Sunday, April 8, 2012

இன்று பூமியில் விழப் போகும் ரஷ்ய செயற்கைகோள்

இராணுவ தகவல் தொடர்புக்காக ரஷ்யா விண்ணில் செலுத்திய செயற்கைகோள் இன்று பசிபிக் கடல் பகுதியில் விழும் என்று அறிவிக் கப்பட்டுள்ளது.
இராணுவத்தின் பயன்பாட்டுக்காக கடந்த 1996ம் ஆண்டு மோல்னியா189 என்ற செயற்கைகோளை ரஷ்யா விண்ணில் செலுத்தியது.
அதன்பின் இந்த செயற்கைகோளை ரஷ்யா இராணுவத்தின் தகவல் தொடர்புக்கு பயன்படுத்தி வந்தது.
இந்நிலையில் மோல்னியா செயற்கைகோள் செயலிழந்துள்ளதால் அது பூமியில் விழும் என்று ரஷ்ய பாதுகாப்பு துறை செய்தித் தொடர்பாளர் அலெக்ஸி ஜோலோடுகின் நேற்று தெரிவித்தார்.


பூமியில் விழும் போது செயற்கைகோளின் பாகங்கள் நொறுங்கி விடும். எனவே அந்த பாகங்கள் பசிபிக் கடல் பகுதியில் விழும். அதனால் மக்களுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்று ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

1.6 டன் எடை கொண்ட இந்த செயற்கைகோள் தற்போது பூமியில் இருந்து 2378 கிலோ மீட்டர் உயரத்தில் மிதந்து கொண்டிருக்கிறது.

அதை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இன்றைக்குள் அது பசிபிக் கடல் பகுதியில் விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செயலிழந்த மோல்னியா1 செயற்கைகோளுக்கு பதில் 2006ம் ஆண்டு மோல்னியா2 என்ற செயற்கைகோளை இராணுவ பயன்பாட்டுக்காக ரஷ்யா விண்ணில் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls