Thursday, March 8, 2012

புகுஷிமா விபத்துக்கு பிறகு அணு உலை பணிகளை மீண்டும் தொடங்குகிறது சீனா!

ஜப்பானில் புகுஷிமா அணு உலை விபத்தை தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அணு உலை கட்டுமான பணிகளை சீனா மீண்டும் தொடங்குகிறது. ஜப்பானில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 9.0 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சுனாமி அலைகள் பொங்கி ஊருக்குள் புகுந்தன. நிலநடுக்கத்தால் புகுஷிமாவில் உள்ள அணுமின் நிலையம் கடுமையாக பாதிப்படைந்தது. 3 அணு உலைகள் சேதம் அடைந்ததால் கதிரியக்கம் வெளியானது.
நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். புகுஷிமா அணு உலை விபத்தை தொடர்ந்து சீனா ஏற்கனவே அறிவித்த 10 அணு உலைகளின் கட்டுமான பணியை நிறுத்தியது. இந்நிலையில் அணு உலை பணிகளை சீனா மீண்டும் தொடங்க உள்ளது. இதற்கான அனுமதி விரைவில் வழங்கப்பட உள்ளதாக தேசிய அணு சக்தி பாதுகாப்பு நிர்வாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls