
சூரியன் உதிப்பதைப்போல், காற்று வீசுவதைப்போல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் செயல் என்று கம்யூனிசத்தின் மீதான அவதூறுகளைக் கூறலாம். அந்த அளவுக்கு குப்பை வீசியே மறைத்துவிடும் எத்தனத்தில் விதவிதமான புனைவுகளும், பொருளற்ற பொய்களும், பொருந்தா விளக்கங்களும் நாளும் பொழிந்து கொண்டே இருக்கின்றன. இது போன்ற அவதூறுகளுக்கு விளக்கமளிக்க முனைந்தால், வேறு எதையும் செய்யமுடியாத அளவுக்கு கம்யூனிஸ்டுகளின் நேரம் அவர்களுடையதாக இருக்காது. அதேநேரம் அத்தனை அவதூறுகளுக்கும் மறுக்கவியலா முறையில் தகர்ப்புகளும், தரவுகளும் தரப்பட்டிருக்கின்றன. என்றாலும் அவதூறுகளுக்கான தேவை குறைவதே இல்லை. ஏனென்றால் அவதூறுகள் விமர்சனத்திலிருந்தோ, ஆய்விலிருந்தோ கிளைப்பதில்லை. மாறாக கம்யூனிச எதிர்ப்பிலேயே தம்முடைய இருப்பு இருக்கிறது எனும் நிலையிலிருந்து கிளைக்கிறது. அதனாலேயே அவதூறுகள் மீண்டும் மீண்டும், மீண்டும் மீண்டும் கொட்டப்படுகின்றன.