Tuesday, March 13, 2012

சிரியாவில் 47 பெண்கள் மற்றும் குழுந்தைகள் கழுத்து அறுத்துப் படுகொலை!

உள்நாட்டுப் போர் நடந்துவரும் சிரியாவில் 47 பெண்கள் மற்றும் குழுந்தைகள் மர்மமான முறையில் கழுத்து அறுத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சிரியாவில் அதிபர் பஷார் அல்-ஆசாத்துக்கு எதிராக கடந்த 11 மாதங்களாக போராட்டம் நடந்து வருகிறது. அதில் இதுவரை 8 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். எனவே உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர அரபு நாடுகளின் கூட்டமைப்பு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் அரபுநாடுகள் கூட்டமைப்பு மற்றும் ஐ.நா. சபையின் தூதரான கோபி அன்னன் டமாஸ்கஸ் சென்றார். அரசுடனும் போராடும் மக்கள் பிரதிநிதிகளுடனும் சமரச பேச்சு நடத்தினார். ஆனால் அது தோல்வி அடைந்தது. இதற்கிடையே போராட்டம் கடுமையாக நடைபெற்று வரும் ஹோம்ஸ் நகரில் ராணுவத்தின் தாக்குதல் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அங்கு 47 பேர் மர்ம முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஆங்காங்கே பிணமாக கிடந்தனர். இவர்களை தீவிரவாதிகள் கொன்றதாக சிரியா தகவல் தொடர்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆனால் ராணுவத்தினர் கொலை செய்ததாக போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். கொல்லப்பட்டவர்கள் ரத்தம் தோய்ந்த பிணங்களை போஸ்டராக அச்சடித்து ஆங்காங்கே ஒட்டியுள்ளனர். மேலும் ஆன்லைனிலும் வீடியோவாக ஒளிபரப்பி வருகின்றனர்

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls