அபிவிருத்திப் பாதையை நோக்கி பயனிக்கும் மக்கள் நவீனத்தை வேண்டிநிற்பதால் பண்டைய பொக்கிஷங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன. அப் பொருட்களை மீண்டும் நினைவுக்கு கொண்டுவருபவை புகைப்படங்கள் தாங்க வார்த்தைகளை சொல்ல முடியாத விடயங்களை புகைப்படங்கள் பேசும் செய்திகளையும் மக்களுக்கு கூறுவதாய் அமைகின்றன. கிராம மக்களின் வாழ்வியலை புகைப்படங்களினுடாக பதிவு செய்து கொள்ளமுடியும் கிராம மக்களுக்கு விளிப்புனர்வை ஏற்படுத்த புகைப்படங்கள் உதவுவுகின்றன. கிராமிய பாரம்பரியங்கள் சடங்குகள் சம்பிரதாயங்கள் அழிவடைந்து வருகின்றது. பாரம்பரியமாக ஆடப்பட்டு வந்த கலைகளும் இல்லாமல் போய்விட்டன.
இன்று நாம் மீட்டுப்பார்க்க முடியாத பல கலைவடிங்கள் அழிவிலிருந்து பாதுகாக்க முடியாமல் போனது கவலைக்குரிய விடயமாகும்.ஆயினும் எம் எதிர்கால் சந்ததியினருக்கு நாம் இக் கலைவடிவங்களை ஆவணப்படுத்துவதன் முலம் அழிவிலிந்து பாதுகாத்துக் கொள்ளமுடீயும். கலைகள் இருந்ததிற்கு அடையாளமாக புகைப்படங்களும் வீடியோ தொகுப்புக்களும் அடையாளப்படுத்தும். அன்றுகிராமங்களாய் இருந்தவை நகரங்களாய் மாநகரங்களாய் மாறியுக்கள இன்று அக் கிராமத்தை எம்மால் மீண்டும் உருவாக்க முடியாது புகைப்பட ஆவணம் முலமே மீண்டும் நினைவுக்கு கொண்டுவரமுடியும்.
இலத்திறனியல் தொழில்நுடப யுகத்தில் புகைப்பட கருவிகள் பயன்பாடு அதிகரித்துள்ளது கைத்தொலைபேசிகள் டிஜிரல் கமெரா போன்றவையும் இலகுவாக இன்று பெற்றுக்கொள்ள முடிகின்றது. பதிவுகளை இனையத்தில் இனைப்பதன் முரம் எக்காலத்திற்கும் பயனுள்ளதாய் அமையும்
எத்தனையோ கைத்தொலைபேநிகளில் மறைந்து காணப்படும் புகைப்படங்கள் ககதையை செய்தியை வழங்குவதாய் அமையம். ஆயிரம் வார்த்தைகளால் சொல்லமுடியாத விடயத்தை ஒரு புகைப்பட்ம் சொல்லும். இன்று செய்தியை வாசித்து அறிவதை விட புகைப்படங்களுடாக அறிவதையே மக்கள் விரும்புகின்றனர். புகைப்படங்கள் வெய்தியை கூறுவதாயும் செய்திக்குவ லுச்சேர்ப்பதாயும் அமைகின்றன. இன்று நாம் கானும் சந்தர்ப்பம் நமக்கு நாளை கிடைக்காமல் போகலாம் அவற்றை இன்றே பதிவு செய்யுங்கள்
0 comments:
Post a Comment