Sunday, April 8, 2012

கியூபாவில் முதல் முறையாக புனிதவெள்ளிக்கு விடுமுறை!

கியூபாவில் முதன் முறையாக புனித வெள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. கம்யூனிச நாடான கியூபாவில் கடந்த 59ம் ஆண்டு புரட்சிக்குப் பிறகு பிடல் கேஸ்ட்ரோ அதிபரானார். அது முதல் கொண்டு அந்நாட்டில் மதம் சார்ந்த விழாக்களுக்கான விடுமுறை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 98ம் ஆண்டு போப் ஜான்பால் கியூபா நாட்டுக்கு பயணம் மேற்கொண்ட போது அந்நாட்டு அரசிடம் கிறிஸ்துமசுக்கு விடுமுறை அறிவிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
கியூபாவில் 10 சதவீதம் பேர் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள். எனவே போப் ஜான்பாலின் வேண்டுகோளை ஏற்று கிறிஸ்துமசுக்கு விடுமுறை விடப்பட்டது. இதற்கிடையே போப் பெனிடிக்ட் கடந்த வாரம் கியூபாவில் பயணம் செய்தார். அப்போது அவரை முன்னாள் அதிபர் பிடல் கேஸ்ட்ரோவும் அதிபர் ரவுல் கேஸ்ட்ரோவும் சந்தித்தனர்.


புனித வெள்ளிக்கும் விடுமுறை விடும்படி பெனிடிக்ட் கியூபா அதிபரிடம் கோரியிருந்தார். இதை தொடர்ந்து இந்த ஆண்டு புனித வெள்ளிக்கு முதன் முறையாக விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இதே போல புனித வெள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என்பது பின்னர் முடிவு செய்யப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls