Sunday, April 8, 2012

மலாவி அதிபர் மரணம் - புதிய அதிபராகிறார் பெண்!

மலாவி அதிபர் பிங்கு-வ-முதரிக்கா இறந்ததை அந்த நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக உறுதிப் படுத்தியுள்ளது. புதிய அதிபராக ஜாய்ஸ் பாண்டா பதவி யேற்கவுள்ளார்.தென் கிழக்கு ஆப்ரிக்க நாடான மலாவியின் அதிபர் பிங்கு-வா-முதரிக்காவுக்கு இரண்டு நாட்களுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டது. தென் ஆப்ரிக்காவுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அவர் வழியிலேயே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
புதிய அதிபராக ஜாய்ஸ் பாண்டா பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. துணை அதிபராக இருந்த இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஜனநாயக மக்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் இவருக்கு அதிபர் பதவி கிடைக்காது என தகவல் வெளியாகியது.

இந்த பிரச்னையை சுமுகமாக தீர்க்கும்படி மலாவி அரசுக்கு அமெரிக்கா பிரிட்டன் நாடுகள் அறிவுறுத்தின. இதையடுத்து ஜாய்ஸ் பாண்டா புதிய அதிபராக பதவியேற்கவுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls