கிறிஸ்மஸ் என்றாலே முதலில் கண்ணுக்கு தெரிவது கிறிஸ்மஸ் தாத்தாதான்.யார் இந்த கிறிஸ்மஸ் தாத்தா குழந்தைகளக்கு பிரியமான இவரை சற்று ஆராய்வோம். துருக்கி நாட்டில் மிரா நகரில் 04ம் நுாற்றாண்டில் வாழ்ந்தவர் புனிதநிக்லஸ்
இவர் கிறிஸ்தவ ஆயராவார்.மனித நேயத்தின் சின்னமாக விளங்கிய இவர் ஏழை எளியவர்க்கு உதவுவதையே தன் குறிக்கோளாக கொண்டிருந்தார்.இவர் சிறு வயது முதலே தபத்திலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கினார்.புதன் மற்றும் வெள்ளி கிழமைகளில் மாத்திரம் உணவு உண்டார்.வறுமையின் வீரியத்தையும் மக்கள் படும் துன்பத்தையும் நேரில் கண்ட அனுபவமே இவரை மனித நேயவாதியாக மாற்றியது.


வருடந்தோறும் நினைவுகளின் இடுக்கைகளின் இருந்த இவ்விழா வியாபார வட்டாரத்துக்குள் வந்த பின்னரே கிறிஸ்மஸ் தாத்தா பிரபலமடைந்தார்.எது என்னவோ புனித நிக்லஸ் தொடக்கிய இந்த சேவை முறை இன்றும் அழியாது பேணப்பட்டு வருகின்றமை பேற்றுதற்குரிய விடயமே
0 comments:
Post a Comment