Sunday, April 8, 2012

கொலையாளியை பிடிக்க ஆவியின் உதவியை நாடும் பொலிசார்

தமிழக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த மாதம் 29ம் திகதி கடத்திக் கொலை செய்யப்பட்டார்.
அவரை கொலை செய்த கூலிப்படையையும் அவர்களை ஏவிய முக்கிய பிரமுகர்களையும் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
ராமஜெயத்தின் தொழில் எதிரிகள் பணம் கொடுக்கல் வாங்கலில் மோதியவர்கள் தனிப்பட்ட வாழ்க்கை விவகாரம் என பல கோணங்களில் விசாரணை நடந்தது. 500-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியும் சரியான துப்பு கிடைக்கவில்லை.


இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒரு காதல் ஜோடி திருமண விவகாரத்தில் ராமஜெயம் தலையிட்டதால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த அந்த காதல் திருமண ஜோடி இருக்கும் இடம் பற்றி இதுவரை துப்பு துலங்கவில்லை. இதனால் தனிப்படை பொலிசார் சோர்ந்து போய் உள்ளனர்.

ராமஜெயத்தை கொலை செய்த கூலிப்படையை பிடித்து அதன் மூலம் பின்னணியில் உள்ளவர்களை மடக்கலாம் என்ற விசாரணையிலும் ஏமாற்றமே ஏற்பட்டு உள்ளது.

எனவே ராமஜெயத்தை கொன்ற கூலிப்படை கல்லணை வழியாக சென்றது என்பதால் அவர்கள் தஞ்சை நாகை மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என கூறப்பட்டதால் அதன் அடிப்படையில் அந்த மாவட்டத்தை சேர்ந்த ரவுடிகள் யார்-யார்? வெளியில் நடமாடுகிறார்கள் என திருச்சி மத்திய சிறையில் இருந்து பட்டியல் பெற்று விசாரணை நடந்தது.

சிறையில் இருந்த ரவுடிகளிடமும் விசாரணை நடந்தது. ஆனால் அதிலும் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால் தனிப்படை பொலிசார் ஆவி மூலம் ராமஜெயம் கொலையாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

திருச்சியில் புத்தூர் வயலூர் ரோடு பகுதியில் ஆவியை வரவழைத்து கொலை திருட்டில் ஈடுபடுபவர்களை அடையாளம் காட்டுபவர்களை தனிப்படை அணுகி உள்ளது.

ஆங்கில எழுத்துக்கள் யு முதல் ணு வரை மற்றும் 1 முதல் ஜீரோ வரை எண்களை தரையில் எழுதி ஒரு கவிழ்த்திய டம்ளரில் ஆட்காட்டி விரலை வைத்து ஆவியை வரவழைப்பார்கள்.

அப்போது இறந்தவரின் ஆவி ஆட்காட்டி விரல் வைத்து உள்ள டம்ளரை கொலையாளியின் ஆங்கில முதல் எழுத்து எது? என்பதை காட்டும் வகையில் அங்கு நகர்ந்து செல்லும். இதன் மூலம் குற்றவாளி பெயர் என்ன? அவர் எந்த திசையில் உள்ளார் என்பது தெரியவரும்.

கொலையானவர்களையோ அல்லது அவரது குடும்பத்தில் இதற்கு முன் இறந்தவர்களையோ மனதில் நினைத்து 5 நிமிடம் பூஜை செய்து ஆவியை வரவழைப்பார்களாம். அப்போது ஆவி வந்து கொலையாளியின் பெயரை அடையாளம் காட்டும் என்று கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls