Sunday, April 8, 2012

ஏமனில் விமான நிலைய கட்டிடம் குண்டுவீசி தகர்ப்பு

ஏமனில் அதிபராக இருந்த அலி அப்துல்லா சலே பொதுமக்களின் போராட்டத்தை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் பதவி விலகினார். தற்போது காபட்ரப்போ மன்சூர் ஹாடி புதிய அதிபராக பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில் தலைநகர் சனாவில் உள்ள விமான நிலையம் மீது டிரக்குகளில் வந்த சிலர் குண்டு வீசினர். அதில் விமான போக்குவரத்து தகவல் கோபுரமும் கட்டிடங்களும் தகர்ந்தன. இதை தொடர்ந்து அங்கு விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இச்செயலில் முன்னாள் அதிபர் சலேவின் ஆதரவாளர்கள் ஈடுபட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls