Friday, December 30, 2011

குளிர் நிலவில் ஊட்டிப்பயணம்

மாற்றங்களை உணரவும் பழகிக்கொள்ளவும் தெரிந்தவர்கள் மனிதர்கள். கால மாற்றத்திற்கு ஏற்ப பச்சோந்தியாய் மாறத் தெரிந்தவர்கள். அப்படி பச்சோந்தியாய் மாறப் பழகிக் கொள்ளும் புதிய அனுபவம்.
கொட்டும் மழையிலும் கடும் குளிரிலும் வாழ இசைவாக்கிக் கொண்டோம் மக்களின் வாழ்வதற்கு ஏற்ற காலநிலைப்பிரதேசத்தில் வாழ்ந்த நாம் இந்தியாவின் குளிர் நிறைந்த பிரதேசமான நீலகிரி மாவட்டம் ஊட்டிப்பகுதிக்கு சென்றோம். மலை உச்சி நோக்கி எமது பயனம் அமைந்திருந்தது. வளைந்து நெளியும் பாதை நடுவே பயனித்தோம். குளிர் காற்று எங்களை மெதுவாக வருடியது. பேரூந்து ஜன்னல் கதவுகள் அடைக்கப்பட்டன மூடி அடைக்கப்பட்ட பேரூந்தில் நம் பயனம் இருந்தது. காற்றிற்கு ஏது வேலி என்பது போல குளிர் காற்று மீண்டும் எங்களை வருடியது

குளிரில் நாம் ஊட்டி மக்களை சந்திக்க சென்றோம் பேரூந்தில் இருந்து கீழ் இறங்கிய போது குளிரின் வலுpமையை உணர்ந்து கொண்டோம் நரம்புகளை கட்டிப்போட்டது குளிர். இந்த கொடூர குளிரிலும் மக்கள் வாழ்கின்றார்களே என எண்ணத்தோன்றியது குளிர் பிரதேசத்தில் வாழ்பவர்கள் குளிரை தாங்கிக் கொண்டு அதனை கட்டுப்படுத்துவதற்று ஆடைகளை அணிந்திருநு;தனர்
குளிர் பிரதேசத்திற்கு ஏற்ற எந்த வித ஆயர்த்தமும் இன்றி வெப்பத்தினை தாங்கும் ஆடையினை அணிந்திருந்தோம். குளிரை கட்டுப்படுத்த முடியாத இக்கட்டான நிலை குளிர் ஆடை தேடி ஓடியது எம் கால்கள். குளிர் பின்னர் எம்மோடு இணைந்து கொண்டது.
சுhதாரணமாக நிலையை உணர்ந்தோம் பின்னர் ஊட்டி மலைப்பகுதியில் வாழும் தோட்டாஸ் என்ற இன மக்களை சந்திக்க சென்றோம்.பெண்கள் ஆலயத்திற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அங்கு ஒரு கல் வைக்கப்பட்டுள்ளது அதை தாண்டி அவர்கள் செல்ல முடியாது அனுமதி மறுக்கப்பட்ட பெண்களை நினைக்கும் போது கவலையாக இருந்தது கொட்டும் மழையிலும் குளிர் நிலவிலும் கால் நடையாக இருந்தது எம் பயணம்.
மலையில் ஏறுவதும் இரண்டு அடி சறுக்குவதமாய் நிலையற்ற நடைப்பயனம் அமைந்திருந்தது. காடகளின் நடுவே ஆடியபடி கம்பீரமாய் நடந்தோம். நெடு தூரப்பயனத்தின் பின்னர் ஜந்து சிறிய வீடுகளுடன் கூடிய கிராமம் தீபாவளிப்பட்டசுள் வானைப்பிழந்தன ஓரு சில மனித நடமாட்டம் மட்டுமே நிலவியது. வீடுகளுக்குள் அடைந்திருந்த பெண் மனிகள் வெளியே வந்தனர் சிறிது நேரம் உரையாடிய பின்னர் காட்டுவழி ஊடாக குளிர் நிலவின் துணையுடன் கால்நடையாக பேரூந்து நோக்கிப்பயணித்தோம்.
குளிரில் உறைந்த பட்டாம் பூச்சிகள் மெதுவாக கண்களை மூடி உறக்கின அன்றைய நாள் அனுபவத்தோடு

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls