Sunday, April 8, 2012

பாகிஸ்தானில் பனிச்சரிவில் 150 படையினர் உயிரோடு புதையுண்டனர்!

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் சியாச்சின் பகுதியில் பனிப்பாறை சரிந்து 150 பாகிஸ்தான் படையினர் உயிருடன் புதையுண்டனர். கடல் மட்டத்திலிருந்து 22 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் இப்பகுதியில் இன்று காலை 6 மணியில் கடுமையான பனிப்பாறை சரிவு ஏற்பட்டது. பனிச்சரிவில் பாகிஸ்தானின் ராணுவ முகாம் சிக்கிக்கொண்டது.
இதில் 150 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பனிச்சரிவில் சிக்கி உயிரோடு புதைந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஆனால் பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் 100 ராணுவ வீரர்கள் பனிச் சரிவில் சிக்கிக் கொண்டதாக தெரிவித்திருக்கிறார்.


பனிச்சரிவில் சிக்கிய ராணுவ வீரர்களை மீட்கும் பணியில் பாகிஸ்தான் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கென மீட்பு படை ராணுவம் சியாச்சின் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதாகவும் மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls