Friday, March 30, 2012

ரஷிய ஏவுகணைகளால் இலங்கை போர் விமானங்களை விடுதலைப்புலிகள் அழித்தனர்: விசாரணையில் தகவல்

இலங்கையில் கடந்த 27 ஆண்டுகளாக தனிஈழம் கேட்டு விடுதலைப்புலிகள் போராடினர். ராணுவத்துடன் கடும் போரிட்டனர். அப்போது ராணுவத்துக்கு சொந்தமான 8 விமானங்களை விடுதலைப்புலிகள் சுட்டு வீழ்த்தி அழித்துள்ளனர். எனினும் விடுதலைப்புலிகளின் தாக்குதலால் விழுந்து நொறுங்கிய பல விமானங்கள் எந்திர கோளாறு காரணமாகவே வீழ்ந்ததாக விமானப்படையினர் கருதினர்.
போர் முடிந்த பின்னர் விடுதலைப்புலிகளின் பதுங்கு குழிகளில் இருந்து மீட்கப்பட்ட ஏவு கணைகளில் இருந்து வெற்று தோட்டாக்கள் கண் டெடுக்கப்பட்டன. அதன் மூலம் தாக்குதல் நடத்தியே விமானங்கள் வீழ்த்தப்பட்டதை ராணுவம் உறுதி செய்தது.
இந்த நிலையில் இலங்கை விமானப்படையினருக்கு சொந்தமான போர் விமானங்கள் ரஷியாவில் இருந்து வாங்கிய ஏவுகணைகள் மூலமே விடுதலைப்புலிகள் அழித்து இருப்பது பயங்கர வாத பிரிவினர் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. இறுதி கட்ட போரின் போது இலங்கை ராணுவத்தின் அத்துமீறல்கள் குறித்த தீர்மானம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்காவால் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதனால் இலங்கை பொருளாதார நெருக்கடி ஏற்பட வாய்ப்பில்லை என அந்நாட்டின் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். மனித உரிமை கவுன்சிலில் பல்வேறு நாடுகளுக்கு எதிராக 91 தீர்மானங்கள் நிறைவேறியுள்ளன. அதில் 39 தீர்மானங்கள் இஸ்ரேலுக்கு எதிரானவை எனினும் இஸ்ரேலுக்கு  எதிராக இதுவரை பொருளாதார தடைகள் விதிக்கப்படவில்லை. எனவே இலங்கை அச்சம் கொள்ள தேவையில்லை என அவர் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls