அமெரிக்கா கலிபோர்னியாவின் ஆக்லாந்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் 6-வது வகுப்பு மாணவர்கள் அங்குள்ள ஒரு ஏரியை சுத்தப் படுத்தினார்கள். அப்போது குப்பை கூளமாக கிடந்த இடத்தில் ஒரு பை கேட்பாரற்று அனாதையாக கிடந்தது. அதை 11 வயது மாணவி கண்டெடுத்தார்.
பின்னர் மாணவ- மாணவிகள் அந்த பேக்கை திறந்து பார்த்தனர். அதில் 100-க்கும் மேற்பட்ட தங்க நகைகள் வெளிநாட்டு பழங்கால நாணயங்கள் மற்றும் மோதிரங்கள் பிரேஸ்லெட் போன்றவை இருந்தன.
பின்னர் இவை அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. பொதுவாக இந்த ஏரியை சுத்தம் செய்யும்போது செல்போன்கள் துணி வகைகள் மற்றும் டென்னிஸ் பந்துகள்தான் கிடைக்கும். தற்போது தங்க நகைகள் கிடைத்து இருப்பது ஆச்சரியமாக உள்ளது என மாணவர்கள் தெரிவித்தனர்
பின்னர் மாணவ- மாணவிகள் அந்த பேக்கை திறந்து பார்த்தனர். அதில் 100-க்கும் மேற்பட்ட தங்க நகைகள் வெளிநாட்டு பழங்கால நாணயங்கள் மற்றும் மோதிரங்கள் பிரேஸ்லெட் போன்றவை இருந்தன.
0 comments:
Post a Comment