Wednesday, March 7, 2012

கோப்பையை வெல்வது யார்? கடைசி பைனலில் நாளை ஆஸி. ரூ இலங்கை மோதல்!!

3 நாடுகள் கிரிக்கெட் போட்டி முதல் பைனலில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில் நேற்று நடந்த 2வது பைனலில் இலங்கை பதிலடி கொடுத்தது. 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆஸி. மண்ணில் அவர்களுடைய வேகப்பந்து வீச்சுக்கு எதிராக ஜெயவர்த்தனேயும் தில்ஷானும் ஆடிய ஆட்டம் சவுக்கடி கொடுக்கும் வகையில் இருந்தது. இந்த வெற்றியால் தொடர் 1ரூ1 என சமநிலை வகிக்கிறது.
கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி அடிலெய்டில் நாளை காலை 8.50 மணிக்கு நடக்கிறது. ஆஸி. கேப்டன் கிளார்க் காயத்தால் அவதிப்பட்டு வருவதால் நாளை களமிறங்குவது சந்தேகம்தான். அவர் ஆடாத பட்சத்தில் அணிக்குசிறிது பின்னடைவு ஏற்படும். மைதானம் பேட்டிங்கிற்கு கைகொடுப்பதால் டாஸ் வெல்லும் அணி மிகப்பெரிய அளவில் ஸ்கோரை குவித்தால் மட்டுமே வெற்றி பெற வாய்ப்பு கிட்டும். சேசிங்கில் இலங்கை அணி அபாரமாக செயல்படுவதால் நாளைய ஆட்டத்திலும் அனல் பறக்கும். இதுவரை ஆஸி. மண்ணில் நடந்த 3 நாடுகள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி கோப்பையை வென்றதில்லை. இம்முறை இதற்கு வாய்ப்பு கிட்டியுள்ளது

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls