கனடாவில் கடந்த இரண்டு ஆண்டை விட இந்த ஆண்டு வீடு வாங்குவோரின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. இந்த பரபரப்பான சூழலில் சென்ற மாதம் வீட்டின் விலை சற்று குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தகவலை கனடாவின் வீட்டு மனை முகமையின் விற்பனைக்குழு தெரிவித்துள்ளது.
இது பற்றி வீட்டு முகமையின் தலைமைப் பொருளாதார அதிகாரி கிரிகோரி கலும்ப் கூறுகையில், சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு வீட்டின் சராசரி மதிப்பு சற்று சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் இது பற்றி கூறுகையில், நகரப்பகுதியில் வீட்டின் விலை அதிகரித்திருந்தது, ஆனால்(வுழசழவெழ ரூ ஏயnஉழரஎநச'ள) றொராண்டோ மற்றும் வான்கூவர் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட வியாபார போட்டியின் காரணமாக வீட்டு மனையின் விலை இந்தப் பகுதியில் அதிக அளவு குறைய தொடங்கியது.
வீட்டின் விலை வான்கூவரில் சென்ற ஆண்டு தேசிய சராசரி மதிப்பில் உயர்ந்தது போல இந்த ஆண்டு உயர வாய்ப்பில்லை. பிப்ரவரியில் 373000 டொலராக இருந்த வீடு மார்ச்சில் 369677 ஆக குறைந்துள்ளது.
கனடாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகவும் வேகமாக உயர்ந்து வந்த வீட்டின் விலை தற்போது எதிர்பாராத அளவிற்கு குறைந்துள்ளது வீட்டு மனை வியாபாரிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
0 comments:
Post a Comment