Sunday, March 25, 2012

சைபீரிய மக்கள் பீதி விண்ணில் இருந்து விழுந்த 200 கிலோ மர்ம பொருள்!

விண்ணில் இருந்து 200 கிலோ எடை கொண்ட மர்ம பொருள் சைபீரியாவில் விழுந்ததால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
சைபீரியாவில் உள்ள ஓட்ராட்நெஸ்கி என்ற கிராமத்தின் அடர்ந்த காட்டு பகுதியில் விண்ணில் இருந்து திடீரென மர்ம பொருள் சமீபத்தில் விழுந்தது. அதை பகுதியில் இருந்த கிராமவாசிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அருகில் சென்று பார்த்தனர். முதலில் அது இறந்த பறவையாக இருக்கலாம் என்று எண்ணினர். ஆனால் பறவை எதுவும் இல்லை என்று தெரிந்ததும் போலீசாருக்கு உடனடியாக தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் யு வடிவத்தில் இருந்த அந்த பொருள் ஏதோ ஒரு சாதனத்தின் உடைந்த பொருள் என்பதை அறிந்தனர். இதுகுறித்து ரஷ்ய ஆராய்ச்சியாளர்களுக்கு தகவல் அளித்தனர். வெள்ளியை போல் பளபளப்பாக உள்ள அந்த மர்ம பொருளை ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில் விண்ணில் இருந்து விழுந்த பொருள் 200 கிலோ எடை உள்ளது. உலோகத்தால் ஆனது. ராக்கெட் ஏவுகணை அல்லது விண் கல்லாக இருக்க வாய்ப்பில்லை என்பது முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. மர்ம பொருள் குறித்த தொடர் ஆய்வு நடைபெறுகிறது என்றனர்.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls