Wednesday, April 4, 2012

சிரியாவில் கலவரம்: 80 பேர் பலி

சிரியாவில் ராணுவத்திற்கும் எதிப்பாளர் களுக்குமிடையே நேற்று ஏற்பட்ட கலவரத்தில் சுமார் 80 பேர் பலியாகியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ஐ.நா- அரபு நாடுகளின் அமைதித் தூதுவரான கோபி அனான் விடுத்துள்ள அறிக்கையில் சிரிய அதிபர் பஷர் அல் ஆசாத் உடனடியாக தனது படைகளை ஏப்ரல் 10 ம் தேதிக்குள் திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் ராணுவ துருப்புகள் எதிர்பாளர்களின் வீடுகளை தீயிட்டும் கொள்ளையிட்டும் வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

யு.என். தகவிலின்படி சுமார் 9000ற்கும் மேற்பட் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் மனதாபிமான அடிப்படையில் தினமும் இரண்டு மணி நேரம் அடிப்படையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls