Friday, April 20, 2012

சுவிஸ்சில் புலம்பெயர்ந்து வருவோருக்கான புதிய திட்டம்

எட்டு ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் புலம் பெயர்ந்து ஸ்விட்சர்லாந்து வருவதற்கு மீண்டும் ஒதுக்கீடு கொண்டுவரும் அரசின் திட்டம் குறித்து பல பத்திரிகைகள் தங்களின் கருத்துக்களை வெளியிட்டுள்ளன.
ஐரோப்பிய நாடுகளான போலந்து வங்கேரி செக் குடியரசு ஸ்லோவேனியா சுலோவேகியா மற்றும் லித்துவேனியா பால்டிக் நாடுகள் லாத்வியா எஸ்டோனியா போன்றவற்றிலிருந்து 2000பேர் வரை ஸ்விட்சர்லாந்திற்கு புலம்பெயர்ந்து வர புதிய ஒதுக்கீட்டுத் திட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் 12 மாதம் வரை இங்கு தங்கலாம். இந்தத் திட்டம் குறித்து பத்திரிகைகள் தமது விமர்சனத்தை வெளியிட்டுள்ளன. அவற்றில் சில ஆதரவும் சில எதிர்ப்பும் தெரிவித்துள்ளன.

ஐரோப்பிய யூனியனுக்கும் ஸ்விட்சர்லாந்துக்கும் இடையிலான இரு தரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் மக்கள் எவ்விதக் கட்டுப்பாட்டுமின்றி ஐரோப்பாவிற்குப் போய் வர இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மே முதல் நாளிலிருந்து அறிமுகமாகும் இத்திட்டம் மறு ஆய்வுக்கு உட்பத்தப்படும்.

ஸ்விட்சர்லாந்துக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையிலான நல்லுறவு இதனால் மேம்படும் என்றாலும் இத்திட்டத்தினை செம்மையாக நிறைவேற்றுவது குறித்தும் இதன் விளைவுகள் குறித்தும் பல பத்திரிகைகள் தலையங்கம் தீட்டியுள்ளன.


0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls