Wednesday, March 28, 2012

டோங்கா நாட்டின் 5வது மன்னரின் உடல் அடக்கம்



டோங்கா நாட்டின் 5வது மன்னர் ஜார்ஜ் துபூ மார்ச் 18ம் திகதி காலமானார்.
இதையடுத்து அவரது உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் டோங்கா நாட்டின் அரசபிரதிநிதிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஜார்ஜ் துபூ: இவர் கடந்த 1948ம் ஆண்டு மே 4ம் திகதி பிறந்தார். டோங்கா நாட்டின் இளவரசராக 1966ம் ஆண்டு மே 4ம் திகதி நியமிக்கப்பட்டார்.
2006ம் ஆண்டு செப்ரெம்பர் 11ம் திகதி டோங்கா நாட்டின் மன்னராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
தனது அறிவாற்றலாலும் சீரான செயற்பாட்டாலும் டோங்கா நாட்டிற்கு பல்வேறு நலஉதவிகளை செய்துள்ளார் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls