தலைமன்னார் கடற்கரை ஓரமாக புலிகளின் 2 படகுகளை தாம் கண்டு பிடித்துள்ளதாக இலங்கைக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த இரண்டு படகுகளையும் நேற்றைய தினம்(03) மாலை தாம் கண்டுபிடித்ததாக கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் சிலர் கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே தாம் அங்குசென்று பார்த்தவேளை குறிப்பிட்ட படகுகள் காணப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இவ்வகையான படகுகளை விடுதலைப் புலிகளே பயன்படுத்துவார்கள் எனவும் அதிவேகமாகவும் மற்றும் நீர் மட்டத்தில் இருந்து அதிக உயரம் இல்லாமல் தாழ்ந்து இருக்கும் படகுகளாக அவை காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த இரண்டு படகுகளையும் நேற்றைய தினம்(03) மாலை தாம் கண்டுபிடித்ததாக கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் சிலர் கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே தாம் அங்குசென்று பார்த்தவேளை குறிப்பிட்ட படகுகள் காணப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இவ்வகையான படகுகளை விடுதலைப் புலிகளே பயன்படுத்துவார்கள் எனவும் அதிவேகமாகவும் மற்றும் நீர் மட்டத்தில் இருந்து அதிக உயரம் இல்லாமல் தாழ்ந்து இருக்கும் படகுகளாக அவை காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தாழ்வான படகுகளை புலிகள் பயன்படுத்துவதன் மூலம் ராடர் திரைகளில் இருந்து இப் படகுகள் தப்பித்துவிடுவதாகவும் மேலும் கூறப்படுகிறது. சமீபத்தில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சுமார் 150 புலிகள் வந்துள்ளதாக இலங்கை அரசு கட்டுக்கதை ஒன்றை கிளப்பி விட்டது.
இதனை இந்தியா கடுமையாக ஆட்சேபித்து மறுப்புச் செய்தியும் வெளியிட்டது. தற்போது இக் கூற்றுக்கு வலுச்சேர்க்குமுகமாக இலங்கை அரசு பிறிதொரு கதையையும் கட்டி விட்டுள்ளது. இப் படகுகள் புலிகளுடையதாக இருக்கலாம் ஆனால் அவற்றை இராணுவமே அங்கே கொண்டு சென்று போட்டு விட்டு தற்போது அது கரையொதுங்கியுள்ளதாக கதை கட்டுவதாக மக்கள் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment