உலக சாதனை நிகழ்த்துவதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு உயிரிழந்த இளைஞன் ஒருவரின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
கந்தளாய் வான்எல பிரதேசத்தைச் சேர்ந்த சிவில் பாதுகாப்புப் படை உறுப்பினர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சுமார் நான்கு மணித்தியாலம் பூமிக்குக் கீழ் புதைந்திருந்து உலக சாதனை நிகழ்த்துவதற்கு குறித்த இளைஞன் நேற்றையதினம் முயற்சித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
தன்னால் வெட்டப்பட்ட குழிக்குள் குறித்த நபர் இறங்கிய பின்னர் அவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஒத்துழைப்புடன் பலகைகள் வைக்கப்பட்டு மண்ணினால் அந்தக் குழி மூடப்பட்டுள்ளது.கந்தளாய் வான்எல பிரதேசத்தைச் சேர்ந்த சிவில் பாதுகாப்புப் படை உறுப்பினர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சுமார் நான்கு மணித்தியாலம் பூமிக்குக் கீழ் புதைந்திருந்து உலக சாதனை நிகழ்த்துவதற்கு குறித்த இளைஞன் நேற்றையதினம் முயற்சித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
அதனைத் தொடர்ந்து குழிக்கு மேல் தீ மூட்டப்பட்டதுடன் நான்கு மணித்தியாலங்களின் பின்னர் அவரது ஆலோசனைகளுக்கு அமைய அந்தக் குழி திறக்கப்பட்டுள்ளது.
குழி திறக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இளைஞன் மயக்கமுற்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் குறித்த இளைஞன் அயலவரின் ஒத்துழைப்புடன் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
கந்தளாய் - வான்எல - பன்சல கொடேல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதான இளைஞனொருவரே உயிரிழந்துள்ளார்.
0 comments:
Post a Comment