Wednesday, January 11, 2012

உலகின் 10 துயரமான நேரங்களில் எடுக்கப்பட்ட அதிசிறந்த புகைப்படங்கள்

வியட்நாமில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் அமெரிக்காவையே தலைகுனிய வைத்தது, இதுதான் துயரங்களை வெளிக் கொண்டு வருவதில் புகைப் படங்களின் பங்கை உலகுக்கு உணர்த்திய சம்பவமாகவும் கருதப்பட்டது,
எல்லோருக்கும் ஏதாவது கவலை இருந்து கொண்டு தான் இருக்கும், இழப்புகள் கவலையை இன்னும் அதிகரிக்கும், அந்த இழப்புகள் உலகளாவியரீதியில் நடந்தால் அது உலகம்முழுக்க துயரகீதங்களை விட்டுச்செல்லும், அந்தத் துயரமான நேரங்களில் எடுக்கப்படும் புகைப்படங்கள் உலகை மாற்றிய வரலாறுகளும் உண்டு, அத்தகைய 10 இடங்களில் நடந்த துயரச்சம்பவங்களை வெளிக்கொண்டுவந்த புகைப்படங்களை நாம் இங்கு நோக்கலாம்
10.கொசோவா அகதிகள்
கொசோவாவில் இருந்து உள்நாட்டுக் கலவரங்கள் காரனமாக இடம்பெயர்ந்து சென்ற மக்கள் அந்த நாட்டு எல்லைகளைக் கடக்கும்போது இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டது, ஒரு இரண்டுவயதுச் சிறுவன் முட்கம்பிகளுக்கு உள்ளாக எல்லையை தாண்டிக் கைமாற்றப்படும் இந்தப் புகைப்படம் கொசோவா மக்களின் துயரத்தை உலகுக்கு உணர்த்தியது,
இதனை படம்பிடித்தவர், உலகப் புகழ்பெற்ற புலிச்சர் விருதை வென்ற பெண் புகைப்படவியலாளரான கரோல் குஷி என்பவராவார்
09. அண்டர்பூட் யுத்தம்
இந்தப் புகைப்படம் லெபீரியாவில் நடந்த உள்நாட்டுப்போரின் கொடூரத்தைக் காட்டுகின்றது, அரசாங்கப் படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் நடந்த அந்தச் சண்டையில் தொருமுழுவதும் கொட்டிக்கிடந்த வெற்று ரவைக்கூடுகளை அமெரிக்காவின் மிகச்சிறந்த புகைப்படவியலாளரான கரோலின் கோல் தனது பாணியில் எடுத்திருந்த புகைப்படம்தான் இது…
08.தாய்லாந்துப் படுகொலை
1977 ஆம் ஆண்டிற்கான புலிட்சர் விருதை வெண்ற புகைப்படம் இது, தாய்லாந்துநாட்டின் சர்வாகிகாரி F. M. T. கிற்ரிக்கச்சோர்ன் இன் அடாவடிகளை எதிர்க்கும் மக்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் அவரை எதிர்த்த டனாமாஸ்ட் பல்கலைக்கழக மானவன் படுகொலை செய்யப்படும் காட்சியை வெளிக்கொண்டுவந்த இந்தப் புகைப்படம் உலகம் முழுவது அதிர்ச்சிப் பேரலைகளைக் கிளப்பியது, இதனை எடுத்து உலகுக்கு கொடுத்தவர் நீல் உலீவிச் ஆவார்
07.புயலின் பின்னரான ஹெயிட்டி
2008 இல் ஹெயிட்டியில் வீசிய பெரும்புயலை அடுத்து அங்கு பெருத்த சேதங்கள் உண்டாகின இதனை புகைப்படவியளாளர் மியாமி ஹெரால்ட் என்பவர் தனது கறுப்பு வெள்ளைப் புகைப்படங்கள் மூலம் உலக்குக்கு வெளிக்கொண்டுவந்தார்,அதில் ஒரு புகைப்படம்தான் இது,
06.இஸ்ரேலிய காவல்த்துறையை எதிர்க்கும் பெண்
இஸ்ரேலில் தங்கள் இருப்பிடங்களை அப்புறப்படுத்த வந்த காவல்த்துறை அதிகாரிகளை எதிர்க்கும் ஒரு பென்ணின் புகைப்படம்தான் இது, இதன் பின்னர் அந்தப் பெண் போலீசாரால் கடுமையாகத் தாக்கப்பட்டார் என செய்திகள் கூறுகின்றன,இதனை படம்பிடித்தவர் ஒடேட் பலில்டி எனும் புகைப்படவியலாளராவார், இவரது இந்தப் புகைப்படம் இஸ்ரேல் அரசுக்கு பெருத்த அவமானத்தைப் பெற்றுக்கொடுத்தது…
05.செப்டெம்பர் 11
இதைப்பற்றி அறியாதவர்களே இருக்கமுடியாது, அமெரிக்காவின் பெருமையாக நிமிர்ந்து நின்ற இரட்டைக் கோபுரங்களை ஒரே நாளில் சரிந்து கொட்டச்செய்த சம்பவம்தான் இது, இதனைப் படம்பிடித்தவர் ஸ்டீவ் லட்லும் என்பவராவார்…
04.சுனாமி
இது 2004 இல் இந்தோநேசியாவில் உருவாகி ஆசியாவையே ஒருகை பார்த்த சுனாமியின் போது இந்தியாவில் எடுக்கப்பட்டம் புகைப்படம், ஒரு தாய் கடல்த்தாயிடம் தன் மழலை எங்கே எனக் கதறும் செஞ்சை நெருடும் காட்சி,இது இந்தியப் புகைப்படவியலாளர் அக்ரோ தத்தாவினால் படம்பிடிக்கப்பட்டது
03.போபால் விசவாயுக் கசிவு

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls