Friday, April 6, 2012

தென்சீனக்கடல் சீனாவுக்கு சொந்தமானதல்ல! - இந்தியா

தென் சீன கடல் பகுதி உலகிற்கு தான் சொந்தம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா கூறியுள்ளார். தென் சீன கடல் பகுதியில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் துரப்பண பணிகளை மேற்கொள்வது குறித்து கருத்து தெரிவித்த சீனா பணிகளை நிறுத்தி விட்டு தென் சீனக்கடலில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் என எச்சரித்திருந்தது. இல்லாவிட்டால் அதிக விலை கொடுக்க நேரிடும் என எச்சரித்தது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா தென் சீனா கடல் பகுதி உலகிற்கு சொந்தம் என்பதே இந்தியாவின் கருத்து. இந்த பகுதி எந்த நாட்டின் தலையீடு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். இந்த பகுதியில் வர்த்தகம் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கூறினார். மேலும் அவர் இது பற்றி ஆசியான் மாநாட்டிலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls