சீனா சொந்தம் கொண்டாடும் தென் சீனக் கடல் பகுதியில் அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் ராணுவத்தினர் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இரு நாட்டு ராணுவத்தினரும் ஆண்டுதோறும் இந்த பயிற்சி மேற்கொள்வார்கள். ஆனால் இந்த ஆண்டு இந்த பயிற்சி தென் சீன கடல் பகுதியில் நடைபெறுவதால் முக்கியத்துவம் பெறுகிறது.
அமெரிக்கா தரப்பில் 4500 வீரர்களும் பிலிப்பைன்ஸ் தரப்பில் 2300 வீரர்களும் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி குறித்து பிலிப்பைன்ஸ் நாட்டின் ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில் எந்த நாட்டுக்கு எதிராகவும் பயிற்சியில் ஈடுபடவில்லை. கடல்பகுதியில் பாதுகாப்பு மற்றும் இரு நாட்டு நலன் கருதி ராணுவ பயிற்சியில் ஈடபட்டுள்ளதாக கூறினார்.
0 comments:
Post a Comment