Saturday, December 3, 2011

சிறந்த சுற்றுலா நாடுகளில் இலங்கை 6ஆவது இடம்.

சுற்றுலாப் பயணிகளுக்கு உகந்த நாடுகள் பட்டியலில் இலங்கை 6ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
தேசிய புவியியல் பயணர் சஞ்சிகையின் புதிய கணிப்பீட்டின் படியே இலங்கை 6ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இலங்கையின் மத்திய மலை நாட்டில் உள்ள அழகிய தேயிலைத் தோட்டங்கள், மலைகள் மற்றும் பாரம்பரிய தளங்கள், கடற்கரைகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Friday, December 2, 2011

300வருடங்கள் பழமை வாய்ந்த உல்லாச விடுதி மக்களின் பார்வைக்கு

300வருடங்கள் பழமை வாய்ந்த இங்கிலாந்து மன்னனின் உல்லாச விடுதி மக்கள் பார்வைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் எட்டாவது மன்னனான ஹென்றியே இந்த உல்லாச மாளிகைக்கு சொந்தக்காரர் ஹென்றி மன்னனால் கட்டப்பட்ட இது முன் எப்போதும் காணப்படாத மிக அபூர்வமான கலை அம்சங்களைக் கொண்டதாக காணப்படுவதாக கட்டிடக் கலைஞர்கள் கூறுகின்றனர்.

அன்ரன் பாலசிங்கத்தை ஓரங்கட்ட நினைத்த விடுதலைப் புலிகள்? : விக்கிலீக்ஸ்

விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவ ஆசிரியருமான அன்ரன் பாலசிங்கத்தால் மேற் கொள்ளப்பட்ட சமாதான நகர்வுகள் பற்றி விடுதலைப் புலிகளின் தலைவர்களுக்குள் முரண்பாடுகள் தோன்றியிருந்தன என்று அமைச்சர் மிலிந்த மொறகொட தெரிவித்தார். இவ்வாறு 2002 ஆம் ஆண்டு ஒக்ரோபர் முதலாம் திகதி அப்போதைய அமெரிக்கத் தூதர் அஸ்லிவில்ஸ் அனுப்பியுள்ள கேபிள் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.அச் செய்திக் குறிப்பில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

Thursday, December 1, 2011

மைக்கேல் ஜாக்சனின் மரணம் ஒரு கருண‌ைக்கொலை!; மருத்துவருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை. g

உலகப்புகழ் பெற்ற மைக்கேல் ஜாக்சனின் இறப்பிற்கு காரணமாக இருந்த மருத்துவருக்கு நான்காண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பொப் மியூசிக் மூலம் உலக இளைஞர்கள‌ை தன்வசமாக்கியவர் மைக்கேல் ஜாக்சன். இவரது இசை மற்றும் பாடலுடன் கூடி நடனத்தின் மூலம் இளைஞர்கள‌ை தன்வசமாக்கினார்.இதனிடையே கடந்த 2009ம் ஆண்டு ஜூலை மாதம் தன்னுடைய வீட்டில் திடீரென மரணமடைந்தார். இவரது மரணம் உலகத்தையே உலுக்கியது. ஜாக்சனின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அவரது குடும்ப மருத்துவர் முர்ரே மீது சந்தேகம் இருப்பதாகவும் ஜாக்சனின் குடும்பத்தினர் தெரிவித்து வந்தனர்.

அமேசன் மழைக்காடு எப்படி உருவானது தெரியுமா.........?


உலகின் மிகப் பெரிய மழைக்காடுகள் நிறைந்த பகுதி அமேசான்.நூறு சதவிகித ஓக்சிஜன் கிடைப்பதும் இங்கே தான் .ஆகவே இவ் பதிவில் அமேசன் மழைக்காடுகள் எவ்வாறு உருவானது என்பதை பார்ப்போம்.பூமி பிறந்து சுமார் 450 கோடி ஆண்டுகள் ஆகியிற்று.380கோடி ஆண்டுகள் வரை பூமியில் எந்த உயிரினமும் தோன்றவில்லை.நெருப்புக் குழம்பான பூமி குளிர்ந்து பாறையாகியது.கடல்கள் உருவாகின.அதன் பிறகு உயிர்கள் உருவாகின.ஆனால் அப்போது ஓக்சிஜன் துளிகூட புமியில் இல்லை.
அப்படியென்றால் எப்படி சுவாசிக்க முடியும்?அப்போதுள்ள உயிரினங்கள் ஹைட்ரஜனை மட்டுமே சுவாசித்தன.தாவரங்கள் பூமியில் தோன்றி பிறகுதான் அவை உணவு தயாரிக்கும் போது ஓக்சிஜன் உருவானது. ஓக்சிஜன் உருவாகி சுமார் ஜம்பதுகோடி ஆண்டுகளாகின்றன.

புதன் செவ்வாய் கிரகங்களின் மனிதர்கள் வாழ்ந்தனரா?........

பூமியில் உயிரினங்கள் வாழ்வதைப் போன்று புதன் செவ்வாய் கிரகங்களில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இருக்கிறதா? மனிதர்கள் அங்கு வாழ முடியுமா? போன்ற ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந் நிலையில் பூமியின் அண்டை மண்டலத்தில் வானில் இருந்து விழுந்த நட்சத்திர எரிகற்களைச் சோதனையிட்டதில் அவற்றில் உள்ள பக்டீரியாக்களுடன் பூமியில் வாழும் மனித பக்டீரியா அணுக்களுக்குத் தொடர்பு இருப்பதை நாசா விஞ்ஞானி டாக்டர் ரிச்சர்ட் ஹூப்பர் கண்டுபிடித்துள்ளார்.பூமியில் எப்படி மனித வாழ்க்கை தொடங்கியது என்பதை நட்சத்திர சரிகல் ஆதாரத்துடன் கிடைத்துள்ள பூமியின் அண்டை மண்டல அந்நிய மனித வாழ்க்கை முறை விபரித்துவிடும் என்று ஹூப்பர் தெரிவித்துள்ளார்.

Wednesday, November 30, 2011

அவசரம் {ஈழத்து மண்வாசனை}


காதலிக்கின்றீர்களா ஓடிப்போய் திருமணம் செய்யவேண்டிய நிலை வருமா? பாருங்கள்
இந்திய திரைப்படங்களை பார்த்து பழகிய நம் ஈழத்தவர்களுக்கு தம்மாலும் திரைப்படங்களை தயாரிக்க முடியும் என களத்தில் இறங்கியுள்ளது நம் இளையர்சமுதாயம். தடுமாறிக் கொண்டிருக்கும் இளையர் சமுதாயத்தின் வாழ்ககையை பிரதிபலிப்பதாய் அமைந்திருந்தது. புது முகங்களின் அறிமுகம் ஜதார்த்ததுக்கு முரனாக அமைந்திருந்த போதும் வழமையாக பிரயோகிக்கின்ற மொழிநடையில் இத்திரைப்படம் அமைந்திருந்தது. அவசரத்தில் எடுக்கப்படும் முடிவுகள் எதிர்காலத்தில் தவறாக அமைகின்றமையை எடுத்துக்காட்டுகின்றது.
நன்பர்களுடன் ஊர் சுற்றித்திரியும் இளையர் கூட்டம் பருவக்காய்ச்சலால் பெண்கள் பின் சுற்றித்திரிவதும் பிரச்சினை என்று வந்தவுடன் மச்சான் நாங்க இருக்கோம் நீ பயப்பிடாத என்று பக்கம் நின்று உசுப்பேத்தும் நண்பர் கூட்டம். பார்ப்பதற்கு ஆர்வத்தினை துண்டுகின்றது.  புதுமுககதாநாயகன் சிர்த்தாத் காதல் மன்னனாக வலம் வரும் காட்சிகள் பிரமாதம். கஜதீபனின் அயக்கத்தில்  கன்னித்திரைப்படமாக வெளிவந்துள்ளது.காதல் மயக்கத்தில் அவசரமாக எடுக்க்படும் முடிவுகள் நிம்மதியை சந்தோசங்களை சிரிப்புக்களை காணமுடியாத தோற்றுவிக்க முடியாத நிலைக்கு இட்டுச்செல்லும் என்பதனை எடுத்துக்காட்டுகின்றது. கிளைமாக்ஸ் காட்சிகளை விரிவாக காட்டாவிட்டாலும் சொல்லவரும் விடயங்கள் சிறப்பாக காட்டப்பட்டுள்ளது.

இசை உலகின் ஞானி மொஷாற்


இசை உலகின் ஞானி (musical maestro) என பலநூறு வருடமாக போற்றப்படுபவர் "மொஷாற்" (Mozart).இவர் (Wolfgang Amadeus Mozart ) 1756 ம் வருடம் ஜனவரி 27 ம் திகதி ஒஸ்ரியா நாட்டின் Salzburg எனும் இடத்தில் பிறந்தார்.இவருடைய தந்தையார் லியொபொல்ட் மொஷாற் ( Leopold Mozart) தொழில் வயலின் வாத்தியம் , இசையமைப்பது (composer) என்பதுடன் மொஷாறின் ஒட்டுமொத்த குடும்பமும் இசை பின்னணி கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இயற்கையிலேயே இசை ஞானம் கொண்டிருந்த மொஷாற் தனது 5 வது வயதில் முதலாவது மெலோடியஸ் (melodious) இசை குறிப்பை வெளியிட்டார்.
மொஷாற் தனது முதலாவது சிம்பொனி இசையை 8 வயதாக இருக்கும் வேளை எழுதிமுடித்தார்.தனது இளமை பருவத்திலேயே பல தனித்துவமானதும் மிகவும் பிரபலமானதுமான 600 இசைக்குறிப்புகளை எழுதிமுடித்தார்.

Tuesday, November 29, 2011

கலைகளை வெறுக்கும் தந்தைக்கு எதிரான கலைகளின் மகன் இவன் மைக்கல் அஞ்சலோ (1475 - 1564)

கலைஞர்கள் பலர் காணப்பட்ட போதிலும் ஒரு சிலரே பிரபல்யத்தையும், சிறப்பையும் அடைக்கின்றனர். அச்சிறப்புக்கு அவர்களது தனித்துவமான ஆற்றல்களும் கலை நுட்பங்களுமே காரணமாக அமைகின்றன. அந்த வகையில் ஐரோப்பியக் கலைஞர்கள் கலைத்திறன் மிக்கவர்களாகவும் கலையுணர்வு மிகைத்தவர்களாகவும் காணப்பட்டனர். இவ்வகை கலைஞர்களின் ஒருவரான மறுமலர்ச்சிக்கால ஓவியர் மைக்கலாஞ்சலோ குறிப்பிடத்தக்க வராவார். புகழ் பெற்ற ஓவியர்களின் வாழ்க் கையை ஆராய்ந்தால், அவர் களது தந்தை, தாய், சகோதரர் என யாராவது ஒருவர் கலை துறையில் ஈடுபாடு கொண்டவர்களாகவோ அல்லது ஊக்கமளிக்கின்றவர்களாகவோ காணப்படுவர். ஆனால், கலைத் துறையில் ஈடுபாடில்லாத கலைத்துறையில் வெறுப்புக் கொண்ட ஒரு தந்தைக்கே இவர் மகனாகப் பிறந்தார். 1475 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6 ஆம் திகதி இத்தாலியிலுள்ள புளோரன்ஸ் நகரில் காசல் கப்aல் எனும் இடத்தில் பிறந்தார். இவர் தனது தந்தை கலைஞனாகக் கூடாதென தடை விதித்த போதும் சிறு வயதிலிருந்தே சித்திரம் வரைவதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.

உலகையே அதிர வைக்கும் ஆத்திரேலிய ஊடகவியலாளர் ஜூலியன் பவுல் அசான்ச்


ஜூலியன் பவுல் அசான்ச் (Julian Paul Assange, பிறப்பு: 1971) என்பவர் ஆத்திரேலிய ஊடகவியலாளரும், வெளியீட்டாளரும் ஆவார்.விக்கிலீக்ஸ் இணையத்தளத்தை நிறுவி, அதன் முதன்மை ஆசிரியராகவும் பேச்சாளராகவும் உள்ளார். விக்கிலீக்சைத் தொடங்குவதற்கு முன்னர் இவர் இயற்பியல், கணிதவியல் மாணவராகவும் கணினி நிரலாளராகவும் இருந்தார்.அசான்ச் 20  06 ஆம் ஆண்டில் விக்கிலீக்ஸ் இணையத்தளத்தைத் தொடங்கினார். இவர், ஐக்கிய அமெரிக்காவின் ஆப்கானித்தான், ஈராக் போர்கள் குறித்த பெரும் எண்ணிக்கையிலானா இரகசிய ஆவணங்களைத் தனது இணையத்தளத்தில் கசிய விட்டதை அடுத்து, உலக அளவில் பெரும் கவனிப்புக்குள்ளானார். இவர், பல நாட்டு அரசுகளின் கண்டனத்துக்குள்ளாகியிருந்த அதே வேளையில், உலக அளவில் மனித உரிமை ஆர்வலரிடையே பிரபலம் பெற்றார். பல ஊடக விருதுகளைப் பெற்றுள்ளார்.அசான்ச் பல நாடுகளில் வசித்து வந்துள்ளார்.

இறந்த பின் ஓவியத்தால் தன்னை உலகிட்கு அடையளாம் காட்டியவர்

வின்சென்ட் வான் கோ அல்லது வின்செண்ட் வான்கா (Vincent Van Goh, 30 மார்ச் 1853 - 29 ஜூலை 1890) ஒரு டச்சு பின்-உணர்வுப்பதிவுவாத (Post-Impressionist) ஓவியர். இவரது ஓவியங்கள் சில உலகின் மிகவும் அறியப்பட்டவையும் புகழ் பெற்றவையும் அதிகம் விலையுள்ளவையுமான ஓவியங்களுள் அடங்கும். இவர் முதலில் கலைப் பொருட்களை விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தில் பணி புரிந்தார். பின்னர் சில காலம் ஆசிரியராகப் பணியாற்றிய பின், மிக ஏழ்மையான மக்களைக் கொண்ட சுரங்கப் பகுதியொன்றில் சமயத் தொண்டு செய்தார். அங்குள்ள மக்களை இவர் வரையத் துவங்கினார். இங்கே தான் தனது முதல் முக்கியமான ஓவியமான உருளைக்கிழங்கு உண்போர் எனும் ஓவியத்தை வரைந்தார். மற்ற ஓவியர்களைப் போல் அன்றி தனது முப்பதாம் வயதுக்குப் பின்னரே இவர் ஓவியம் வரையத் துவங்கினார். இவரது பெரும்பாலான ஓவியங்கள் இவரது வாணாளின் கடைசி இரு ஆண்டுகளில் வரையப்பட்டவையே.

மனநோயால் பாதிக்கப்பட்ட வான்கா தனது காது மடலையே அறுத்துக் கொண்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கும் துப்பாக்கியால் நெஞ்சில் சுட்டுத் தற்கொலைக்கு முயன்றார். இரண்டு நாட்கள் கழித்து 1890 ஆம் ஆண்டு சூலை 29 ஆம் நாள் மனநிலை பாதிக்கப்பட்ட வான்கா மரண‌மடைந்தார். அவரது கடைசி வார்த்தை துயரம் என்றும் தொடரும் ‌என்பதாகும்.

மக்கள் ஆட்சி வரலாறு

உலகின் மிகவும் தொன்மையான மக்கள் ஆட்ச்சியைக் கொண்ட நாடக சுவிசர்லாந்து (Switzerland) விளங்குகிறது. இங்கு அரச மொழிகளாக ஜெர்மன் , பிரஞ்ச் , இத்தாலி , ரூமேனிய மொழிகள் நடைமுறையில் உள்ளது. உலகில் நிலத்தினால் சூழப்பட்ட 43 நாடுகளில் சுவிசர்லாந்தும் ஒன்றாகும். பேஃர்ண் ( Berne ) ஐ தலை நகராக கொண்ட சுவிசர்லாந்து மிகப்பெரிய நகராக சூரிஸ் (Zஜrich ) இனை கொண்டுள்ளது. பேஃர்ண் சமஷ்டி அமைப்புகளின் தலைநகராகவுள்ள போதிலும் ஜெர்னிவா (Geneva ) உடன் குறிப்பாக சூரிச் வர்த்த உலகில் அறியப்பட்ட நகரங்களாகவும் உள்ளன. சர்வதேச தொண்டு நிறுவனமான செஞ்சிலுவை சங்கம் (Red Cross), உலக வர்த்தக அமைப்பு (WTO) , சர்வதேச நியம ஸ்தாபனம் (ISO) , ஐக்கியநாட்டுகள் சபை (UN) இன் காரியலயம் ஒன்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது. 

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls