பாகிஸ்தான் சிறையிலிருந்து தப்பியோடிய 140 கைதிகள் நேற்று சிறைக்கு திரும்பினர். பாகிஸ்தான் பானூர் நகர் சிறையில் கடந்த 15-ம் தேதி தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 384 கைதிகள் தப்பியோடினர். இவர்களில் பயங்ரவாதிகளும் அடங்குவர்.
இந்நிலையில் நேற்று 140-க்கும் மேற்பட்டோர் சிறைக்கு திரும்பினர். இது குறித்த மாகாண உள்துறை செயலர் அசம்கான் கூறுகையில் மொத்தம் 384 பேர் தப்பியோடினர். இவர்களில் 108 பேர் தானாக வந்த சரணடைந்தனர். 35 பேர் கைது செய்யப்பட்டனர். என்றார்.
0 comments:
Post a Comment