Sunday, January 29, 2012

மனிதருக்கும், நாய்களுக்குமிடையே உள்ள நட்புறவு 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலானது

மனிதனுடன்வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணியான நாய்கள் மிகுந்த நன்றியுள்ள ஜீவனாக நினைப்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆதிகாலத்து மனிதன் வேட்டைக்கு செல்லும் போது நாயை தன்னுடன் அழைத்துச் செல்வான்.மனிதன், நாய்கள் இடையிலான நட்புறவு சில நூறு ஆண்டுகளாக நீடிப்பது அல்ல. இந்த உறவு சுமார் 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இருப்பதாக அரிசோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து அறிவித்து இருக்கிறார்கள்.சைபிரியா மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் கிடைத்த சுமார் 33 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக வாழ்ந்ததாக கருதப்படும் நாய்களின் மண்டை ஓடுகளை தீவிரமாக ஆய்வு செய்து இந்த தகவலை தெரிவித்துள்ளார்கள்.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls