Sunday, March 25, 2012

சீனாவில் பல ஆண்டு பழமை வாய்ந்த மம்மி கண்டுபிடிப்​பு

130 வருடங்கள் பழமை வாய்ந்த மம்மி ஒன்று சீனாவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அகழ்வாராய்ச்சி ஒன்றில் ஈடுபட்டிருந்த சிலர் நிலத்தை தோண்டும் போது இந்த மம்மி கிடைத்துள்ளது.
பெண் ஒருவரின் தோற்றத்தில் காணப்படும் இந்த மம்மியின் உடலில் தோல் காணப்படுவதுடன் பற்களும் பெருமளவில் சிதைவடையாமல் காணப்படுகின்றது.
பியூயியான் மாநிலத்திலுள்ள நின்ங்டே எனும் இடத்தில் காணப்பட்ட இந்த மம்மிக்கு அருகில் கல்வெட்டு ஒன்றும் காணப்பட்டுள்ளது. அதில் கடந்த 1882ம் ஆண்டு இந்த மம்மி புதைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

தங்கத்தின் விலையை முந்திய சீனத் தேயிலை!

சீனாவில் விளையும் ‌தேயிலை வகைகளில் முக்‌கியமானதாகக் கருதப்படும் லோங்ஜிங் அல்லது ட்ரகன் வெல் தேயிலையின் ஒரு கிலோப விலை ரூபாய் 57024 டொலராக நிர்ணயிக்‌‌கப் பட்டுள்ளது. இது தற்போதைய தங்கத்தின் கிலோ5 ஒன்றிற்கான விலையை விட அதிகமாகும். தங்கம் ஒரு கிலோவின் தற்பாதைய விலை 53000 டொலர் மட்டும் தான். ஆனால் சீனத் தேயிலையின் விலையே அதைவிட சுமார் 4000 டொலர் அதிகம்.

உலக வியாபாரிகளால் அதிகமாக விரும்பி வாங்கப்படும் தேயிலை வகைகளில் இது முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த வகை தேயிலை சீனாவின் பாரம்பரிய திருவிழாவான கிங்மிங் விழா கொண்டாடப்படும் மாதமான ஏப்ரல் மாதத்தில் அறு‌வடை செய்யப்படு்கிறது. ஸேஜியாங் மாகாணத்தி்ல் உள்ள ஹாங்க்ஜோவ் பகுதியில் விளைவி்க்கப்படுகிறது.

ஒபாமாவின் உரையைக் குழப்பிய நபர்!

அமெரிக்காவின் ஒஹயோ மாகாணத்தின் கொலம்பஸ் நகரில் நடந்த கூட்டத்தில் அதிபர் பராக் ஒபாமா பேசியபோது கையில் புத்தகம் வைத்திருந்த ஒருவர் அடிக்கடி உரத்து கூச்சலிட்டுக் கொண்டே இருந்தார். இந்தப் புத்தகத்தைப் படியுங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த ஒபாமா தன்னுடைய பேச்சை நிறுத்திவிட்டு குறுக்கிட்ட நபரைப் பார்த்துப் பேசினார்.
"ஐயா நான் இங்கே இவர்களிடம் பேசுவதற்காக வந்திருக்கிறேன்; நீங்கள் வேண்டுமானால் தனியாகக் கூட்டம் போட்டு இவர்களை அழைத்துப் பேசுங்கள். ஏன் இவ்வளவு முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறீர்கள்?" என்று கேட்டார்.

அமெரிக்க மேலாதிக்கத்திற்கு சவால் விடுத்த ஜனநாயகம்!

சர்வதேச ரீதியாக தான் மட்டுமே ஹீரோவாக இருக்க நினைக்கும் அமெரிக்கா புலிகளின் அழிப்பின் பின்னர் இலங்கை அரசு மீது கொலை வெறியாகவே இருந்துள்ளது!
இலங்கைக்கு எதிராக போர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுப் பிரேரணையை ஜெனீவாவில் முன்வைத்த அமெரிக்கா அதில் எதிர்பார்த்த வெற் றியைப் பெற முடியாது முதற் தடவையாக சர்வதேச அரங்கில் பாரிய தலைகுனி வைக் கண்டுள்ளது. உலக நாடுகளுக்கெல்லாம் தானே தலைவன் என்றும் எந்த நாட்டில் எது நடந்தாலும் அதனைக் கண்காணிப்பது மட்டுமல்லாது கட்டுப்படுத்தும் உரிமையும் தனக்குள்ளதாக மார்தட்டி வந்த அமெரிக்கா இலங்கை விவகாரத்தில் தோல்வியைச் சந்தித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் இலங்கைத் தூதரகங்களை மூடுகிறது அரசாங்கம்? - வாரஇதழ் தகவல்!!

ஐரோப்பிய நாடுகளில் செயற்படும் சில இலங்கைத் தூதரகங்களை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரபல வாராந்த பத்திரிகையொன்று செய்திவெளியிட்டுள்ளது.
ஜெனீவா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரினை அடுத்து வெளிநாட்டு சேவைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையுடனான இராஜதந்திர உறவுகளை உரிய முறையில் முன்னெடுக்காத நாடுகளிலுள்ள தூதரகங்களை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.நா. தீர்மானம் எதிரொலி அமெரிக்க பொருட்களுக்கு இலங்கையில் எதிர்ப்பு!

இலங்கை::ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த மனித உரிமை மீறல் தீர்மானம் நிறைவேறியதால் இலங்கை கடும் கோபத்தில் உள்ளது. இதனால் அமெரிக்க பொருட்களை புறக்கணிக்கும்படி இலங்கை அரசியல் தலைவர்கள் கூறியுள்ளனர்.
இலங்கையில் புலிகளுடன் உச்ச கட்ட போர் நடந்த போது மனித உரிமைகள் குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி ஐ.நா.வில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானம் கடந்த 22ம் தேதி நிறைவேறியது. இதையடுத்து அமெரிக்காவுக்கு எதிராக கொழும்பு உள்பட பல இடங்களில் போராட்டங்கள் நடந்தன. கொழும்பு ரயில் நிலையத்தில் நேற்று நடந்த போராட்டத்தின் போது கோதுமை மாவு கோக கோலா பெப்சி போன்ற எந்த அமெரிக்க பொருளையும் பயன்படுத்த வேண்டாம்.

இலங்கையின் கொலைக்களங்கள் - கிராமம் கிராமமாக நாம் தமிழர் கட்சியினர் தொலைக்காட்சி மூலம் திரையிடல்!

இலங்கையின் கொலைக்களங்கள் - கிராமம் கிராமமாக  நாம் தமிழர் கட்சியினர் தொலைக்காட்சி மூலம் திரையிடல்:-
 சேனல் 4 வெளியிட்ட போர்க்குற்ற
கொலைக்களங்கள் என்ற ஆவணப்படம் கிராமங்கள் தோறும் பல்வேறு அமைப்புகள் திரையிட்டுவருகின்றன.
நாம் தமிழர் கட்சியினர் கிராமங்களில் தொலைக்காட்சி மூலம் திரையிட்ட காட்சிகள்... 

சைபீரிய மக்கள் பீதி விண்ணில் இருந்து விழுந்த 200 கிலோ மர்ம பொருள்!

விண்ணில் இருந்து 200 கிலோ எடை கொண்ட மர்ம பொருள் சைபீரியாவில் விழுந்ததால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
சைபீரியாவில் உள்ள ஓட்ராட்நெஸ்கி என்ற கிராமத்தின் அடர்ந்த காட்டு பகுதியில் விண்ணில் இருந்து திடீரென மர்ம பொருள் சமீபத்தில் விழுந்தது. அதை பகுதியில் இருந்த கிராமவாசிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அருகில் சென்று பார்த்தனர். முதலில் அது இறந்த பறவையாக இருக்கலாம் என்று எண்ணினர். ஆனால் பறவை எதுவும் இல்லை என்று தெரிந்ததும் போலீசாருக்கு உடனடியாக தகவல் அளித்தனர்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls