கனடாவில் டொரொண்டோவில் நின்றுகொண்டிருந்த பள்ளிப்பேருந்து மீது மற்றொரு பள்ளிப் பேருந்து மோதியதால் 36 மாணவர்கள் காயமடைந்தனர்.
37 மாணவர்களை ஏற்றி வந்த பள்ளிப்பேருந்து ஒன்று புதன்கிழமை காலை நியூ டெக்யூம்செத் என்ற இடத்தில் தொடர்வண்டி கடக்கும் பகுதியில் நின்றுகொண்டிருந்தது.
அப்போது அதற்குப் பின்னால் வந்த பேருந்து ஒன்று இந்தப் பேருந்து நிறுத்தப்பட்டது தெரியாமல் மோதிவிட்டது. அந்தப் பேருந்தில் 22 மாணவர்கள் இருந்தனர். பேருந்து வேகமாக வந்து மோதியதால் மாணவர்கள் பலர் பலத்த காயமுற்றனர்.
37 மாணவர்களை ஏற்றி வந்த பள்ளிப்பேருந்து ஒன்று புதன்கிழமை காலை நியூ டெக்யூம்செத் என்ற இடத்தில் தொடர்வண்டி கடக்கும் பகுதியில் நின்றுகொண்டிருந்தது.
அப்போது அதற்குப் பின்னால் வந்த பேருந்து ஒன்று இந்தப் பேருந்து நிறுத்தப்பட்டது தெரியாமல் மோதிவிட்டது. அந்தப் பேருந்தில் 22 மாணவர்கள் இருந்தனர். பேருந்து வேகமாக வந்து மோதியதால் மாணவர்கள் பலர் பலத்த காயமுற்றனர்.
15 முதல் 17 வயதுடைய மாணவர்கள் பதினாறு பேர் அந்தப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரு மாணவனுக்கு மட்டும் கழுத்தெலும்பு முறிந்துவிட்டது. மற்றவர்கள் அபாயக் கட்டத்தை கடந்துள்ளனர். பொலிசார் இந்த பேருந்து விபத்துக் குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
0 comments:
Post a Comment