நகர பகுதிகளில் போதுமான மரங்கள் இல்லாததால் பறவைகள் வசிக்க முடியாமல் தவிக்கின்றன. இதற்காக தண்ணீரில் மிதக்கும் பூங்காக்களை அமைக்க அமெரிக்கா, இங்கிலாந்தில் முடிவு செய்துள்ளனர்.
இந்த பூங்காக்களில் மரங்களும் பறவைகள் வசிப்பதற்கு வசதியாக இயற்கை சூழ்நிலைகளும் ஏற்படுத்தப்படும். நெதர்லாந்தை சேர்ந்த வாட்டர் ஸ்டுடியோ என்ற கட்டிட வடிவமைப்பு நிறுவனம் இந்த மிதக்கும் பூங்கா மாதிரியை வடிவமைத்து உள்ளது.
மேலும் பெரிய நிறுவனங்களிடம் இருந்து நன்கொடைகளை பெற்று பூங்காவை அமைக்க உள்ளனர். முதல் பூங்காவை எதிர்வரும் 2014 -ம் ஆண்டு முடிக்க உள்ளனர். கடல், ஆறு, ஏரி உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளிலும் இதை அமைக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
0 comments:
Post a Comment