.இது குறித்த ஆராய்ச்சியை அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர்.அதற்காக அவர்கள் 05 வகையான வண்ணத்துப் பூச்சிகளை பயன்படுத்தினர்.

அவற்றின் சிறகுகளில் முப்பரிமான உள்ளமைப்பு ஏடுகளை அறிய எக்ஸ் கதிர்களை ஒளி சிதறலுக்கு உட்படுத்தி ஆய்வு செய்தனர்.இந்த ஆய்வில் வண்ணத்துப் பூச்சிகளின் சிறகுகள்கைராய்ட் எனப்படும் மிகச்சிறிய கட்டமைப்பிலானது எனவும்இந்த கைராய்ட்கள் பகெம் போல செயற்பட்டு சூரிய ஒளியை விளிம்பு விளைவுக்கு உட்படுத்துகிறது எனவும் கண்டறிந்துள்ளனர்.இது வரை வண்ணத்துப் பூச்சியின் சிறகுகளை இரு பரிமாண இலத்திரனியல் நுணுக்கு காடடி கொண்டே ஆய்வு செய்த நிலையில் தற்போதைய ஆய்வு சற்று முன்னேற்றம் என்றே கூறலாம்.இந்த கைராட்கள் மின் விசியின் இலை போன்றது.இது நன்கு உறுதியான சிடின் எனும் கட்டமைப்பினால் ஆனது.இந்த கைராய்ட் அமைப்பு பூச்சியின் மேற்பரப்பில் அமைந்துள்ளது.
மேலும் வண்த்துப் பூச்சியில் சிறகில் அமைந்துள்ள கலடின் மென் சவ்வானதுவளர்ந்து கலங்களின் உள்ளே மடித்து வைக்கப்படுகிறது.மடித்து வைக்கப்படும் மென் சவ்வுகளானது இரு கைராட்டுகளை உருவாககுகிறது.இந்த இரு கைராய்ட்டுகளை கண்ணாடி அமைப்புள்ள வலைத்தளமாக மாற்றுகிறது.சிடின் வெளிப்புற கைராய்ட்டில் சேமிக்கப்படுகிறது.இதனால் அது ஒரு திடப்படிகமாக மாறுகிறது.பின்னர் அந்த கலம் இறந்து போவதால் மிக நுண்ணிய ஒளி ஊடுபுகும் தன்மையுடைய படிகம் உருவாகிறது.இந்த படிகம் சூரிய ஒளியின் எல்லா அலை நீளங்களையும் அதனுள் கடத்தி விடுகிறது.கைராட்டுகளின் அளவு நிறத்தை தீர்மானிக்கிறது.
இவ்வாறுதான் பட்டாம் பூச்சிகள் நிறத்தை பெறுகின்றன.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls